<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8065615</id><updated>2011-08-01T07:47:25.335-07:00</updated><category term='TNY2008'/><title type='text'>தனி வளை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thanivalai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-6173321116041745494</id><published>2010-01-03T12:03:00.000-08:00</published><updated>2010-01-03T12:20:28.758-08:00</updated><title type='text'>நன்றி- தேடு ஜாப்ஸ்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1. Set a right example and be a Leader (Not a Manager)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Always remember that anything and everything what you do is being watched and imitated by your team members.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;MBA விலோ அல்லது ஏதோ ஒரு Workshop லோ ஒக்காந்து நல்ல மேனேஜரா இருப்பது எப்படின்னு கத்துக்க முடியாது. நீங்க நல்ல மேனேஜரா இருக்கணும்னா ஒங்களுக்கு ஒரு நல்ல மேனேஜர் அமையணும். அவர் செய்யுறதை காப்பி அடிச்சு அதில் உங்களது ஸ்டைலை சேர்த்தால் நல்ல மேனேஜராக ஆகலாம். அதேபோல, உஙகள் டீமில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் உங்களை ரோல் மாடலாக பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்க படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன், எனக்கு&lt;/div&gt;&lt;div&gt;சரியான நேரத்தில் அரவிந்த் என்று ஒரு மிகச்சிறந்த மேனேஜர் அமைந்தார். நான் இன்றைக்கும் Tips தேவைப்படும் போது அணுகுவது அவரைத்தான். ஒரு மேனேஜர் எப்படி இருக்கணும்னு அவரிடமிருந்தும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அதற்கு முன் வேலை செய்த மேனேஜரிடமிருந்தும் கத்துக்கிட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாரும் நேரத்துக்கு ஆபிசுக்கு வரணும்னு நெனச்சா, மொதல்ல நீங்க நேரத்துக்கு ஆபிசுக்கு போகணும். இந்த ரூல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2. Call them Colleagues :&lt;/div&gt;&lt;div&gt;அரவிந்திடமிருந்து நான் கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;I hate the word Subordinate.Team Mate அல்லது Colleague என்று அறிமுகப் படுத்துங்கள். யாரையும் இவர் எனக்கு கீழே வேலை செய்கிறார் என்று சொல்லாதீர்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Be a part of the team as a Leader and don't Boss around. Team Mates அனைவரையும் உங்களை பேர் சொல்லி அழைக்க வற்புறுத்துங்கள். Sir என்று அழைப்பதை தடை செய்யுங்கள். என்னுடைய டீம் மேட்ஸ் என்னை விளித்தது "Hi Sri" என்றுதான். This goes a long way in creating a bondage...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3. Don't give them fish to eat, Teach them how to Fish:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மறுபடியும் அரவிந்த் புராணம். நான் அவரிடம் ஒரு Problem கொண்டு சென்றால் அவர் எப்போதும் சொல்வது - ஸ்ரீராம், Problem இருக்குன்னு மட்டும் சொல்லாதே, அதுக்கு மூணு solution யோசித்துக் கொண்டு வா, அதில் எது சிறந்தது என்று சொல்கிறேன். அப்போல்லாம் எனக்கு பத்திக்கிட்டு வரும், யோவ் எனக்கு மூணு Solution தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வர்றேன்னு கத்தத் தோணும். I realized lot later that he was preparing me to live on my own and not be a Parasite.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Teach them how to fish, if you keep feeding them, they will die of hunger after you...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4. Don't shock them into changes:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாற்றம் ஒன்றே நிலையானது, ஆனால் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. When facing change, Communicate as early in the process as possible. Remember that your team mates are a few steps behind you in the acceptance cycle. Give them a reasonable &lt;/div&gt;&lt;div&gt;amount of time to adjust.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. Resistance to change ஒருவருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; பாரபட்சம் காட்டாதீர்கள் :&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த &lt;/div&gt;&lt;div&gt;மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4. Exit Interview : &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview &lt;/div&gt;&lt;div&gt;நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென &lt;/div&gt;&lt;div&gt;சொல்லுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-6173321116041745494?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://tedujobs.blogspot.com/2009/10/blog-post_15.html' title='நன்றி- தேடு ஜாப்ஸ்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/6173321116041745494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/6173321116041745494'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2010/01/blog-post.html' title='நன்றி- தேடு ஜாப்ஸ்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-8809439309029445901</id><published>2008-05-04T17:50:00.000-07:00</published><updated>2008-05-04T18:23:59.484-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TNY2008'/><title type='text'>மன்ற விழா - 2008</title><content type='html'>அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;a href="http://www.sactamil.org/"&gt;சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் &lt;/a&gt;என்கின்ற இந்த தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் இந்த வருடத்தைய தலைவராக இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எங்கள் குழுவினரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூர்த்தி - எங்கள் அனைவருக்கும் மூத்தவர் - வயதிலும் குணத்திலும், குறும்பிலும். போன வருடத்தின் தமிழ்தலைவராக இருந்தவர். கடந்த பலவாரங்களாக இவரை எங்கு பார்த்தாலும் டிக்கெட்டும் கையுமாகத் தான் பர்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் பையனும், மனைவியும் வேறு ஏதாவது கேட்டால் கூட உடனே டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறாராம். தமிழார்வம் உள்ள இந்த தஞ்சாவூர்க்காரர் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஏராளமானவர்க்கு உதவுக் கொண்டிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீதா - இவர் எங்கள் செயலாளர். வீடு, அலுவலகம், தமிழ்மனறம் என்று எல்லா இடத்திலும் சுற்றிக் கொண்டு எல்லா இடத்திலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் ஒரு கலக்கல் பெண்மணி. இவரை நாங்கள் கேள்வியின் நாயகி என்போம் - இவர் கேள்விகள் உருவாக்குகிற புயல்கள் கடைசியில் நன்மையிலேயே முடியும்- நாரதர் கலகம் மாதிரி. தூங்கி வழிபவரை உட்காரச் சொல்வார். உட்கார்கிறவரை எழ்ச் சொல்வார். பிறகு நடக்கச் சொல்லவும், பிறகு ஓடவும் சொல்வார். மொத்தத்தில் தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூபன் - எங்கள் பொருளாளர். குழுவின் குறுமுனி. கொஞ்சம் பேசாமுனியும் கூட. காரியம் கச்சிதம். ரஜினி மாதிரி டிக்கெட் விறபனையில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர். இந்த விழாவின் நாயகர், நாற்காலிக் காரர் - சேர் பர்சன். கடுமையான உழைப்பாளி. மொத்தத்தில் சைலண்ட் பாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்ரியா - இஅவருக்கு அறிமுகம் கொடுப்பது திருப்பதிக்கு லட்டு கொடுப்பது மாதிரி. பல வருடங்களாக மன்ற அங்கத்தினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்நது தோள் கொடுக்கும் குடும்பம். எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு நடன நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து பின்னி பெடலெடுக்கப் போகிறார். ஸ்பான்ஸர்கள் விழயத்தில் வசூல் சக்கரவர்த்தினி - இவர் சேவையில் இந்த வருடம் நிகழ்ச்சி ஜொலி ஜொலிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;சரவணன் - எல்லோருக்கும் நண்பர். இனியவர். பண்பாளர். இன்னொரு தூத்துகுடி எக்ஸ்பிரஸ். செயல் வேகம் பிரமிக்க வைக்கிறது. இந்த வருடம் எங்களுல் ஒருவரானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;குணா - இன்னமும் அபிராமி கிடைக்காத குணா. கடைக்குட்டி. ஆனால் படுசுட்டி. இவரும் இவ்வருடம் உள்ளே வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.. மக்களே... எனக்கு இன்னமும் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. என் உரையை தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இவ்வளவு ஆர்வம் எடுத்து இங்கு வந்திருக்கும் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முக்கியமாக குழந்தைகளௌக்கும் அவர்களுடன் கடந்த பல வாரங்களாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நிகழ்ச்சி தயார்ப்பாளர்களுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் நடந்து வரும் நிகழ்ச்சியில் ஆங்காங்ககே காணப்படும் குறைபாடுகளை களைந்து ஒவ்வொரு வருடம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காண முயற்சி செய்து வருகிறோம். எப்போதும் மல்டி பர்ப்பஸ் ரூமில் நடக்கும் தமிழ் புத்தாண்டு விழா இவ்வாண்டு உள்ளரங்கம் - தியேட்டரில் நடக்கிறது. உள்ளே தின்பண்டங்கள் மற்றும் குளிபானங்களை கொண்டு வராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளை கூடிய மட்டும் அமரச் செய்யுங்கள். அப்போதுதான் எல்லோரும் நிகழ்ச்சிகளை நல்ல விதத்தில் கண்டு களிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு இடைவேளையில் வழங்கப்படும். எனவே நேரமாகி பசி பின்னிவிடுமோ என்று கவலைப் படாமல் உற்சாகமாக பாருங்கள். உணவு இடைவேளையில் வயிற்றுக்கு உணவோடு செவிக்கும் உணவு உண்டு. யார் வேண்டுமானாலும் உணவு அறையில் பாடலாம். விருப்பம் உள்ளவர்கள் திரு. மூர்த்தியை அணுகி உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். உணவு இடைவேளைக்குப் பிறகுதான் பேரியவர்களின் நிகழ்ச்சிகள். எனவே விரைவில் உணவருந்தி விட்டு திரும்புங்கள். அமைதியாக இருந்து விழாவை நல்ல முறையில் நடத்த எங்களுக்கு உதவுங்கள். விழா நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் உரிய நேரத்திற்கு முன்னதாக மேடைக்கு பின்புறம் வந்து விடவும். காலம் இன்று பொன் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழா பற்றிய உங்கள் எண்ணங்களை &lt;a href="mailto:feedback@sactamil.org"&gt;feedback@sactamil.org&lt;/a&gt; என்ற மின் முகவரிக்கு அனுப்பவும். வையக விரிவு வலயில் எங்கள் முகவரி www. sactamil.org. என் உரை முடிந்ததும் நிக்ழ்ச்சி நடத்துனர் ராதாரவி மேடைக்கு வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உரையை முடிக்கும் முன் ஒரு வேண்டுகோள். ஜனவரி மாதம் மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா ரங்கராஜனுக்கு அறிமுகம் தேவையில்லை. என்னைப் போல எண்ணற்றவர்களை தமிழ் இலக்கியத்தின்பால் இட்டுச் சென்ற சமகால மேதை. இலக்கியம், விஞஞானம், நாடகம், திரைத்துறை, இதழியல் என்று பன்முகம் கொண்ட படைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தயவு செய்து எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிகள் மற்றும் வணக்கங்கள்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-8809439309029445901?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/8809439309029445901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/8809439309029445901'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2008/05/2008.html' title='மன்ற விழா - 2008'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-7242550988694960593</id><published>2008-05-04T11:58:00.000-07:00</published><updated>2008-05-04T12:01:02.405-07:00</updated><title type='text'>சுஜாதா - ஒரு சமபாஷணை</title><content type='html'>சின்னி இறந்திருந்தாள்’ன்னு உங்களோட ஏதோ ஒரு தொடர்கதையோட கடைசி வரிபடிச்சு அழுதது மட்டும் தான் நினைவிருக்கு. அந்தக் கதை நினைவில்லை. வீட்டுல திட்டு, அதோட கதை புஸ்தகமெல்லாம் கட். பொதுவாவே கதை புஸ்தகம் படிச்சா படிப்பு கெட்டுப் போயிடுங்கற ‘ஆசாரமான’ குடும்பம். இதுக்கப்பறம் அக்கம்பக்கம் வாங்கிப் படிக்கக் கூட தடை. அப்படியும் விடலை. ரெண்டுவீடு தள்ளி ஒருத்தங்க வீட்டுக்கு சாயங்காலமா குழந்தையைக் கொஞ்சற மாதிரி போய் விகடன், குமுதம், கல்கின்னு உங்களோட எழுத்தை மட்டும் டக்னு திறந்து படிச்சுட்டு (இதுக்கு லஞ்சமா குழந்தையை தூளில ஆட்டிகிட்டே படிக்கணும். ஆனா அது எப்பவும் பிடிச்ச வேலைதானே. அதனால டபிள் பெனிஃபிட் ஸ்கீம்ல சந்தோஷமா செய்வேன். வெளிலேருந்து எங்கம்மா குரல்கொடுத்தா, ‘அவ தூளி ஆட்டிகிட்டிருக்கா, குழந்தை தூங்கற நேரமில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ன்னு பாப்பாவோட அம்மா பதில் சொல்லிடுவாங்க. அதெல்லாம் படிக்கற பத்து நிமிஷம் மட்டும் தான். படிச்சு முடிச்சதும் குழந்தையோட அம்மா அலற அலற பாதி தூக்கக் கலக்கத்துல இருக்கற குழந்தையை அப்படியே அள்ளிகிட்டு, ஓடீடுவேன் எங்கவீட்டுக்கு.&lt;br /&gt;படிக்கறது ஒரு சுகம்னா அதைவிட பதின்மவயசுல(இப்பவும் தான்) அதகளமான கூட்டத்துல அதைப் பேசிகிட்டே இருக்கறது அதைவிட சுகம். அப்படித்தான் எனக்கு RSV வாத்தியாரோட ட்யூஷன் பிடிக்க ஆரம்பிச்சது. எங்க வீடு மாதிரி புத்தகங்களுக்குத் தடை எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல இல்லை. அவங்கல்லாம் காலைலயே படிச்சுட்டு வந்து ட்யூஷன் நேரத்துலயே பேசி முடிச்சுடுவோம். சாயங்காலம் நான் திருட்டுப் புத்தகம் படிக்கறது சும்மா ஒரு எக்ஸ்ட்ரா வாசிப்பனுவத்துக்குத் தான். க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசுகிட்டிருக்கும்போது RSV, “ரெங்கராஜன் என்னோட ஸ்கூல்மேட். கிரிக்கெட் போட்டியெல்லாம் அடையவளஞ்சான் வீதிக்கு வந்து விளையாடுவான். எங்காத்து கீழ்ரூம் ஓரத்துல சாத்திவெச்சிருக்கற பேட்(bat) ரெங்கராஜன் விளையாடினதுதான்”னு சொன்னதும் நம்பமுடியாம(அவர் வயசென்ன, உங்க வயசென்ன?) ஆனா சந்தோஷமாயிட்டேன். ஒருநாள் அடக்கமுடியாம அவங்கவீட்டு வாசப்பக்க கீழ இருட்டுஉள்ல ஜன்னலை ஒட்டி சாத்தி வெச்சிருந்த பேட்டை வெளித் திண்ணைலேருந்து ஜன்னல் வழியா கையை உள்ள விட்டு தொட்டுப் பார்க்க நினைச்சு உள்ள கையை விட, அதுக்குள்ள RSV இறங்கிவர, அவசரத்துல கையை வெடுக்குனு எடுக்க.. போகும்போது கை எப்படி சுளுவா போச்சுன்னு தெரியலை. வெளில எடுக்கும்போது கை மட்டும்தான் வந்துது. வளையல் எல்லாம் உள்ளயே உடைஞ்சு கொட்டிடுச்சு. கொஞ்சூண்டு இரத்தம் வேற.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே விட்டிருக்கலாம். வீதி பிஸ்தாக்கள்கிட்ட இதைச் சொல்லி பீத்திக்கணும்னு நினைச்சு விலாவாரியா சொல்லிட்டேன். ஆளாளுக்கு என்னை அழவெச்சுட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவர் (பாய்ஸ் ஹைஸ்) ஸ்கூல் மேத்ஸ் வாத்தியாராச்சே.&lt;br /&gt;“RSVஆ? அவர் பீலா விடுவாருன்னு தெரியும். அதுக்காக இப்படியா?”&lt;br /&gt;“எந்த சுப்புணி பேட்டையோ தொட்டுட்டு… பாவம்டா.”&lt;br /&gt;“அவர் சொன்னா இந்த கேப்ஸ் (கேப்ஸ்- KPVT யோட ஷார்ட் ஃபார்ம். இது எங்க வீதி குழூஉக்குறி) ஏன் நம்பணும்?”&lt;br /&gt;“இல்லை, அவர் இதுக்கெல்லாம் பொய் சொல்ல மாட்டாரு. ரொம்ப நல்லவரு”ன்னு நான் திரும்பத் திரும்பச் சொன்னதை யாரும் நம்பத் தயாரில்லை. அல்லது நம்பினாலும் என்னை ஓட்டியே தீரணும்னு முடிவா இருந்திருக்காங்களோ என்னவோ.&lt;br /&gt;“இவகிட்ட நமக்கென்னடா பேச்சு. அந்த பேட்டை வாங்கி மேக்கை(make) பாத்தா தெரிஞ்சுட்டுப் போகுது. என்ன மரம், எந்தக் கடை, எந்த வருஷம் எல்லாம் சொல்லிடமாட்டோம்?”&lt;br /&gt;பயந்துட்டேன். இவங்க வாத்தியார்கிட்ட கேட்டுடுவாங்கன்னில்லை. அது நீங்க தொட்டு விளையாடின பேட்டா இல்லாம இருந்துடக் கூடாதேன்னு. வீட்டு வாசல்ல அழுதுகிட்டிருந்ததைப்; பாத்து பாட்டி வந்து விசாரிச்சா. “அது என்ன நடந்துச்சுன்னா… உங்க பேத்தி…” ன்னு ஒருத்தன் விஸ்தாரமா சொல்ல ஆரம்பிக்க, என் அழுகைக்கு பயந்து இன்னொருத்தன் “வேண்டான்டா” ன்னு அவன் வாயைப் பொத்த, ‌அவன் அந்தக் கையையும் வலுக்கட்டாயமா தள்ளி, “உங்க பேத்தி டேஷ் டேஷ் டேஷ்..” ன்னு கத்திட்டுப் போனான்.&lt;br /&gt;அம்மா வந்து அலட்சியமா என்னன்னு விசாரிச்சா. “வளையல் உடைஞ்சிடுச்சாம், திட்டுவீங்களோ?”ன்னு எவனோ எடுத்துக் கொடுத்தான். “ஆமா, போன மாசம் காதுல இருந்த தங்கத் தோடை தொலைச்சா. போன வாரம் வெள்ளிக் கொலுசைத் தொலைச்சா. அதுக்கே பாட்டியும் பேத்தியும் வெளிய சொல்லாம கமுக்கமா இருந்திட்டாங்க. கண்ணாடி வளையலுக்கா அழப்போறா இவ. அதெல்லாம் பசப்பு”ன்னு நல்லவேளை கண்டுக்கலை.&lt;br /&gt;ஆனாலும் அப்றம் வந்த நாள்கள்ல இந்தப் பசங்கபோய் வாத்தியாரைக் கேட்டு அது நீங்க விளையாடினதில்லைன்னு ஆயிடுமோன்னு ஒரே பக்பக்தான்.  எங்கண்ணன் தான் தைரியம் சொன்னான், இவனுங்க எல்லாம் போய் கேக்கமாட்டாங்க. அவர் ரொம்ப ஸ்டிரிக்ட். அவரைப் பாத்தாலே டிராயரை நனைச்சுடுவாங்கன்னு. அதே கொஞ்சம் நிம்மதி. ஸ்கூல்ல அவர் பையன்கள் கிட்ட அப்படி ஸ்டிரிக்டா இருப்பாரோ என்னவோ எங்களை எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார். ‘அவருக்கு கல்யாணம் ஆகலை இல்ல‌. அதனால பெண்களை எப்படி டீல் பண்றதுன்னு அவருக்குத் தெரியாது. ஏதாவது சொன்னா எங்கயாவது அழுதுகிழுது வெச்சிடுவீங்களோன்னு பயப்படுவாரு’ன்னு ஒருத்தன் ஆரூடம் சொல்லியிருந்தான். இருக்கலாம். ஆனா அதை நான் தான் முழுமையா (மிஸ்)யூஸ் பண்ணின்டேன்.&lt;br /&gt;ஆனா RSV அன்னிக்கி ஒருநாள் ஆர்வமா உங்களைப் பத்தி சொன்னதோட சரி. அப்றமெல்லாம் உங்களைப் பத்தி நாங்க பேசறதை வகுப்புல அனுமதிக்கவே இல்லை. அப்றம் கொஞ்சம் பொறுக்காம நீதான் எல்லாரையும் கெடுக்கறன்னு என்னை குறிப்பிட்டு சொல்லிகிட்டே இருந்தாரு. நமக்கு அதெல்லாம் ஒன்னும் உரைக்காதுன்னு வைங்க.&lt;br /&gt;ஒருநாள் ____ குனிஞ்சு மெதுவா என் காதுல கிசுகிசுப்பா, இப்பல்லாம் உங்க பொழுதுபோக்கு வாக்மேன்ல பாட்டு கேட்கறதுதான்னு சொன்னா. “ஐயய்யோ காது சீக்கிரம் செவிடாயிடுமே!”ன்னு கொஞ்சம்- கொஞ்சம்னா பக்கத்துல எல்லாருக்கும் காது செவிடாகிற மாதிரி– சத்தமா என்னை மறந்து கத்திட்டேன். RSV சடக்னு சாக்பீஸை தூக்கி எறிஞ்சுட்டு கீழ விடுவிடுன்னு கோபிச்சுகிட்டுப் போயிட்டாரு. இதென்ன ஸ்கூலா, நாம போய் மன்னிப்பெல்லாம் கேட்டு திரும்பக் கூட்டி வர. நான் நல்லதாப் போச்சுன்னு தொடர்ந்து உங்க பேட்டியோட முழு விபரமும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். (இப்ப இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு உடம்புசரியில்லாம இருந்தபோது தேசிகன் உங்களைப் பார்த்துட்டு உடனே போன்செஞ்சு, “சார் ரொம்ப bore அடிக்குதுன்னு சொல்றாரு. வாக்மென்ல பாட்டு கேட்கறதுதான் ஒரே பொழுதுபோக்கு. அதுவும் என்னவோ சரியில்லயாம். காட்லெஸ் ஹெட்போன் கேக்கறாரு. சென்னைலயே கடைல தேடணும்”னு சொன்னபோது நெகிழ்ந்துட்டேன். நான் பயந்தமாதிரி உங்க காதுக்கு ஒன்னும் ஆகியிருக்கலை.)&lt;br /&gt;எந்த ரியாக்ஷனும் எங்ககிட்ட இல்லாததாலே, RSV தானே மேல வந்து தூக்கி எறிஞ்ச சாக்பீசை கண்ல ஒத்திகிட்டாரு (பாவம்! ஆனா என்மேல என்ன தப்பு?). “நீ நாளைலேருந்து _______யோட டயத்துக்கு ட்யூஷன் வா. அவ தமிழ் மீடியம். ரெண்டு பேருக்கும் சேர்ந்து சொல்லிக் கொடுக்கறது எனக்கு கஷ்டம். ஆனாலும் அவ்ளோ கஷ்டமில்லைன்னு சொல்லிட்டாரு. ஒருவேளை இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன், இங்கயே இருக்கேன்னு சொல்வேன்னு நினைச்சிருப்பாரோ என்னவோ. நான் நடக்றது நடக்கட்டும். நாம கெட்டதோட சந்திரபுஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்துடலாம்னு தயாராயிட்டேன். அதெல்லாம் சரியா வராது. ரொம்ப அறுக்கும். வேற ஏதாவது யோசிக்கலாம்னு மத்த ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.&lt;br /&gt;மறுநாள் அந்தப் பொண்ணை பேர் என்னன்னு (சும்மா. அதெல்லாம் தெரியாமலா இருக்கோம்.) கேட்டேன். வாத்யாரே பதில் சொன்னாரு. “அவ அதிகம் பேச மாட்டா”ன்னு உபரி வாக்கியம் வேற. கடுப்பாயிட்டேன். “சரி, பேசவேண்டாம் ஒரு பாட்டு பாடேன்”ன்னு சொன்னேன். “எனக்கு கர்நாடிக் தான் தெரியும். உங்களுக்கு(?!) அதெல்லாம் புரியாது”ன்னு அந்தப் பொண்ணு சொன்னதை நான் மன்னிச்சுட்டேன். ஆனா மூணே நாள்ல அந்தப் பொண்ணு என் நண்பன் ஒருத்தனை யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்டு ட்யூஷனையே நிறுத்தினதைத்தான் அவரால மன்னிக்கவே முடியலை பாவம்!  :)))))&lt;br /&gt;அப்றம் என்ன, நான் என் ஜோதில கலந்து, வழக்கம்போல கலக்க ஆரம்பிச்சுட்டேன். RSV திட்டாட்டாலும் அப்பப்ப பாராளுமன்ற ஸ்பீக்கர் மாதிரி அமைதி காக்க வேண்டிகிட்டே இருப்பாரு. நாங்களும் உறுப்பினர் மாதிரி வெளிநடப்பெல்லாம் செய்யாம ரணகளப் படுத்திகிட்டிருந்தோம். எல்லா வாத்யார்களையும் போலவே, “போன செட் கொஞ்சம் பேசுவாங்களே தவிர ரொம்ப ஸ்மார்ட். படிப்புன்னு வந்தா அசத்திடுவாங்க”ன்னு அடுத்து வந்த செட்கிட்ட புகழ்ந்துகிட்டிருந்தாராம். காரணம், அவர் நிஜமாவே அருமையா மேத்ஸ் சொல்லித் தருவாருங்கறதுதான். RSV வீட்டு மாடிரூம் சுவர்களும், கீழ அடையவளஞ்சான் மதில் சுவர், ஹெட்போஸ்ட் ஆபிஸ் பக்கம் எல்லாம் இன்னும் கூட உங்க கதைகளையோ உங்களைப் பத்தியோ என் குரலை எதிரொலிக்கலாம். இத்தனை வருஷம் கழிச்சும் அங்க போகும்போது ரொம்ப சின்ன பொண்ணா ரொம்ப உற்சாகமா ஆயிடறேன்.&lt;br /&gt;=====&lt;br /&gt;எப்படி இருந்தாலும் நான் குழந்தையா இருந்தபோது &lt;a href="http://mykitchenpitch.wordpress.com/2007/10/15/srirangam-koil-navaraththiri-ninaivalaigal/" target="_blank"&gt;‘நாராயணன்’&lt;/a&gt;ங்கற பேர் எப்படி எங்கவீட்டுல எல்லாருக்கும் அலர்ஜியோ அப்படி பதின்ம வயசுக்கு மேல ‘சுஜாதா’ங்கற பேர் அலர்ஜியாயிடுச்சு. ஸ்கூல், காலேஜ் கட் அடிச்சுட்டு சினிமா எல்லாம் ஓக்கே, கதைபுக் படிக்கக் கூடாதுங்கறது என்ன லாஜிக்னு எனக்கு இன்னும் புரியலை. அதை விட நாமதான் ஸ்கூல் போயிடறோம். அப்பக் கூட கடமையா அம்மா ஏன் அக்கம்பக்கம் கூட புக்ஸ் வாங்கிப் படிக்கறதில்லைங்கறது என் ஆச்சரியமாவும், நாம வீட்டுலயே புக்ஸ் வாங்கலை. ஆனா இவ எங்க எப்படி படிக்கறாங்கறது அம்மாவோட ஆச்சரியமாவும் தொடர்ந்து இருந்துகிட்டே இருந்தது. முடிஞ்சவரைக்கும் அடக்கியே வாசிப்பேன். ஆனாலும் அதை இத்தனை வருஷம்கழிச்சு கிளறிட்டேன்.&lt;br /&gt;2005 ஜூன்ல ஸ்ரீரங்கத்துலேருந்து இரண்டு நாள்ல மும்பை கிளம்பணும். எல்லாம் தயார். கண்ணுல லேசர் சிகிச்சை; அதனால இடைல ரெண்டுநாள் மட்டும் கொஞ்சம் ஓய்வு. மதியம் 3 மணிக்கு கரண்ட் போயிடுச்சு. கரண்ட் போனா ஊர் ஏன் இப்படி ஒரு அமைதியாகுது தெரியலை. அப்பா அடுத்த ரூம்ல ஏதோ பீரோவை குடைஞ்சுகிட்டிருந்தாரு. அம்மா கூடத்துல தரைல உட்கார்ந்து அரிவாள்மணைல பீன்ஸ் நிதானமா காம்பு, நார் நீக்கி திருத்தறா. எதுவும் செய்யத் தோணாம அம்மா மடில போய் படுத்துக்கறேன்.&lt;br /&gt;“போய் தலைகாணியை வெச்சுப் படு. திருத்தற இடத்துல..”&lt;br /&gt;“போம்மா”&lt;br /&gt;“கண்ல என் கை பட்டுடப் போறதுடா. தள்ளிப் படேன்.”&lt;br /&gt;“போம்மா”&lt;br /&gt;உலகத்துலயே எந்த ஈகோவும் பார்க்காத அனுமதி தேவை இல்லாத ஒரே இடம் எந்தக் காலத்துலயும் அப்பா அம்மா மடிதான்.&lt;br /&gt;“கண் ஆபரேஷன் ஆனதால இன்னிக்கு வெளில போக முடியலையாக்கும். இல்லைன்னா அப்பாவும் பொண்ணும் வெயில் வீணாப் போறதேன்னு திரிலோக சஞ்சாரம் கிளம்பியிருப்பீங்க”&lt;br /&gt;“ஆபரேஷன்னு சொல்லி கேவலப்படுத்தாத. சின்ன சிகிச்சை. நான் என்ன பாட்டிமாதிரி கண்ல பச்சைத் திரை கட்டிகிட்டா உட்கார்ந்திருக்கேன்?”&lt;br /&gt;“வேண பணத்தை கொட்டி அழுதிருக்கு. அப்றம் என்ன சின்ன சிகிச்சை?”&lt;br /&gt;“போம்மா”&lt;br /&gt;“போம்மா போம்மான்னுண்டிரு. கண் ஒன்னுதான் அழகா இருந்தது. அதையும் கெடுத்துண்டாச்சு. உன் வயசுல எல்லாம் நான் எப்படி இருந்தேன்!”&lt;br /&gt;“என்னோட எல்லா வயசுலயும் நீ இதையேதான் சொல்லிகிட்டிருக்க. சும்மா விடாத. நீங்களெல்லாம் சின்ன வயசுலயே எப்படி இருந்தீங்கன்னு சார் சொல்லிட்டாரு”&lt;br /&gt;“சாரா? யாரு அது?”&lt;br /&gt;இதுதான் எனக்குப் பிரச்சினை. உங்களை சுஜாதான்னு பெண்பேர்ல கூப்பிடப் பொருந்தலை. ரெங்கராஜன்கற பேர் ரொம்ப அந்நியமா இருக்கு. சார்னு சொன்னா அது நீங்க மட்டும்தான். மற்ற ஆண்கள் யாரையும் நான் அப்படி கூப்பிடறதில்லை. நான் பேர் சொல்லி அவங்களைக் கூப்பிடறதை செரிக்கமுடியாத ஆண்களைக் கூட அவங்க பேரோட சார், அல்லது எக்ஸ்க்யூஸ்மீ இப்படியே ஒப்பேத்திகிட்டிருக்கேன். என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் சார்னு சொன்னா அது நீங்கதான்னு புரியும். அப்படிப் புரிஞ்சுக்காதவங்களைப் பாத்தா கோபமா வருது. அம்மாவோட இன்னொசன்ஸ்(அல்லது இக்னரன்ஸ்) எப்பவும் போல மன்னிச்சுட வேண்டியதுதான்.&lt;br /&gt;“எங்கவீதி (கீழச்சித்திரை வீதி) பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ சிலாக்கியமா இருக்காது. ப்ரோட்டீன் சத்து குறைஞ்ச பொண்ணுங்க”ன்னு எழுதியிருக்காரு.&lt;br /&gt;“ஏய், அவர் யாரைச் சொன்னாரோ, அந்தாள் காலத்துல நம்பாளு வயசுக்கே வரலை”– அடுத்த ரூம்லேருந்து அப்பா.&lt;br /&gt;அப்பா எங்க பேச்சை கேட்டுகிட்டிருக்காரு. அதைவிட அதிர்ச்சி. நீங்க என் அம்மா அப்பாவை விட வயசுல பெரியவரு. இது எனக்குத் தெரிஞ்சதுதான்னாலும் என் மனசுல பதிஞ்சதே இல்லை. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அதெப்படி வயசு தெரியும் ஆனா தெரியாதுன்னு சொல்ற. உளறாதன்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்குத் தெரியலை. நிறைய சந்தர்ப்பங்கள்ல உங்க வயசை யாராவது சுட்டும்போது அல்லது நிகழ்வுகள் குறிக்கும்போது எனக்கு இன்னும் அதிர்ச்சியாவேதான் இருக்கு. ஃபோன்ல நீங்க என்கிட்ட பேசும்போது உங்க‌குர‌ல் அதைவிட‌ மோச‌மா குழ‌ந்தையோட‌ உற்சாக‌த்தோட‌ இருந்த‌து.&lt;br /&gt;[அம்பலம் சாட்ல ஒருதடவை ஹரியண்ணாவுக்கு 'நாட்கள்' குறிச்சு நீங்க சொல்லிகிட்டிருந்தபோது அப்படித்தான்-- நாங்க எல்லாம் மரியாதைகொடுக்கற ஹரியண்ணாவே ஏன் உங்ககிட்ட இப்படி ஏதோ பெரியவர்கிட்ட பேசறமாதிரி மரியாதையா பேசறாருன்னு அதிர்ச்சியா இருந்தது. இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள். எனக்கெல்லாம் உங்களோட தடால் தடால்னு சண்டைபோட்டு எதிர்த்துப் பேசி கலாய்ச்சே பழகிடுச்சு.]&lt;br /&gt;அம்மாவுக்கு இன்னும் யாருன்னு தெரியலை. ஆனா கோபமாயிட்டா. தான் சின்ன வயசுல ரொம்ப ரொம்ப அழகா இருந்ததா இன்னும் ஊர்ல சொல்ற காலத்துல இந்த கமெண்ட்.. “யார் சொன்னது?”&lt;br /&gt;“எழுத்தாளர் சுஜாதா! :)”&lt;br /&gt;“திமிருதான்!”&lt;br /&gt;“என்ன திமிரு? :)) எப்பவுமே சட்டை மேல் பட்டனுக்கு ஊக்குதான் போடுவீங்களாமே வீதில. போடுவீங்களா இல்லையா? :))”&lt;br /&gt;அம்மா அதுக்கு உடனே ஒன்னும் சொல்லலை. அம்மாவுக்கு கவிஞர் வாலி பத்தி கொஞ்சம் குறையுண்டு. கோமளத்து மாமியாத்து வாச திண்டுல உட்கார்ந்துண்டு, வெத்தலையும் புகையுலையும் போட்டு, துப்பிண்டு… சே ஒரு பொண்ணும் அந்தப் பக்கம் போகவர முடியாது. ஆனா பாவம், உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தட்டிவிட்டே சின்ன வயசுல ‘ரேடியோ மாமா’ நிகழ்ச்சி நாடகத்துலேருந்து ஹைஸ்கூல் நாடகம் வரைக்கும் ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி வாங்கி நான் பேர் வாங்கிட்டேன்’னு கொஞ்சம் நன்றியுணர்வோட சொல்வா. ஆனா சுஜாதாங்கர பேர்ல எந்தக் கருத்தும் இல்லாம இருந்திருக்கா போல. நானாத்தான் நாறிட்டேன்.&lt;br /&gt;திடீர்னு அஞ்சு நிமிஷ அமைதிக்கப்புறம் அம்மா, “அந்தாள் தன் மூஞ்சியை கண்ணாடில பாத்ததே இல்லையா? நட்டுவெச்ச நட்ராஜ் பென்சிலுக்கு கையும் காலும் ஒட்டவெச்ச மாதிரி இருந்துண்டு எங்களை கிண்டலாக்கும்!” [எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு வந்த விமர்சனங்கள்லயே இந்தக் கோணத்து விமர்சனம்-- அதுவும் தெருப் பொண்ணுகிட்டேயிருந்து இதாத்தான் இருக்கணும். சே சே பாவம் சார் நீங்க. ஏதோ என்னாலானது. :))) ]&lt;br /&gt;அம்மா ரொம்ப பாதிக்கப் பட்டுட்டாங்க போலன்னு தோணிச்சு. :)) எத்தனை வயசானாலும் ஆண்களோட இந்த மாதிரி கமெண்ட் பெண்களுக்கு தாங்கறதில்லைன்னு நினைச்சுகிட்டேன்.&lt;br /&gt;“அதெல்லாம் சும்மா சொல்லாத. சார் சின்ன வயசுல சூப்பரா இருப்பாரு. இப்பத்தான் டயட்ல மெலிஞ்சிருக்காரு.”&lt;br /&gt;“ஆமா, நீதான் பாத்த.”&lt;br /&gt;“சரி நான் பாக்கலை. நீதான் சிறப்புத் தமிழ் எடுத்துப் படிச்சவள்னு பீத்திக்கற. நீயும் புத்தகங்களுக்கு எழுதியிருக்கலாமில்ல, கீ.சி.வீதி பாய்ஸ் எல்லாம் ப்லா ப்லா அவ்ளோ சுவாரசியம் இல்லைன்னு..”&lt;br /&gt;“நீ எழுதுவ அப்படி எல்லாம்”:&lt;br /&gt;“நான் எழுதமாட்டேன். ஆனா சார்கிட்ட அடுத்த சாட்ல எங்கம்மா மட்டும் அதுல விதிவிலக்கு. அழகோ அழகா இருந்தாங்கன்னு சொல்லிடறேன். போதுமா?”&lt;br /&gt;“அப்படியே நீ உங்கப்பா ஜாடைன்னும் சொல்லிடு”&lt;br /&gt;“அதெல்லாம் பிரச்சினை இல்லை. சாட் தானே. என் மூஞ்சி தெரியாது. :)”&lt;br /&gt;“வெட்டி!”&lt;br /&gt;“போம்மா”&lt;br /&gt;அப்புறம் பேச்சே இல்லை. ஒரு கால்மணி நேரம் கழிச்சு மெல்ல திரும்பி அம்மாவைப் பாத்தேன். கைதான் காயை திருத்திண்டிருந்தது. முகமெல்லாம் வரிவரியா நினைவுகள் ஓடற மாதிரியே ஆழ்ந்த சிந்தனை. முழுமையா கீழச்சித்திரை வீதி நாள்களுக்குப் போயிட்டாங்க. அசைக்காம விழியை மட்டும் நகர்த்தி காயைப் பாத்தேன். 4, 5 பீன்ஸ்தான் பாக்கி இருந்தது. காய் தீர்ந்ததும் திரும்ப நிஜவாழ்க்கைக்கு வந்துடுவாங்களேன்னு கவலையா இருந்தது.&lt;br /&gt;=====&lt;br /&gt;jaysனு என் கையெழுத்தை வெச்சு என்னைக் கூப்பிடற ப்ரெண்ட்ஸ்லேருந்து விலகி, நீங்க சுருக்கி வெச்ச jsri ங்கற பேர்தான் என் அடையாளமும் ஐடி முகவரிகளுமா மாறி 5 வருஷமாச்சு. மரத்தடி, பதிவுகள், தமிழ் இணையம்னு வாழ்க்கையே உங்க மூலமா மாறினாலும், என்னவோ இணையத்துல எல்லாருக்கும் என்னைத் தெரிஞ்சப்பறம், அம்பலம் சாட் எல்லாம் பொதுவுல வர ஆரம்பிச்சதும், பொதுவுல சாட் செய்றதுல என் அந்தரங்கம் பாதிக்கப்படறமாதிரி இருந்தது. இனிமே சாட்டுக்கு வரமாட்டேன், வருவேன் பேச மாட்டேன், இல்லைன்னா சொந்தப் பேர்ல வரமாட்டென்னு மாத்தி மாத்தி பாடாப் படுத்தி லெட்டர் போட்டாலும், “I understand”, “I guessed that much”, “I know” மாதிரி ஒருவரி பதில். ஆமா, நாம இல்லைன்னு தான் குறையுதான்னு சும்மா பாத்துகிட்டு நான் பேசாம இருந்தாலும் என் புனைப்பெயரைக் கூப்பிட்டு இழுத்துவெச்சு ரெண்டு மூணு கேள்வி, விசாரிப்பு… (’கண்டுகொண்டேன்”னு சொல்ற மாதிரி)…  உஷா சந்திச்ச போது நான்னு நினைச்சு நீங்க பேச ஆரம்பிச்சதா சொன்னதும் மனசுக்குள்ள படபடத்த பட்டாம்பூச்சியை, தீவிர ரசிகைகள் நேர்ல சந்திக்கமாட்டாங்கன்னு சொல்லிச் சொல்லியே அடக்கிட்டேன்.&lt;br /&gt;உங்க மேல நிறைய அன்பும் மரியாதையும் வெச்சிருந்தும் ஏன் எப்பவும் சண்டை போடற மாதிரியே இருந்தேன்னு தெரியலை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சமத்தா இருப்பேன்னு தோணுது.&lt;br /&gt;“சார், நானும் மரபுக் கவிதை எழுதக் கத்துக்கப் போறேன்”&lt;br /&gt;“நீ மரபு மீறாம சரியா எழுதலாம். ஆனா அது கவிதையாங்கறதுக்கு நான் கியாரண்டி இல்லை. :)”&lt;br /&gt;இதுக்கே வீம்பா கத்துக்கணும்னு தோணித்து.&lt;br /&gt;“என்னவோ சொன்னீங்களே, என் வெண்பாவுக்கு மரத்தடில பரிசு கிடைச்சிருக்கு”&lt;br /&gt;“என்ன பரிசு?”&lt;br /&gt;“நமக்குத்தான் எப்பவும் இரண்டாம் பரிசே பிடிக்காதே”&lt;br /&gt;“முதல் பரிசா. வாழ்த்துகள்”&lt;br /&gt;“இல்லை. :(( அதை “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” ரேஞ்சுல கடைசில யாரோ ஒரு புலவர் வந்து எழுதி வாங்கிட்டு போயிட்டாரு”&lt;br /&gt;“??”&lt;br /&gt;“மூணாவது பரிசு”&lt;br /&gt;“ஹா ஹா”&lt;br /&gt;“பரவாயில்லை”&lt;br /&gt;“btw jsri, regarding your venbas they were quite competent but not brilliant.”&lt;br /&gt;“பரவாயில்லை”&lt;br /&gt;“perhaps the last line was restrictive”&lt;br /&gt;“பரவாயில்லை”&lt;br /&gt;“I am looking for Venbas with innovative mix of modern words and topics”&lt;br /&gt;“தேவையில்லை. எனக்கு மரபு சொல்லிக் கொடுத்த கனடா பசுபதிங்கறவரே நல்லாருக்கு. எனக்கு நம்பிக்கையா இருக்குன்னு சொல்லிட்டார். அது போதும்.”&lt;br /&gt;” “&lt;br /&gt;(என் ஈகோவை இட‌றிவிட்ட‌ ஸ்மைலி)&lt;br /&gt;“உங்களைக் கூடத்தான் எல்லாரும் மரபுக்கு விரோதின்னு சொல்றாங்க”&lt;br /&gt;“யார் சொல்கிறார்கள்?”&lt;br /&gt;“எல்லாப் பெரியவங்களும்தான்”&lt;br /&gt;“யார் பெரியவர்கள்?”&lt;br /&gt;“(ஙே.. நீங்கதான் எல்லாரையும் விட பெரியவரா?) ஐ மீன் இணையத்துல என்னை விடப் பெரியவங்க… மரபுல எல்லாம் எழுதி முடிச்சாச்சுன்னெல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டீங்களாமே”&lt;br /&gt;“அவர்களை பசித்த புலி தின்னட்டும். நான் பதினான்கு வயதிலிருந்தே ‘மரபுநேசன்’ என்கிற பெயரில் மரபுக் கவிதைகள் எழுதிவருகிறேன்.” (அதெல்லாம் பேசும்போது நல்லா பேசுங்க. ஸ்டேட்மெண்ட் விடும்போது கோட்டை விட்டுடுங்க.)&lt;br /&gt;அநேக நேரங்கள்ல பதில் சொல்றதும், உங்க தனிப்பட்ட செய்கையும் வேறயாவே இருக்கு. என்னாலயே இன்னும் முழுமையா புரிஞ்சுக்க முடியலை. நாய் மட்டும் ஏன் நன்றியுள்ளதா இருக்குன்னு கேட்டா, “அதைத் தனியாக் கூப்பிட்டுக் கேட்டா எல்லாம் ஒரு சர்வைவலுக்குத்தான்னு சொல்லும்”னு அலட்சியமா/நகைச்சுவையா பதில் சொல்றீங்க. 2003ல சுதந்திர தினத்தன்னிக்கு என்ன செஞ்சுகிட்டிருந்தீங்கன்னு(ரொம்ப முக்கியம்) மறுநாள் உங்க ரசிகர் ஒருத்தர் கேக்கறாரு, “நேத்தி என் வளர்ப்பு நாய்க்கு இறுதிநாள். முழுநாளும் அதுகூடவே ரெண்டுபேரும் இருந்தோம். வேற எதுவும் ஓடலை. ரொம்ப துக்கமா இருக்கு”ன்னு ஃபீலிங்ஸ் விடறீங்க.&lt;br /&gt;ப‌த்ரி ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ச் சொல்லி எனக்கு அறிமுகம் செஞ்சீங்க. அதெல்லாம் ஒன்னும் புரியவே இல்லை. தமிழே இல்லை, உவ்வேக். எனக்கு ஒன்னுமே புரிலயலை. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காய்ங்களோ”ன்னு நான் சொன்னதை மறுத்து, “அசடு, அது உலக இணையத் தமிழ் மாநாடு பதிவுகள். ரெகுலர் படி”ன்னு நிறைய சிபாரிசு செஞ்சீங்க. என்னை உருப்படியா ஒரு 15, 20 பதிவுகளை சுட்டி எடுத்து அனுப்பச் சொன்னீங்க. ஆனா பொதுவுல பதிவுகளைப் பத்தி வேற கமெண்ட் வெச்சீங்க. அதுலயும் அப்ப எனக்கு பெரிய மாற்றுக்கருத்து இல்லைன்னு வைங்க.&lt;br /&gt;விஷ்ணுபுரம் 14 பக்கம் தாண்டலைன்னு சொல்லிகிட்டிருந்தீங்க. அப்ப 15 பக்கம் தாண்டினா நான் உங்களைவிடப் பெரியாளான்னு கேட்டதுக்கு ‘நிச்சயமா’ன்னு சொன்னீங்க. ஆனா படிச்சுட்டு, ஜெயமோகன்கிட்ட தனிப்பட்ட முறைல அந்த நாவலுக்கான உங்க மறுப்பை சத்தமில்லாம ஆனா அழுத்தமா சொல்லியிருக்கீங்க. கிரேட். இவ்ளோ பிரபந்தங்கள் மேல ஈடுபாட்டோட இருக்கறவரு எப்படி கனிமொழி, கமலஹாசன்னு நட்பா இருக்காருன்னு எல்லாரும் கேக்கறாங்க. (கனிமொழி, ‘திருப்பாவையை எரிச்சுடுவாங்களா?’ன்னு காஃபி வித் அனு’ல கேக்கறாங்க) அதுக்கும் இதுக்கும் குழம்பத் தேவை இல்லைன்னாலும் உங்க மறுப்பை தேவையான இடங்கள்ல, மத்தவங்ககிட்டயும் சொல்லாம இருந்திருக்க மாட்டீங்கன்னு இப்ப நம்பறேன். வேணா, எல்லாருக்கும் ஜெயமோகன் மாதிரி அதை பொதுவுல ஒத்துக்கற நேர்மை இல்லாம இருக்கலாம். இன்னும் வாழ்நாள் முழுக்க தெரிஞ்சுக்க உங்க ஆளுமைல பாக்கி இருக்குன்னு தான் தோணுது. நல்லவேளையா அதையெல்லாம் பகிர்ந்துக்கவும் எப்பவும் எனக்கு ஆள் இருக்கு.&lt;br /&gt;=====&lt;br /&gt;கல்யாணத்துக்கப்புறம் படிக்க புக்ஸ் இருந்தது; கட்டுபாடு இல்லை; ஆனாலும் ஏதோ குறை. அது என்னன்னா அதைப் பேசி பகிர்ந்துக்க ஆள் இல்லாதது. பக்கத்துவீட்டுல ஜேஎஸ்ராகவன் இருந்தாரு. உங்களைப் பாத்தேன், பேசினேன்னெல்லாம் சொல்வாரே தவிர ஒன்னும் சுவாரசியம் இல்லை. பெரிய பீத்தல்னு விட்டுடுவேன். வாழ்க்கையே மாறிப்போச்சுன்னு நினைச்சுகிட்டிருக்கும்போது தான் அந்தப் புதையல் கிடைச்சது. மதியம் இரண்டு மணிக்கு போஸ்ட் பாத்துட்டு குட்டிப் பாப்பாவைக் கொஞ்சிண்டே இரண்டாவது மாடி ஏறும்போது அந்தப் பொண்ணு விடுவிடுன்னு இறங்கிண்டிருந்தா. வேலைக்குப் போற அவசரம், ஹேண்ட்பேக், கைல கர்ச்சீப், அதோட அந்தப் புக்– ‘பதவிக்காக’. மனசுக்கு முன்னால மூளை சட்டுனு முழுச்சுண்டுடுத்து. பதவிக்காக ஹீரோ என்னோட நிஜ ஹீரோவாச்சே.&lt;br /&gt;“இந்தப் புடைவை ரொம்ப நல்லா இருக்கு. அதைவிட நீங்க கட்டிகிட்டிருக்கறது”&lt;br /&gt;சடேர்னு நின்னா. “அப்படியா, எனக்கு இது அவ்ளவா பிடிக்காது.” (அப்பாடீ, எனக்கும்தான் பிடிக்கலை. ஒரே டேஸ்ட்.)&lt;br /&gt;அது என்ன புக்? ஓ பதவிக்காகவா. யார் எழுதினது? நான் இன்னும் (பதினஞ்சாவது தடவை) படிக்கலை. படிக்கலாமா?&lt;br /&gt;“ம். லைப்ரரி புக்தான். சுஜாதாவோடது (அதுசரி, எனக்கேவா?)” உடனே கைல கொடுத்தா. ‘பரவாயில்லை, உனக்கும் டேஸ்ட் இருக்கு’ மாதிரி ஒரு பார்வை. இறங்கிப் போயிட்டா.&lt;br /&gt;அடுத்த தடவைலயே, “அதென்ன அப்படி கேவலமான டிசைன்ல ஒரு புடைவை. வெள்ளைப் புடைவைல பெரிய பெரிய கிளி. இதெல்லாம் எப்படி வாங்கணும்னு தோணும்?” அப்படீன்னு நான் பொட்டுனு கேட்க, இரண்டு பேரும் இணைஞ்சு சிரிச்ச சிரிப்புல பிசிறே இல்லை.&lt;br /&gt;கல்யாணம் ஆனாலே எந்தப் பொண்ணும் வீட்டுக்காரர் வேலை, பிரமோஷன், குழந்தைவளர்ப்பு, ஸ்கூல், , சாக்ஸ் எப்படி வாஷ் பண்றது, அசைன்மெண்ட், யூனிஃபார்ம், பெடிக்யூர்னு மட்டும் பேசி, கேள்விகேட்டு, திரும்பத் திரும்ப என்னை வீட்டுக்குள்ளயே இருக்கற உணர்வைத் தர பெண்களுக்குள்ள எனக்கான ஃப்ரெண்ட். எப்ப என்ன கேப்பான்னே தெரியாது. ஆனா அதெல்லாம் மேல சொன்னவைகள்ல வராது. இதே கருத்தையே என்னைப் பத்தி அவளும் சொன்னது தான் அதைவிட ஆச்சரியம்.&lt;br /&gt;சென்னைல எதிர்த்த ஃப்ளாட்தான். ஆனாலும் மெனக்கெட்டு ஆபிஸ்போய் அங்கேருந்து ஃபோன் பண்ணித்தான் பேசுவா.&lt;br /&gt;95ஆ, 96ஆ சரியா நினைவில்லை. பாஜக அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துமேல பாராளுமன்றத்துல பேசுகிட்டிருக்கறது அப்ப லைவா டிவில. பாராளுமன்றம் எல்லாம் இப்படி பார்க்கமுடியும்னு நினைச்சுக்கூட பார்க்காத நாள்கள்ல அது எனக்கு ரொம்ப அதிசயம். ஆட்சி கவிழப் போறது. அத்வானி ஒளஒளாங்காட்டிக்குப் பேசிகிட்டிருக்காரு. ஆனாலும் பரவசமா பாத்துகிட்டிருக்கேன். திடீர்னு ஃபோன்.&lt;br /&gt;“டீவி பாக்கறியா?”&lt;br /&gt;“பின்ன?”&lt;br /&gt;“அத்வானிக்கு பின்னால ரெண்டாவது லைன்ல யாரு? புதுசா இருக்கு”&lt;br /&gt;“ஏதோ மகாஜன். ஸ்கூல் வாத்தியார். பிரம்பு வெச்சிருப்பாரு.”&lt;br /&gt;“ஓ. எப்படி இந்தக் கோஷ்டிகளைத் தெரிஞ்சுவெச்சிருக்க?”&lt;br /&gt;“புதுசு இல்லை. கொஞ்சநாள் முன்னால டெபோனர்ல அண்ணன் பேட்டி வந்திருந்தது”&lt;br /&gt;“டெபோனருக்கும் பாஜக மகாஜன் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்?” (மற்ற பெண்களா இருந்திருந்தா, நான் அதைப் படிக்கறேன்னு கூட சொல்லிக்க முடியாது.)&lt;br /&gt;“மரத்தைப் பத்தி எல்லாம் சொல்லி முடிச்சுட்டு, ‘அப்படியாப்பட்ட மரத்துல மாட்டைக் கட்டலாம்’னு சொல்ல முடியாதா? அப்படித்தான். சினிமா எல்லாம் குடும்பத்தோட நடுக் கூடத்துல உட்கார்ந்து நெளியாம பாக்கற மாதிரி இருக்கணும்னு திருவாய் மல‌ர்ந்திருக்காரு.”&lt;br /&gt;“எங்க? டெபோனர்லயா?”&lt;br /&gt;“யா யா”&lt;br /&gt;“அதுசரி!”&lt;br /&gt;:)))))))))&lt;br /&gt;நாங்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த முறையைப் பொருத்த வரைக்கும் எந்தப் புள்ளிலயுமே சேரமுடியாது. இவ்வளவு முரண்களோடயும் ஆனா எப்பவும் யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் பேசக்கூடிய ஒரு ஃப்ரெண்டு கிடைச்சது, எங்க ரெண்டுபேரையும் தனித்தனியா பிரிச்சுகூட வேற யாரும் யோசிக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு நடுவுல இருந்த/ இருக்கற/ இருக்கப் போகிற ஒரே கயிறு நீங்கமட்டும்தான்.“நேத்தி நான் எடுத்து வந்த புக் படிச்சுகிட்டிருக்கியா?”&lt;br /&gt;“ம். 58ம் பக்கம்?”&lt;br /&gt;“என்ன சொல்லியிருக்கான்?[கான் - உங்களைத்தான். பின்ன? :)].&lt;br /&gt;….….&lt;br /&gt;“என்ன நடை இல்லை? எவ்ளோ அறுவையான மேட்டர் எல்லாம்கூட இவ்ளோ அழகா சொல்ல வருது. சரியான பொறுக்கி.” (பொறுக்கி - பொர்க்கி மாதிரி ஒலிக்கணும். சார்-க்கு எப்படி அதோட அர்த்தம் போச்சோ அதுமாதிரி பொறுக்கிக்கு அர்த்தமும் அழகுமே மாறிப் போச்சு.) “இந்தாளு வரலைன்னா நாம ________, ______ களையெல்லாம் படிச்சுகிட்டிருக்கணும். எவ்ளோ கொடுமையா இருந்திருக்கும்?”&lt;br /&gt;:)))))))&lt;br /&gt;அநேகமா எங்க பேச்சு எங்க ஆரம்பிச்சாலும் உங்ககிட்ட வந்து முடிஞ்சுடும் அல்லது அதோட நின்னுடும். அதைவிட பேச ஒன்னும் உலகத்துல ஸ்பெஷலா விஷயமே இல்லாத மாதிரி.&lt;br /&gt;உங்க உடல்நிலை மோசமானதும் இப்ப இணையத்துல இருக்கற யாரையும் விட என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸோ அல்லது இவளோ பக்கத்துல இருந்தா எப்படி இருக்கும்னுதான் நினைச்சுகிட்டிருந்தேன். காலைலேருந்தே அழுதுகிட்டிருந்தாலும் இரவு செய்திகேட்டதும், ‘இந்த தேசிகனுக்கு ஏதாவது உளறிகிட்டே இருக்கணும். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே முடியாது. ஏதாவது மிராகிள் நடக்கும்’னு நம்பினேன். முதல் SMS இந்த ப்ரெண்ட்கிட்டேயிருந்து– “i could hear you weeping dear. enough of it please. on duty. ‘ll talk to you after 12 midnight”&lt;br /&gt;ஆனா நினைச்ச மாதிரி அது ஆறுதலா இல்லை. ஐயய்யோ இது உலகத்துகே இப்ப தெரிஞ்சுபோச்சு. இனிமே எதுவும் மாத்த முடியாது. எல்லாரும் அஞ்சலின்னு பதிவு போடுவாங்களேன்னு பதறிட்டேன். யாரோடயும் பேசப் பிடிக்கலை. முக்கியமா இணையத்துல. பெருசா எதுலயோ தோத்துப் போன மாதிரி. ரூம்ல போய் கதவை சாத்திகிட்டேன். இணைய‌மும் ந‌ண்ப‌ர்க‌ளும் ரொம்ப அந்நியமா தெரிஞ்சாங்க. ஆனா ஆச்சரியமா எங்கப்பா, அம்மா தொலைப்பேசி சொன்ன ஆறுதலும், கோவிந்த் தனக்கு ஃபீவர்னு சொல்லி லீவ் எடுத்து கவனிச்சுகிட்டதும் நான் கொஞ்சம்கூட எதிர்பாராத‌ ஆனா தேவையான ஆறுதலா இருந்தது.&lt;br /&gt;“நம்ப முடியுதா பாரு. அந்தாளுக்கு எனக்குத் தெரிஞ்சு 35 வயசு ஆச்சு. அப்றம் வருஷா வருஷம் அதே தானே வயசாச்சு. எப்படி திடீர்னு 73 ஆகும்?”&lt;br /&gt;எங்க ரெண்டுபேரையும் எல்லாரும் ‘two hearts that beat as one’ன்னு சொல்வாங்க. அதை அன்னிக்கிதான் அவ்ளோ நிச்சயமா உணர்ந்தேன். எனக்கும் தெரியலைன்னு கதறமட்டும் தான் முடிஞ்சது. நீங்களாவது சொல்லியிருக்கலாமில்ல. அழுது அழுது கண் வீங்கி, டாக்டர்கிட்ட காண்பிச்சு, ஜுரம் வந்து அடுத்த இரண்டுநாள் நினைவில்லாம போனது ரொம்ப நல்லாதாப் போச்சு. நடப்பு எதுவும் என் கவனத்துக்கு வரலை.&lt;br /&gt;தாயோடுஅறுசுவை போகும்;தந்தையோடுகல்வி போகும்குழந்தையோடுபெற்ற செல்வப் பெருமை போகும்;செல்வாக்குஉற்றாரோடு போகும்;உடன்பிறந்தாரோடுதோள் வலிமை போகும்;…………எல்லாம் இருக்க,போடா (பொர்க்கி)உன்னோடு இளமை போச்!&lt;br /&gt;எனக்கு உங்களைமாதிரி வாக்மேன்ல பாட்டுக் கேட்கறேன்னு காதுக்குள்ள பாட்டை நேரடியா ஊத்தறதெல்லாம் பிடிக்காது. இசை என்னைச் சுத்தியிருக்கற காத்துல கலந்து, குழைஞ்சு அதுவா என் காதுகளையும் தொட்டுப் போகணும். நிறைய பாட்டு உங்களுக்குப் பிடிச்சவைகளை அப்பப்ப நீங்க சொல்லியிருந்தாலும், இப்ப கொஞ்சம் மட்டும்….&lt;br /&gt;* நித்யஸ்ரீ மகாதேவனோட வீச்சான சாரீரம் &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/NAQg2la8z9.As1NMvHdW/" target="_blank"&gt;இந்தப் பாட்டுக்கு &lt;/a&gt;அழகைச் சேர்த்திருக்கலாம். ஆனா அந்தச் சாரீரமும் கர்நாடக இசையுமே இறுதில திரும்பச் திரும்பச் சொல்லும் பல்லவியோட சங்கதியில அவ்ளோ மென்மையா கேட்கவேண்டிய கேள்வியோட பாவத்தை நீர்த்துப்போகச் செஞ்சுடுதோன்னு எனக்கு ஒரு எண்ணம்.&lt;br /&gt;* டிஜிடலில் செதுக்கிய குரல்னு உண்மையிலேயே சொல்லலாம். &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/BAIgyTjsvd.As1NMvHdW/" target="_blank"&gt;காதல்ல்ல்ல்…. &lt;/a&gt;னு பாடும்போது போத்தலிலிருந்து ஒயினை கோப்பைகள்ல நிரப்பற ஒலி மாதிரி….. உங்களாலதான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும்.&lt;br /&gt;* சாத்திரம் &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/cUmglTFdNt.As1NMvHdW/" target="_blank"&gt;மீறிய கீர்த்தனம்… &lt;/a&gt;&lt;br /&gt;* உங்களுக்குப் பிடிச்சதுங்கற காரணத்தைவிட &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/yACgFeWQRt.As1NMvHdW/" target="_blank"&gt;இந்தப் பாட்டுக்கு &lt;/a&gt;இன்னொரு பெருமை— நீங்க கடைசி வரை காதலிச்சு கைவிடாம வெச்சிருந்த மிஸ் தமிழ்த்தாய்க்கு இந்தப் பாட்டால அங்கீகாரமும் பெருமையும் கிடைச்சது. இந்தப் படத்தோட இந்திப் பதிப்புக்கு பாடல் எழுத ஆரம்பிச்ச கவிஞர், தமிழ்ல பல்லவியோட முதல் வரி அர்த்தம் மட்டும் கேட்டே, “தமிழ் மொழியில் இவ்வளவு ஆளுமையும் சாத்தியமும் இருக்கா?”ன்னு ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம். ஆனா இப்ப எனக்குக் கேக்கும்போதெல்லாம் மனம் அதிருது.&lt;br /&gt;இன்னிக்கி பிறந்தநாள்னு உங்களுக்குப் பிடிச்ச இந்தப் பாட்டெல்லாம் காத்துல ஓடவிட்டுகிட்டு நான் ஸ்ரீரங்கத்துலதான் இருப்பேன். எனக்குத் தெரியும் நீங்க இனிமே எப்பவுமே ஸ்ரீரங்கத்துல தான் இருப்பீங்க. உங்களுக்கும் இதெல்லாம் கேக்குமா?&lt;br /&gt;பி.கு:&lt;br /&gt;1. ‘சுஜாதா என்றதும் உங்களுக்கு நினைவில் வருவது?’ன்னு தமிழோவியத்துக்காக bsubra ஒரு கடிதத்துல கேட்டிருந்தாரு. ஏதாவது ஒன்னு ரெண்டா இருந்தா சொல்லலாம். இருந்தாலும் அந்த ஒத்தை வார்த்தை இந்தப் பதிவுல இருக்குன்னே நினைக்கிறேன்.&lt;br /&gt;2. சாருநிவேதிதா, உங்களை மாதிரி எழுத்தாளரைப் பத்தி எழுதும்போது உங்க எழுத்துலேருந்து எதையெல்லாம் எடுத்துகிட்டோம், கத்துகிட்டோம்னு தான் எழுதணும்னு சொல்றாரு. அப்டியாங் சார்? நீங்களும் எவ்வளவோ முயற்சி செஞ்சு கதைக்கு knot, டிரிக் எல்லாம் சொல்லி என்னை எழுது எழுதுன்னு சொன்னீங்க. நான் எழுதினேனா? நான் என்ன எழுத்தாளரா? இல்லை எல்லாரும் வாத்தியார்னு கூப்பிடற மாதிரி உங்க மாணவியா? ஒரு ரசிகையா எனக்குத் தோன்றதைத்தானே சொல்லமுடியும். நீங்க இருந்து உங்ககிட்ட சாருவைப் போட்டுக் கொடுத்தா, “அதெல்லாம் தேவை இல்லை. நீ பாட்டுக்கு நினைக்கறதை எழுது அவரை அப்றம் அடிச்சுடலாம்!”னு சொல்வீங்க இல்ல, இப்பவும் அப்படி சொல்லுங்க.&lt;br /&gt;3. என்னவோ எல்லாரும் நினைச்சதை எல்லாம் வார்த்தைல கொண்டுவர முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் நினைவுகள் எல்லாம் வார்த்தைகள்ல வந்துடக் கூடாதேன்னு ரொம்ப வடிகட்டி வடிகட்டி எழுதியிருக்கேன். அதே தலைப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-7242550988694960593?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/7242550988694960593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/7242550988694960593'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2008/05/blog-post.html' title='சுஜாதா - ஒரு சமபாஷணை'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-1131109508542445072</id><published>2007-06-22T14:17:00.000-07:00</published><updated>2007-06-22T14:24:09.730-07:00</updated><title type='text'>புத்தகப்பட்டியல் 06-22-07</title><content type='html'>தவறியது :   ( சென்னை லல்லி வீட்டிலும்  மாயவரததிலும் தேடச்சொல்)&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்&lt;br /&gt;காகித மலர்கள் - ஆதவன்&lt;br /&gt;வேடந்தாங்கல் - ம.வே.சிவகுமார்&lt;br /&gt;தரையில் இறங்கும் விமானங்கள் : இந்துமதி&lt;br /&gt;பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன்&lt;br /&gt;அது ஒரு நிலாக்காலம் - ஸ்டெல்லா ப்ரூஸ்&lt;br /&gt;ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் - இரா.முருகன்&lt;br /&gt;சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்&lt;br /&gt;சைக்கிள் முனி - இரா.முருகன்&lt;br /&gt;மாய நதிகள் - ஸ்டெல்லா ப்ரூஸ்&lt;br /&gt;மெல்லினம் - பா.ராகவன்&lt;br /&gt;காமராஜ் - கருப்புக் காந்தியின் வெள்ளை வாழ்க்கை&lt;br /&gt;ஜி.நாகராஜன் சிறுகதைகள்&lt;br /&gt;ஜன கண மண - மாலன்&lt;br /&gt;காதல் படிக்கட்டுகள் - விகடன் பிரசுரம்&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கு :&lt;br /&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் / பின்கதை சுருக்கம் - பா.ராகவன் - கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன் - கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;சுப்ரமணியராஜு கதைகள் - கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;வால்கள் - ராஜேநிதிரகுமார் - கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;அர்த்தமுள்ள அந்தரங்கம் / ரொமான்ஸ்் ரகசியங்கள்  - விகடன் பிரசுரம் கள்ளம், மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்&lt;br /&gt;புனைவின் நிழல் - மனோஜ் ( உயிர்மை)&lt;br /&gt;வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்&lt;br /&gt;நிற்க நிழல் வேண்டும் - வாஸந்தி&lt;br /&gt;இரண்டாம் ஜாமங்களின் கதை   -சல்மா&lt;br /&gt;அடங்க மறு    - திருமாவளவன்&lt;br /&gt;ஒரு மாலையும் இன்னொரு மாலையும்    - சல்மா&lt;br /&gt;இரவு மிருகம்    - சுகிர்தாராணி&lt;br /&gt;அரசூர் வம்சம் - இரா.முருகன்&lt;br /&gt;இருளப்பசாமியும் இருபத்தோரு கிடாய்களும் - வேல. ராமமூர்த்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-1131109508542445072?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/1131109508542445072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/1131109508542445072'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2007/06/06-22-07.html' title='புத்தகப்பட்டியல் 06-22-07'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-7825964002446931030</id><published>2007-05-14T14:51:00.000-07:00</published><updated>2007-05-14T14:54:53.699-07:00</updated><title type='text'>எழுதிப் ப(க)டித்த உரை</title><content type='html'>இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;   இனிய  மாலை வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;                        சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில்  இந்த தமிழ்புத்தாண்டு விழாவை நடத்துவதென்பது எங்கள் தஞ்சாவூரில்  பெண்ணுக்கு கல்யாணம் செய்வது மாதிரி.  பையன் நல்ல பையனா இருக்கணும். கெட்ட பழக்கம் ஏதும் இருக்கக்கூடாது. சம்பந்தி மனசு கோவிக்கக்கூடாது. பாட்டுக் கச்சேரி/ டான்ஸ் எல்லாம் தூள் பறக்கணும். முக்கியமா காப்பி நன்றாக இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;   கிட்டத்தட்ட ஒரு மாதமாக என் நிலைமை கல்யாணத்துக்கு வேலை செய்வது மாதிரி தான் இருக்கிறது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறவரை தமிழ்மன்றத்தில் Chair person என்கிறார்கள். யாரால் சேர்ல உக்காரவே முடியாதோ அவங்களுக்குத்தான் சேர் பர்ஸன்னு பேரு. காமெடியா இல்லை.??!!!  கடந்த ஒரு மாசமா ஆர்னால்டு ஷ்வாசர்நெகர்கிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு தமிழ்மன்ற வேலைதான் பாத்துகிட்டு இருக்கேன். சாக்ரமண்டோல நிறைய பேரு என்னுடைய ஈமெயில் ஐடியை ஸ்பாம் லிஸ்ட்ல சேத்துட்டாங்க. செல்போன்ல என் நெம்பர் தெரிஞ்சாலே தலையை சுத்தி ·போனை தூக்கி வீசிடுறாங்க. அதுவும் கடந்த மூன்று நாட்களாக மூர்த்தியும், சந்தானமும் எப்ப ·போனை எடுத்தாலும் நம்பரைக் கூட பாக்காம, "சொல்லுங்க சுந்தர்" ன்னு சொல்ல ஆரமிச்சிட்டாங்களாம்.  நிலைமை அப்படி ஆயிட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;    சரி விஷயத்துக்கு வர்றேன். தமிழ்மன்றம் சாக்ரமண்டோல காம்ப்ளான் குடிச்ச குழந்தை மாதிரி வளர்ந்துகிட்டே இருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஒவ்வொரு வருடமும்  நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்களோட எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.நிகழ்ச்சியை நடத்தறதுக்கு, எங்களுக்கு உதவி செய்ய,  ·போட்டோ எடுக்க என்று தானாக முன் வந்து உதவி செய்யும் தன்னார்வலர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கிட்டே இருக்கு. நிகழ்ச்சிகளின் தரமும் மெள்ள மெள்ள உயர்ந்து கொண்டே இருக்கிறது.  இத்தனைக்கும் ஸ்கூல் எக்ஸாம் டைம். இருந்தாலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், குழந்தைகளும் ஏகப்பட்ட முறை ப்ராக்டீஸ் பண்ணி  உங்களையெல்லாம் அசத்து அசத்துனு அசத்துறதுக்கு ரெடியா இருக்காங்க. ஷோவை பாத்து என்ஜா¡ய் பண்ணுங்க. ஏகப்பட்ட குழந்தைகள் நிகழ்ச்சிகளோட ·ப்யூஷன் ம்யூசிக், மற்றும் சாக்ரமண்டோவின் "பழம்பெரும்"  கலைஞர்கள் பங்குபெறும் கதம்பப் பாமாலை, கலாட்டா கல்யாணம் என்கிற காமெடி ட்ராமா போன்றவைகளும் உண்டு.&lt;br /&gt; இந்த வருஷம் சில புதுமைகள் பண்ணி இருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;* Event Brochure ·புல்லா  கலர்லேயே போட்டு இருக்கோம். பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. முக்கியமான தமிழ் லிங்க்ஸ் போட்டிருக்கோம். பாருங்க. கம்ப்யூட்டர்ல தமிழ் யுனிகோட் ·பாண்ட் வெச்சு எப்படி தமிழ் எழுதறதுன்னு ஒரு அருமையான லிங்க் இருக்கு.இதெல்லாம் "டாமில் என்க்கு தெராது" ங்கிறதை பெருமையா சொல்லிக்கிறவங்களுக்கு இல்லை. ஓலைச்சுவடி, பேப்பர்ங்கிற வாகனத்தை எல்லாம் கடந்து கணிணி உலகத்துலயும் தமிழ் வாழணுன்னு நினைக்கிற, " என்றுமுளதென்தமிழ்" என்று பரவசப்படுகிற சராசரி தமிழனுக்கு...  &lt;br /&gt;&lt;br /&gt;* குலுக்கல் சீட்டு முறையில் தேந்தெடுக்கப்படும் அதிர்ஷ்ட சாலிகளுக்காக Raffles program  இருக்கு. கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன. இதுக்கு முதல்ல நமீதா வரதா இருந்தாங்க. சரி..அடுத்த முறை பாத்துக்கலாம்னு லோக்கல் செலிப்ரிட்டிய வச்சு சமாளிச்சு இருக்கோம். டிக்கிட்டு ஒர் ரூவாதான். ஒருத்தரே எத்தனை டிக்கட் வேணும்னாலும் வாங்கலாம். கலக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;* நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஏகப்பட்ட இந்த முறை ஏகப்பட்ட பேர் ஆர்வம் காட்டினாங்க. ஆனா கடைசி தேதிக்கு அப்புறம் வந்ததுனால, கனத்த மனசோட நிறைய பேருகிட்ட சாரி. முடியாதுன்னு சொல்ல வேண்டிய நிலைமை. அதனால On the spot performance அப்படின்னு ஒண்ணு  பண்ணப் போறோம்.  எல்லா நிகழ்சிகளும் முடிஞ்சு டின்னர் டயத்துல பெரியவர்கள்/ குழந்தைகள்  யார் வேணா ஸ்டேஜ்ல வந்து தன் திறமைகளை காட்டலாம். மக்கள் டின்னர் சாப்பிட்டுகிட்டே உங்க நிகழ்ச்சியையும் என்ஜாய் பண்ணுவாங்க. டின்னருக்கு முன்பாக நடந்த அத்தனை நிகழ்ச்சிகள்ளயும்  ஸ்டேஜ்ல perform பண்ண முடியாதவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வழக்கமா கொடுக்கிற சாப்பாடு வகை இல்லாம இந்த முறை புதுசா  ட்ரை  பண்ணி இருக்கோம்.   அது என்னங்கிறது சர்ப்ரைஸ். சாப்பாட்டு நேரத்துல தெரிஞ்சுக்குவீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*  வந்திருக்கின்ற மக்களின் ஈமெயில் முகவரிய கலெக்ட் பண்றத்துக்கு ஒரு பதிவேட்டுடன் அபிஷேக்பச்சன் வரப்போறாரு.  அடுத்த நிகழ்ச்சிக்கு உங்களை மறக்காம கூப்பிடத்தான் இந்த ஏற்பாடு. கொஞ்சம் விவரங்கள் தந்து உதவுங்கள். உங்களுடைய ஈமெயில் ஐ.டி பத்திரமாக பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்த வருஷ நிகழ்ச்சியை படமெடுக்க நமக்கு ஒரு professional photograpaher தமிழ் கம்யூனீட்டிலேர்ந்து கெடைச்சிருக்கார். நிகழ்ச்சி ·போட்டோ வேண்டுபவர்கள்  எங்களை தொடர்பு கொள்ளுங்கள்,நிகழ்ச்சி சம்பந்தமான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். இன்னமும் நல்ல முறையில் நடத்த அது எங்களுக்கு உதவும்.  &lt;a href="http://www.sactamil.org"&gt;Sactamil.org &lt;/a&gt;என்கிற எங்கள் இனையதளம் சம்பந்தமான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; முக்கியமான அறிவிப்பு இன்னொண்ணு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;     &lt;a href="http://groups.yahoo.com/group/SacTamil/"&gt;Sactamil&lt;/a&gt; ன்னு ஒரு யாஹ¥ க்ரூப நடத்திகிட்டு உங்களை எல்லாம் தொல்லை படுத்திகிட்டு இருக்கிற சுந்தர் நான் தான். லோக்கல் தமிழ் மக்களுக்கு ஒரு தொடர்பு சாதனம் இருக்கணுங்கிரதுக்காக தான் அதை ஆரம்பிச்சேன். குறைவான புகார்களோடு அது போய்க்கிட்டு இருக்கு.  மற்ற அறிவிப்புகள், பகிர்தல்களோட  தமிழ்மன்றம் தொடர்பான நிகழ்ச்சி அறிவிப்புகள் அதுல வரும். ஆணா தமிழ்மன்றத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க என் தனி முயற்சி. நான் தமிழ்மன்ற பொறுப்பிலேயும் இருகறதனால், நெறைய பேர் அந்த குழப்பத்துல இருக்காங்க. அதனை தெளிபடுத்தவே இந்த விளக்கம்.     &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கையேட்டில் விளம்பரம் தர முன் வந்திருக்கின்ற அன்பர்கள் அவைவருக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். அவர்கள் மூலம் கிடைக்கின்ற விளம்பர வருவாயை வைத்துத்தான் நிகழ்சியை நல்ல முறையில் நடத்த முடிகிறது. அப்படியும்  கூட நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்ர்கூட டிக்கெட் வாங்கித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. பங்கு கொள்கிறவர்கள் அத்துணை பேரும் சேர்த்து  நூற்று பத்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கினால், ஏற்கனவே பத்து வயதின் கீழுள்ள குழந்தைகளுக்கு வழங்கியுள்ள இலவச அனுமதியுடன் சேர்த்து, அது எமக்கு மேலும் பளுவாகி விடும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-7825964002446931030?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/7825964002446931030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/7825964002446931030'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2007/05/blog-post.html' title='எழுதிப் ப(க)டித்த உரை'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-2850057922096432926</id><published>2007-05-03T22:36:00.000-07:00</published><updated>2007-05-03T22:39:02.891-07:00</updated><title type='text'>Thaks Sujatha/AV</title><content type='html'>இலக்கணத்தை மாற்றுகிற காரியமும்&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கணத்தை உடைக்கிற செயலும்&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கணத்தை அறியா பலவீனத்திலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து அமைதல் கூடாது -- ஜெயகாந்தன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-2850057922096432926?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/2850057922096432926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/2850057922096432926'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2007/05/thaks-sujathaav.html' title='Thaks Sujatha/AV'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-3924701009825437453</id><published>2007-04-19T13:46:00.000-07:00</published><updated>2007-04-19T13:49:23.569-07:00</updated><title type='text'>முனைந்து தொழில் செய்!</title><content type='html'>[கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆண்டுவிழா மலருக்காக ஜனவரி 2007-ல் எழுதிய கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;]நான் பள்ளியில் படிக்கும்போது 'டாக்டராக வேண்டும்', 'இஞ்சினியராக வேண்டும்' போன்ற கனவுகள்தான் விதைக்கப்பட்டன.நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல பொறியியல்/மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும். அது போதும்.1970, 1980களில் இதுபோன்ற எண்ணம் மாதச்சம்பள மத்தியதர வகுப்பினரிடையே இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர்களது கனவுகள் குறுகியவை. மாதச்சம்பளம் மட்டும்தான் அந்தக் கனவுகளில் முதன்மையாக இருந்தது. பொறியியல் படித்தால் உயர்ந்த வேலை கிடைக்கும். மருத்துவம் படித்தால் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்கும். அல்லது, மாதச்சம்பளமாக இல்லாவிட்டாலும், சொந்தத் தொழிலில் தினசரி வருவாய் இருக்கும். மனிதர்கள் உள்ளவரை வியாதிகளும் உண்டுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் தொடங்குவது என்பது இவர்களது கனவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. தொழில் தொடங்க முதல் வேண்டும். வசதியான பின்னணி இல்லாத நிலையில் அதைப்பற்றி ஏன் கனவு காண்பானேன்?தொழில் தொடங்க மனோதிடம் வேண்டும். லாபம் இருக்கலாம், ஆனால் நஷ்டமும் இருக்குமே? கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது? கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது? கடன் வாங்குவதே தவறு என்ற பின்னணியில் வந்தவர்களாயிற்றே இவர்கள்?தொழில் செய்வதானால் அரசாங்கக் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் தில்லுமுல்லுகள் செய்ய வேண்டியிருக்கும். யாரோ ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீசரிடம் கைகட்டி, வெட்கி, தலைகுனிந்து நிற்பதற்குபதில் நாமே அந்த ஆஃபீசராக ஏன் இருக்கக்கூடாது?தொழில் செய்வதென்றால் நிறைய பேரை வேலைக்கு வைத்து மேய்க்க வேண்டும். அவர்கள் பிரச்னை செய்யும் ரகமாக இருப்பார்கள். கொடி தூக்குவார்கள். விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? நம் காசைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?இப்படி எதை எடுத்தாலும் சமாதானம் சொல்லி, பிரச்னைகளை மட்டுமே முன்னுக்கு நிறுத்தி, நத்தை கூட்டுக்குள் உடலைச் சுருக்கிக்கொள்வதைப்போல தானுண்டு, தன் வேலையுண்டு, மாதச்சம்பளமுண்டு என்று இருக்க, வாழப் பழகிக்கொண்ட மக்கள்.இவர்களிடத்தில் இருந்துதான் புதிய தொழில்முனைவோர் முளைக்கப்போகிறார்கள் என்று இவர்கள் அன்று அறிந்திருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*தொழில்முனைவோர் என்ற சொல் ஆங்கிலச் சொல்லான 'entrepreneur' என்பதற்கு இணையாகத் தமிழில் புழங்கப்படுகிறது. இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. எந்தக் கலாசாரத்திலும் முனைந்து தொழில் செய்வோர் இருந்து வந்துள்ளனர். எனவே மொழியைப் பற்றியோ கலாசாரத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டாம். இந்தச் சொல்லின் தமிழ் வேரை ஆராய்வதற்குபதில் ஆங்கிலச் சொல்லுக்கு இன்று கொடுக்கப்படும் பொருளை ஆராய்வது உபயோகமானது.ஒரு தொழில்முனைவர், தொழிலில் உள்ள அபாயத்தைக் கண்டு (ரிஸ்கைக் கண்டு) பயப்பட மாட்டார். சொல்லப்போனால், தொழில் அபாயம் அவருக்குப் பிடிக்கும். மலையேற்றம், பஞ்சீ ஜம்ப்பிங் (எலாஸ்டிக் கயிறைக் காலில் கட்டிகொண்டு மலையிலிருந்து தலைகீழாகக் குதிப்பது), கடல் அலைகள்மீது சர்ஃப் போர்டில் மிதந்து செல்வது, ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள், அந்த விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலில் ஜிவ்வென்று பரவும் அட்ரினலின் ஹார்மோன் கொடுக்கும் விறுவிறுப்பு ஆகியவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்களோ அதேபோன்று தொழில் அபாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் புதியபுதிய தொழில்களில் இறங்கி 'ஒரு கை' பார்ப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு தொழில்முனைவர் புதுமையாக ஒன்றைச் செய்வார். யாரும் எதிர்பார்க்காத வாய்ப்பை இவர் மட்டும் கவனிப்பார். அந்த வாய்ப்பை ஒரு கருவியாக, ஒரு சேவையாக, ஒரு முழுதான தொழிலாக மாற்ற முனைவார். ஹென்றி ஃபோர்ட் வருங்காலத்தில் கார்களுக்குப் பெரும் தேவை இருக்கும் என்பதைக் கண்டறிந்து மிக அதிகமான எண்ணிக்கையில், தரமான, மக்கள் விரும்பும் கார்களை எப்படி உருவாக்குவது என்ற செயல்முறையைக் கண்டுபிடித்தார் அல்லவா? அவர் ஒரு தொழில்முனைவர். அவருக்கு முன்னும், அவர் காலத்திலும் பலரும் கார்களைச் செய்தனர். ஆனால் யாருக்கும் ஃபோர்டுக்குத் தோன்றிய தொழில்முறை (அசெம்ப்ளி லைன்) தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொழில்முனைவர் 'முதலாளி' என்ற பெயர் குறிப்பிடுவதுபோல நடந்துகொள்ள மாட்டார். அதாவது அலுவலகம் வந்து, பிறரை அதிகாரம் செய்து, மாலை ஆனதும் கிளப்புக்கு சீட்டாடச் செல்லும் சீமான் அல்லர் இவர். அடிமட்டத் தொண்டன் செய்வதைச் செய்யக்கூடியவர். அலுவலகத்தில், தொழிற்சாலையில் உள்ள அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்த்து அவர்களிடத்தில் மாறாத விசுவாசத்தை உருவாக்குபவர். தன்மீது மதிப்பை உருவாக்குபவர்.ஒரு தொழில்முனைவர் பணத்தில் புரளவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் மிக உயரத்தை எட்டிய தொழில்முனைவர்கள் யாருமே பணக்காரர்களாகப் பிறந்ததில்லை. நடுத்தரவர்க்கத்தினர்தான். அம்பானி, நாராயண மூர்த்தி, பில் கேட்ஸ், ஹென்றி ஃபோர்ட் என்று யாராக இருந்தாலும் சரி. எனவே தொழிலைத் தொடங்க பெரும்பணம் என்பது தேவையே இல்லை. ஆனால் தொழில்முனைவோர் பணத்தைப் பிறரிடமிருந்து எப்படிப் பெறுவது என்பதை அறிந்திருப்பார்கள்.ஒரு தொழில்முனைவர் தன் வாழ்க்கையில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக வெற்றியைப் பெற வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் பலமுறை இவர் தோல்வி அடைந்திருப்பார். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டிருக்க மாட்டார். மனத்தளவில் எந்தவிதத்திலும் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்.*மேற்கு உலகம் தொழில்மயமான ஆரம்பகாலத்தில் நிலச்சுவான்தார்கள்தாம் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள். பின்னர் தொழிற்சாலையில் பொருள்கள் உற்பத்தி செய்யும் முதலாளிகள் என்ற தனிவர்க்கம் உருவானது. நிலச்சுவான்தார்களைவிட இவர்கள் வலுவான நிலையை அடைந்தார்கள். எப்படி நிலச்சுவான்தார்கள் தங்களிடம் வேலை செய்யும் பண்ணையாள்களை நசுக்கிச் சுரண்டினார்களோ, அதேபோல ஆரம்பகாலத்தில் தொழில் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள். ஆனால் நாளடைவில் அரசுகள் இயற்றும் சட்டங்களாலும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு உருவாக்கிய தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் நிலைமை முன்னெறியுள்ளது. ஆனால் தொழில்முனைவோர் தொடங்கும் தொழில்கள் அனைத்துமே தொழிலாளர்களையும் முதலாளிகளாகக் கருதும் தன்மை வாய்ந்தது. இந்தத் தொழில்கள் பலவும், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் எனப்படும் முறைமூலம் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரையும் (அல்லது பலரையும்) நிறுவனத்தின் பங்குதாரர்களாகச் செய்கிறது. முதலாளி, தொழிலாளர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கும் நிறுவனங்கள் மட்டுமே நாளடைவில் நிலைத்துநிற்கும்.*இந்தத் தொழில்முனைவோர் என்ன மாதிரியான தொழிலைச் செய்கின்றனர்? இதற்கு எத வரைமுறையும் கிடையாது. சோப்புத்தூள் செய்யலாம். எலெக்டிரானிக் கருவிகளைச் செய்து விற்கலாம். பொம்மை செய்யலாம். சாக்லேட் செய்யலாம். தலைமுடி வெட்டும் சலூன்களை நாடெங்கும் நிர்மாணிக்கலாம். நாடெங்கும் சுகாதாரமான மொபைல் கழிப்பிடங்களைக் கட்டி கட்டண முறையில் செயல்படுத்திப் பணம் செய்யலாம்.அட, இதில் என்ன புதுமை உள்ளது? நாட்டில் சோப்புத்தூளே இல்லையா? சாக்லேட் இல்லையா? இதென்ன என்னைப்போய் அம்பட்டன், தோட்டி வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனிப்போம்.புதுமை என்பது புதிய கருவியைச் செய்வதில்தான் உள்ளது என்று நினைக்காதீர்கள். ராக்கெட் செய்தாலும் ரப்பர் பேண்ட் செய்தாலும், செய்வதில் ஏதேனும் புதுமை, அதனை விற்பனை செய்வதில் ஏதேனும் புதுமை, அதன்மூலம் மக்களுக்கு அதிகப்படி நன்மை - இதுதான் தொழில்முனைவோருக்கு அவசியம். நம் நாட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்க தேங்காய் நார், சாம்பல், கரித்தூள் என்று இதுநாள்வரை பயன்படுத்தி பாத்திரங்களை வீணடித்தனர். இப்பொழுது ஸ்காட்ச் பேட், திரவ சோப் என்று வந்துள்ளன அல்லவா? ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா? அது புதுமை. இந்த முறையைக் கண்டுபிடித்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது தொழில்முனைவரின் திறமை.அடுத்து, ஒரு தொழில்முனைவர் தான் செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார். இது அவசியமா, தேவை உள்ளதா, ஒரு குறிப்பிட்ட முறையில் இந்தச் சேவையைத் தருவதன்மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கமுடியுமா? அவ்வளவுதான்.*இந்தத் தொழில்முனைவோர் எங்கிருந்து உருவாகின்றனர்? எப்படி உருவாகின்றனர்? இதற்கு என்று தனியான படிப்பு ஏதெனும் உள்ளதா?இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன், புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாகவே இருந்தனர். தொழில்களிலும் பெருமளவு புதுமையோ திறமையோ இருக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்புகளைப் பெற மூலதனம் தேவைப்பட்டது. வங்கிகள், வென்ச்சர் கேபிடல் ஆகியவை இல்லாத நிலையில் பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சுதந்தரத்துக்குப் பிறகும் இதே நிலைதான் தொடர்ந்தது.நடுநடுவே ஓரிரு கீழ்மட்ட, நடுத்தரப் பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களும் தங்களது விடாமுயற்சியின்மூலம் தொழில்முனைவோராக மிளிர முடிந்தது.ஆனால் 1990களுக்குப் பிறகு தொழிமுனைவோராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்பொழுது அதிகத்தேவை நல்ல படிப்பு, உலக ஞானம், கம்யூனிகேஷன் திறன், ஆர்வம், விடாமுயற்சி ஆகியவையே. கொஞ்சம் பணம் இருந்தால் போதும். கொஞ்சம் என்றால் எவ்வளவு? ஓரிரு லட்சங்கள் இருந்தால்கூடப் போதும். அதனைவிடக் குறைந்த பணத்தைக் கொண்டும் தொழில் தொடங்கமுடியும்.எந்தப் பின்னணியிலிருந்து வந்திருக்க வேண்டும்? எந்தப் பின்னணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுவாகவே பெரு நகரங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறு கிராமங்களில் மிகக்குறைந்த வாய்ப்புகள். இது இன்றைய நிலை. இந்த நிலை அடுத்த சில வருடங்களில் மாற்றம் அடையலாம்.இதற்கென படிப்புகள் ஏதும் உள்ளனவா? சில கல்வி நிறுவனங்கள் Entrprenuership துறையில் பாடங்களை நடத்துகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதுபோன்ற பாடங்கள் அபத்தமானவை என்றே நினைக்கிறேன். சொல்லிக்கொடுப்பதால் தொழில்முனையும் திறன் வந்துவிடாது. பிற தொழில்முனைவோரின் வாழ்க்கையைக் கூர்ந்து படிப்பதாலும், அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாலும், தண்ணீரில் குதித்து தானே நீந்தக் கற்றுக்கொள்வதாலுமே இது கிடைக்கிறது.*மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, கல்லூரிக்குப் போவதற்கு முன்னமேயே தங்கள் எதிர்காலக் கனவுகளைக் காணத் தொடங்குகிறார்கள். தொழில்முனையும் கனவு அந்த நேரத்திலேயே வந்துவிடவேண்டும். டாக்டராகுபவர்கள் டாக்டராகட்டும். இஞ்சினியர் ஆகவிரும்புவோர் இஞ்சினியராகட்டும். ஆனால் இவர்களுக்கு வேலை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழில்முனைவோர் ஆக ஒரு வகுப்பின் 5 சதவிகிதம் மாணவர்களாவது முயற்சி செய்யவேண்டும்.வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம் நம் இளைஞர்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளைத் தரப்போகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி முனைந்து தொழில் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2007/04/blog-post_117691661051865199.html"&gt;Badri &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-3924701009825437453?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/3924701009825437453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/3924701009825437453'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2007/04/blog-post.html' title='முனைந்து தொழில் செய்!'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-1108785532592964365</id><published>2007-02-22T19:52:00.000-08:00</published><updated>2007-02-22T19:53:32.257-08:00</updated><title type='text'>Sujathoughts</title><content type='html'>திருவரங்கத்தில் வசிக்கும் என் தம்பி எஸ்.ராஜகோபாலன், தான் படிக்கும் நல்ல கட்டுரைகளை எனக்குத் தவறாமல் அனுப்புவார். இந்த முறை ‘டைம்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றை அனுப்பியிருந்தார். உள்ளுணர்வு, மூளையின் வரைபடம், மூளை எப்படித் தீர்மானிக்கிறது... இது போன்ற விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;100 பில்லியன் நியூரான்கள் சேர்ந்து ‘நான் இருக்கிறேன்’ என்கிற உள்ளுணர்வை எப்படி ஏற்படுத்து கின்றன என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்காக நவீன ஸ்கேன் முறைகளைப் பயன்படுத்தும்போது, சில ஆச்சர்யமான முடிவுகளுக்கு வந்திருக்கி றார்கள்.&lt;br /&gt;தெரிந்த ஓர் இடத்தையோ முகத்தையோ கற்பனை செய்யும்போதும், அதே இடத்தை நேரில் பார்க்கும் போதும் அதே நியூரான்கள் இயங்குகின்றனவாம். இதிலிருந்து எண்ணம் என்பதும், செயல் என்பதும் மூளைக்குள் தொட்டுக்கொள்கின்றன என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுணர்வு என்பது என்ன? நான் என்றால் என்ன? பச்சை, நீலம் என்பதெல்லாம் நிறங்கள். அந்தப் பச்சைத் தன்மை அல்லது நீலத் தன்மை என்கிற சமாசாரம் மூளையில் எப்படிப் பதிவாகியிருக் கிறது? பச்சையைப் பார்ப்பதும் அதைக் கற்பனை செய்வதும் ஒன்றா, வேறு வேறா?&lt;br /&gt;100 பில்லியன் நியூரான்கள் மூளையில் உள்ளன. அவை அனைத்தும் தம்முடன் இணைந்து, பின்னிப் பிணைந்து இருக்கும் அந்த ஒரே ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டில்தான் நீங்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறீர்கள். மூளையில் சந்தோஷம், நிம்மதி போன்ற உணர்ச்சிகளை விளைவிக்கும் நியூரான் பிரதேசங் களை எஃப்.எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் கண்டறிய முடிகிறது. இப்படி மூளையின் பல பேட்டைகளை சிந்தாதிரிப்பேட்டை மாதிரி மேப் வரைந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்த பிட்சுக்களைக்கூட ஸ்கேன் பண்ணியிருக்கிறார்கள். 10,000 மணி நேரம் தியானத்தில் இருக்கும் புத்த பிட்சுக்கள் தங்கள் மூளையின் நிம்மதிப் பிரதேசங்களை அதிகரித்துக்கொண்டு இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;ஒரு நிமிஷத்துக்கு 750 மில்லி ரத்தம் பாயும் மூளையில் ஏற்படும் டென்ஷன் நிறைந்த வாழ்வில், மன அழுத்தத்தைக் குறைக்க ஏழு எளிய வழிகள் உள்ளன.&lt;br /&gt;1. நீண்ட மூச்சு விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. விடுமுறையில் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நண்பர்களை அதிகரியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தவறாமல் தேகப் பயிற்சி செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. பழம் சாப்பிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சீக்கிரம் தூங்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பிடித்தமானதைச் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks : &lt;a href="http://www.vikatan.com/av/2007/feb/28022007/av0803.asp"&gt;vikatan&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-1108785532592964365?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/1108785532592964365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/1108785532592964365'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2007/02/sujathoughts.html' title='Sujathoughts'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-114685209456036501</id><published>2006-05-05T10:59:00.000-07:00</published><updated>2006-05-07T23:45:46.503-07:00</updated><title type='text'>Thanks Cheran</title><content type='html'>பூக்களின் நறுமணம் ஊர் புகழும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்களின் புழுக்கம் யாரறிவார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு யானை நடந்து செல்லும் போது அதன் காலடியில் நசுங்கிச் சாகும் சிற்றெறும்புகள் பற்றி சரித்திரம் பதியாது. அப்படி &lt;em&gt;ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் இருக்கிற காயங்கள், சோகங்கள், தியாகங்கள் அவரவர் மனமே அறியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;என் ‘பாண்டவர் பூமி’க்கு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான். கலகக்காரர். சமகாலச் சினிமாவில் என்னைப் பாதித்த நல்ல படங்களில் ஒன்று... தங்கரின் ‘அழகி’. ஒரு நாள் தன் புதிய படத்தின் கதையை என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் தங்கர். ‘‘நல்லா இருக்கு தங்கர்’’ என்ற என்னிடம், ‘‘எப்போ ஷ¨ட்டிங் போலாம்?’’ என்று கேட்டார். முதலில் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அட, இதுல நீதாம்ப்பா நடிக்கணும். உன்னைவிட்டா இதுக்கு நான் வேற யாரை யோசிக்கிறது?’’ என்றார் சாதாரணமாக. ‘‘என்னது... நான் நடிக்கிறதா? ஹலோ, ஆளைவிடுங்க. எனக்கு நடிக்கவெல்லாம் வராது’’ என்றேன் கூச்சத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பாரு, நான் கதாநாயகன் தேடி வரலை. இந்தக் கதையைச் சொல்ல ஒருத்தன் வேணும். அவ்ளோதான். வீட்ல ரோட்ல நாம பார்க்கிற சாதாரணமான பையனா இருக்கணும். நீ ஷ¨ட்டிங் ஸ்பாட்ல மத்தவங் களுக்கு நடிக்கச் சொல்லிக் குடுக்கிறதை நானும் பாத் திருக்கேன், அது போதும் எனக்கு’’ என என்னைச் சம்மதிக்கவைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறை மேக்&amp;அப் போட்டபோது, நிஜமாகவே கூச்சமாக இருந்தது. எனக்கு ஆதரவாக நின்று தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் சாரும் தங்கர்பச்சானும் என் வாழ்வில் இன்னொரு அத்தியாயத்தை ஆரம்பித்துவைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;‘சொல்ல மறந்த கதை’ பற்றி சொல்ல மறக்கக் கூடாத ஒரு நினைவு உண்டு எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடித்த முதல் படம். அபிராமி தியேட்டரில் முதல் காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, அப்பா, தங்கைகள், மனைவி, குழந்தைகள் என எல்லோரையும் அழைத்துப் போயிருந்தேன். அபிராமி தியேட்டரின் உரிமையாளர் ராமநாதன் வந்தார். என் அப்பா மட்டும் கும்பிட்டபடியே நிற்க, ‘‘சார்! இது எங்க அப்பா’’ என்றேன். ‘‘வணக்கம், வணக்கம்’’ என்று அருகில் வந்தவரிடம், அப்பா லேசான பதற்றத்துடன் ‘‘மொதலாளி என்னைத் தெரியுதுங்களா?’’ என்றார் கும்பிட்ட கைகளுடன். ‘‘நான் பாண்டிங்க. மதுரப் பக்கம் பழையூர்பட்டிக்காரன். அங்க வெள்ளலூர்ல காளையப்பா டூரிங் டாக்கீஸ் ஆபரேட் டருங்க. இங்க நம்ம தியேட்டர்ல ரெண்டு வருஷம் ஆபரேட்டரா இருந்தேனுங்க. உங்க கையால சம்பளம் வாங்கி யிருக்கேன் மொதலாளி’’ என்றதும், பதறி அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்ட ராமநாதன் நெகிழ்ந்துபோனார்.&lt;br /&gt;‘‘அய்யா, நீங்க கொடுத்துவெச்சவங்க. எத்தனை பேருக்குக் கிடைக்கும் சொல்லுங்க, இந்தக் கொடுப்பினை. நீங்க வேலை பார்த்த தியேட்டர்லயே இன்னைக்கு உங்க பையன் நடிச்ச படம் ஓடுது. எல்லாம் உங்க மனசுதாங்க’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிந்து வெளியே வந்தோம். என் பின்னாலேயே வந்தார் அப்பா. என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். ‘‘என்னப்பா?’’ என்றேன். எதுவுமே சொல்லாமல், எல்லாம் சொல்லும்படியாகச் சிரித்தார் கண்கள் பனிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;ஆணுக்குப் பெண் எப்போதும் அதிசயம்தான். ‘அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது: அபிமானம் மாறாது’ என்கிற தேவதாஸின் குரலே மிகச் சரியான தீர்மானம். ‘ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது’ ; இது கவியரசர் எப்போதோ எழுதிய பாடல். எப்போதும் பொருந்தும் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வயசும் மனசும் விழிக்கும் வேளையில் முளைக்கிறது அவரவர்க்கான முதல் சூரியன்! பெயர் தெரியாப் பறவைகளின் சிறகசைப்பில் திளைக்கிறது இளமை வானம். பயத்திலும் தயக்கத்திலும் உதிர்கின்றன சிலபல நட்சத்திரங்கள். வழி நெடுக முளைக்கின்றன கனவுத் தாவரங்கள். பூக்களின் நறுமணத்தில் கிறுகிறுக்கின்றன இதயக் கூடுகள். நழுவவிட்டதில் பிரபஞ்சமெங்கும் கோடிக்கோடி ரத்தச் சில்லுகள்.நெஞ்சை அறுக்கின்றன ப்ரியப் பறவைகளின் நினைவுப் பாடல்கள்!&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இப்படிக் கடந்த வாழ்வில் இழந்த தேவதைப் பெண்கள் குறித்த மென்சோகங் கள் இருக்கின்றன எல்லோரிடத்திலும். ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்த கதை’ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு பெண்ணுக்கும் அதிக மாக நேசித்தவர்களே இங்கே நிறைய. அப்படி நம் வாழ்வை நிறைத்த காதல்கள் பற்றிய ‘ஆட்டோகிராஃப்’ பண்ண ஆசைப் பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னணியில் இருக்கும் நாயகர்கள் சிலரிடம் கதை சொன்னேன். ‘‘ரொம்ப ஃபீலிங்கா இருக்கு சார். ஆனா, இது கொஞ்சம் ரிஸ்க்கா இருக்குமோ?’’ எனச் சிலர் தயங்கினார்கள். ‘‘தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண் டுன்னு நம்ம படம் வருஷத்துக்கு ரெண்டு மூணாச்சும் ரிலீஸா கணும். நீங்க சொல்ற தைப் பார்த்தா, வெயிட் குறைச்சு லாங் ஹேர் வளர்த்து ஒரு வருஷம் ஓடிப் போயிருமே’’ எனச் சிலர் ஆர்வம் இருந்தும் ஒதுங்கினார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல், நான் உடைந்து திரிந்தபோது, எனக்கு உரமாக இருந்தவர்கள், நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நீயே பண்ணிடு சேரா!’’ என்றனர். ஒரு நடிகனாகத் தொடர்வது பற்றிய யோசனையே இல்லை எனக்கு. ‘‘அட, இது உன் வாழ்க்கை. ஒரு சாதாரண பையனோட கதை. தைரியமா செய்’’ என்றனர். அதன் பிறகு நான் யோசிக்கவே இல்லை. ஆனால், இந்தக் கதைக்குப் புதிதாக ஒரு தயாரிப்பாளர் தேட எனக்கு மனம் இல்லை. அது மறுபடி என்னைச் சோர்வின் உச்சத்துக்குக் கொண்டுபோய் நிச்சயம் குப்புறத் தள்ளிவிடும் என்று தெரியும். நானே தயாரிக்க முடிவு செய்தேன். ‘ஆட்டோ கிராஃப்’ படம், எனக்கு மிக நல்ல இதயங்களையும் மிகக் கொடூர முகங்களையும் ஒருசேர அறிமுகப் படுத்திய அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ பாடலுக்கு, குளுமையான ரசனை களைக் குவித்துக் காட்சி பிரித்தோம். ஆதாம் &amp; ஏவாள் ஆப்பிள் முதல், தமிழ்ச் சேலை வரை ஒவ்வொரு காட்சியையும் கவிதைப்படுத்தினோம். அதில் ஒன்று இளவரசனாக நான் வாள் வீசி விளையாடும் அரண்மனைக் காட்சி. மேக்&amp;amp;அப் ரூமில், அத்தனை பெரிய கண்ணாடிக்கு முன்னால் அரசிளங்குமரனாக மாறிக்கொண்டு இருந்தேன். என்னைப் பார்க்க எனக்கே பெருமிதமாகவும் வெட்கமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கில் நின்று நான் வாள் வீசிப் பழகும்போது, ‘‘சார், ஊர்லேர்ந்து உங்க ஃபாதர் வந்திருக்காருங்க’’ என்றனர். திரும்பிப் பார்த்தால், தன் பிறவிப் பெரும் பயனை அடைந்துவிட்ட பரவசத் தில், என் அப்பா!&lt;br /&gt;‘‘சேரா, அப்பிடியே வாத்தியார் போலவே இருக்கப்பா. ‘ஆயிரத்தில் ஒருவன்’கெணக்கா’’என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘உத்தமபுத்திரன் சிவாஜி மாதிரி இருக்கேன்னு சொல் றாங்க’’ என்றேன்.&lt;br /&gt;‘‘யாரு சொன்னா? சும்மா ஏமாத்துவாய்ங்கப்பா’’ என்ற எம்.ஜி.ஆர். ரசிகர் கேட்டார் என்னிடம் ஆசையாக... ‘‘ஏம்ப்பா, ஒம் பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை இதுதான்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும் என்பார்கள். சினிமாவில் நான் சம்பாதித்தது நம்பிக்கை. ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் வெற்றி, என்னை இன்னும் இன்னும் உயரம் தொட, ஆழம் தேட அழைத்துச் செல்கிறது. நம்பிக்கை விதைப்பதே நல்ல படைப்பு எனத் திடமாக நம்புபவன் நான்.&lt;br /&gt;இன்று நான் இருக்கிற இந்த இடத்துக்கு இரண்டே காரணங்கள், ஒன்று, நேர்மையான முயற்சியும் கடுமையான உழைப்பும் நம்மைக் கைவிடாது என்ற அனுபவம். முக்கியமான மற்றொன்று... என் வாழ்நாளின் வழிநெடுக என்னைத் தங்களின் தோளிலும் இதயத்திலும் தூக்கிச் சுமந்த நல்ல ஆத்மாக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வடபழனிச் சாலைகளில் வண்டியில் செல்லும்போது... தெருவோரக் கடைகளில், நடைபாதைகளில், பழைய சைக்கிள்களில், பஸ் படிக்கட்டுகளில் சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்க்கும்போது தூக்கிவாரிப்போடும்.&lt;br /&gt;&lt;br /&gt;திசை தெரியாது நான் தடுமாறிய தருணங்களில், என்னைத் துரத்தியடித்த பெரியவர்கள்; தளர்ந்து நான் தவித்த போது ஆறுதலாக இருந்த சகோதரர்கள்; என் சின்னக் கனவுகளுக்கும் சிறகு பூட்டிப் பறக்கவிட்ட நண்பர்கள்; எனக்கு முன்னும் பின்னுமாக ஓடி வந்து இடையில் களைத்துநின்றுவிட்ட கலைஞர்கள் என ஒவ்வொரு முகமும் ஒரு கதை சொல்லும். அப்படிப் பலர் இன்னும் ஒரு வாய்ப்புக்காக, வாழ்க்கை யைப் பணயம் வைத்து அலைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைவிடத் திறமைசாலிகள், புத்திசாலிகள் நிறைய பேர் உண்டு இங்கு. ஆனால், நான் காரில் செல்ல அவர்கள் தெருவில் திரிவது எதனால்? எது எப்படி யாரை இடம் மாற்றுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் விழுவதும், சிலர் எழுவதும் ஒரே இடத்தில்தான். அது உழைப்பு!&lt;br /&gt;தொலைதூரத்துக் கிராமத்துச் சிறுவன் நான். எனக்கு இருந்தது கனவுகூட இல்லை, எத்தனையோ பேருக்கு இருப்பது போல சினிமா மீது ஓர் ஆசை, அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியங்களும் தெரியாது. இலக்கணங்களும் புரியாது. ஆனாலும், ஆசை வளர்த்தேன். தளபதி ஆவதற்கு முதல் தகுதி... சிப்பாயாக இருப்பது என்பதை எனக்கு உணர்த்தியது காலம். சுய மரியாதை என்ற சொல்லையும் அதன் பொருளையும் மறக்கடிக்கிற அளவுக்கு என்னை இழுத்தெறிந்தது வாழ்க்கை. இருந்தாலும் இழக்கவும் இல்லை. இரையாகவும் இல்லை.&lt;br /&gt;எதுவும் தெரியாதுதான் எனக்கு. ஆனால், எல்லாம் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஆசையும் இருந்தது. எச்சில் தட்டைக் கழுவியபோது காட்டிய ஒழுங்குதான், எடிட்டிங் டேபிளிலும் கைகொடுக்கிறது. பசியும் பட்டினியுமான பால்யம்தான், சக மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தந்தது. எத்தனையோ பேர் என்னைத் தொட்டுத் தூக்கியதன் நன்றிதான் என்னை இப்போது நேர்வழியில் செலுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;எனக்கு நேர்ந்த அவமானம் இன்னொரு வனுக்கு நேரக் கூடாது என்பது என் தன்மானம். எனக்குக் கிடைக்காத அன்பு, என் சார்ந்த கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பது நான் கற்றுத் தேர்ந்த பண்பு.&lt;br /&gt;உலகத்தின் மிகச் சிறந்த நறுமணம், வியர்வையின் வாசம் என்பதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;கூட்டுப் புழுவாய்க் குறுகிக்கிடக்கும்போது, அவமானத்தில் கூச வேண்டிய அவசியம் இல்லை. அது காலம் நமக்குச் சிறகு தயாரிக்கும் களம் என்பதைப் பட்டாம்பூச்சிகளே சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை ஒரு பரமபதம் போல, தன் வழி நெடுக வாய்ப்புகளை ஒளித்துவைத்திருக்கிறது நண்பர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பசி இருந்தால்தான் புரியும் ருசி!&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;( இந்த கடைசி வரி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. சோறை ருசிக்காக சாப்பிடுவது அதற்கு செய்யும் அவமரியாதை என்று படித்திருக்கிறேன். "அவ மாருக்காகவே அவளை நான் காதலிக்கிறேன்" என்று சொலவதை போல அது குரூரமானது என்று பாலாவின் எழுத்துகளில் படித்த நியாபம. மேலும் வேளா வேளைக்குச் சாப்பிடும் மென் பசி இருப்பவனுக்குத்தான்  பசியிலும் ருசி தெரியும். பலவேளை பட்டினி கிடந்தவனுக்கு..?? ஒரு வேளை சேரன் சொன்னது முதல் வகையோ..?? )&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-114685209456036501?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114685209456036501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114685209456036501'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2006/05/thanks-cheran.html' title='Thanks Cheran'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-114080705973591755</id><published>2006-02-24T10:48:00.000-08:00</published><updated>2006-02-24T10:50:59.750-08:00</updated><title type='text'>Thanks Vikatan</title><content type='html'>&lt;strong&gt; ‘‘விடைபெறக் காத்திருக்கிறேன்!’’  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும், இளம்பெண்களும், முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ, இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால், ஒரு முக்கிய வேலை இருக் கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன்’’ என்கிறார் புஷ்பராஜா. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவர். இப்போது அரசியல் தஞ்சமடைந்து பிரான்ஸில் வசிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘யாழ்ப்பாணம் மயிலிட்டிதான் என் சொந்த ஊர். எழுபதுகளின் துவக்கத் தில் சிங்களப் பேரினவாதத்தின் அடக்கு முறைகளை எதிர்கொள்ள, ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை நோக்கித் திரும்பிய காலம். சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்க அஹிம்சை உதவாது, ஆயுதம் தான் உதவும் என்று முடிவெடுத்து, அதுவரை நான் இருந்த தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகி, தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன், சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ விடுதலையில் ஆயுதப் போராட் டத்தை முதன்முதலாகத் துவக்கி வைத்தது மாணவர் பேரவைதான். பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராகவும் போராளியாகவும் இருந்தேன். அதே காலகட்டத்தில் ஈரோஸ், டெலோ, இ.என்.டி.எல்.எஃப், தமிழ் புதிய புலிகள் என ஏழெட்டு அமைப்புகள் ஈழத்தில் முளைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;காக்கைகளுக்கு முன்பே நாங்கள் விழித்தெழுவோம். எமது மக்களின் உண்மையான விடுதலைக்கு எதிரியாக இருந்த சிங்களவர்களைத் தேடி அலை வோம். போர்ப் பயிற்சிக்காக பல்வேறு குழுக்களும் பாலஸ்தீனத்துக்கும், இந்தியாவுக்கும் போயின. எல்லோருக் கும் ஆயுதம் கிடைத்தது. தமிழகத்திலும், வட இந்தியாவிலும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. வேதாரண் யத்தில் எங்களைக் கொண்டுவிடவும், அழைத்துப்போகவும் படகுப் போக்கு வரத்து குறிப்பிட்ட நாட்களில் இருந்தது. எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும், நாங்களும், மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.&lt;br /&gt;எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால், அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது, தமிழ் ஈழம் அடைவது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6,000 பேர். சுடப்பட்டும், மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டை, சொந்தங் களைத் துறந்து, ஆயுதம் தரித்தவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...&lt;br /&gt;&lt;br /&gt;துரோகி எனத் தீர்த்து&lt;br /&gt;முன்னொரு நாள் சுட்ட வெடி&lt;br /&gt;சுட்டவனைச் சுட்டது&lt;br /&gt;சுடுமாறு ஆணை&lt;br /&gt;இட்டவனைச் சுட்டது&lt;br /&gt;குற்றஞ் சாட்டியவனை&lt;br /&gt;சாட்சி சொன்னவனை&lt;br /&gt;தீர்ப்பு வழங்கியவனைச்&lt;br /&gt;சுட்டது&lt;br /&gt;தீர்ப்பை ஏற்றவனைச்&lt;br /&gt;சுட்டது&lt;br /&gt;சும்மா இருந்தவனையுஞ்&lt;br /&gt;சுட்டது.....&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சூழலில்தான் நானும் கொலை செய்யப்படுவேன் என்று பயந்தேன். ஒன்று, என் எதிரிகளால். இன்னொன்று, ஆயுதம் தரித்த என் நண்பர்களால். ‘இது கொலைகாரங்க பூமி ஆயிடுச்சு. நாம இனிமே இங்கே இருக்க வேண்டாம். வேற எங்காவது போயிடலாம்’ என்று என் காதலி சொன்னாங்க. அதற்கு அடுத்த நாள், அதாவது 82&amp;ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டோம். என் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். அழகான கூடு மாதிரி இருந்தது வீடு. அந்தக் கூட்டை நானேதான் கலைத்துவிட்டு என் மனைவியோடு பிரான்ஸ§க்கு வந்தேன். இதோ 24 ஆண்டுகளாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் எந்த மூலையில் சுற்றி அலைந் தாலும், தாயகக் கனவு என்னை அலைக் கழித்துக்கொண்டேதான் இருந்தது. தேவைக்கு அதிகமாகக் காசிருந்தால் குடிப்பேன். போதை, நிறைய விஷயங்களை மனந்திறந்து பேசவும், கூடிக் கதைக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கிடைக்கிற வேலையெல்லாம் செய்தோம். ஈழத்தின் சாதீய சமூகம் எந்தெந்தத் தொழிலை எல்லாம் செய்யக் கூடாத தொழிலாக விலக்கி வைத்ததோ, அதையெல்லாம் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் மண்ணைத் தொலைத்து, புதிய சூழலில், புதிய உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டோம். என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை இப்படித்தான் அந்நிய மண்ணில் கழிக்க நேர்ந்தது’’ என்று உலர்ந்த உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் புஷ்பராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘கடந்த ஜனவரி மாதம், பொங்கல் அன்று எனக்குக் கடுமையான வயிற்று வலி. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து, மீண்டும் மிகக் கடுமை யான வலி வயிற்றைப் பிடுங்கி எடுக்க, பிரான்ஸில் உள்ள மருத்துவமனைக்குப் போனேன். டாக்டர் என்னைச் சோதித்துவிட்டு, ‘உங்களுக்கு வேண்டியவர்கள் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டார். எனக்கு என் நிலைமை புரிந்துவிட்டது. பின்பு, ‘உங்கள் கல்லீரல் புற்றுநோயால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்றார். என் மனைவியும், குழந்தை களும் கதறி அழுதார்கள். என் முப்பத்தைந்து வயதில், என் அம்மாவும் அப்பாவும் இறந்தபோதுகூட நான் என் தாய் நாட்டுக்குப் போனது கிடையாது. போக வேண்டும் என்ற எண்ணம்கூட வந்தது கிடையாது. மயிலிட்டி இப்போது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் எண்ணம் முழுக்க வேறொன்றில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று நூலை எழுதும் முயற்சி அது. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்கிற நூலை எழுதியிருக் கிறேன். அடுத்ததாக இன்னும் இரண்டு நூல்களை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒன்று, ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. இன்னொன்று, சிங்கள ஆட்சியாளர்கள் காலங்காலமாகத் தமிழர்களின் உரிமை களை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்தார்கள்... தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் எப்படி சிங்கள ஆட்சிக்குத் துணை போனார்கள் என்பதை எழுத ஆசைப்பட்டேன். அதற்குக் குறைந்த பட்சம் இன்னும் எட்டு மாதங்களாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, சென்னையில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் போல் கேன்சர் நோயாளிகள் நிறைய பேரைப் பார்த்தேன். சின்ன குழந்தைகள், இளம்பெண்கள் என ஏராளமானோர் வெளியில் தங்களுக்கான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்தார்கள். அங்கிருந்த சிலரிடம் பேசியபோது, நான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.&lt;br /&gt;நான் மருத்துவரீதியாக இப்போது சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அது வெற்றி பெறுமா, தோல்வியுறுமா... தெரியவில்லை. நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. என் வீட்டார் கடவுளை நம்புகிறார்கள். இதுதான் உலகம், இப்படித்தான் வாழ்க்கை என்று விவரம் தெரியத் துவங்கிய காலத்தி லிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பெரியாரிஸ்ட்!&lt;br /&gt;&lt;br /&gt;தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு, துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால், என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால், ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதலாம் என்று அமர்ந்தால், சோர்வாக இருக்கிறது. ஆனாலும், நான் விடாப்பிடியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கை ஊக்கம் தருகிறதென்றால், மருந்துகள் வாட்டி வதைக்கின்றன. நோயாளியாக இருக்கிறோம் என்கிற உணர்வே ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி நடந்திருக்கிறது. இப்போது மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு என் உடம்பு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட, ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்!’’ என்கிறார் புஷ்பராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, புஷ்பராஜாவுக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சியையும் அவர் உடம்பு தாங்காது என்பதால் மருத்துவர்கள் கைவிட்டு, அவரது கடைசி நாட்களை சொந்த மண்ணிலேயே சென்று கழிக்கும்படி சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘‘எனக்கேது சொந்த மண்? நான் எங்கே செல்ல முடியும்? நாளை அமையவிருக்கும் தமிழ் ஈழத்தைக் காண நான் உயிரோடிருக்க மாட்டேன். நான் பிறந்த மண்ணே... நான் வாழ முடியாத மண்ணே... ஒரே ஒரு கேள்வி உன்னிடம்... வெடி மருந்து வீச்சமில்லாத உன் தெருக்களில் எம் பிள்ளைகள் நடக்கின்ற நாள் என்று வரும் எம் மண்ணே?’’   &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-114080705973591755?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114080705973591755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114080705973591755'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2006/02/thanks-vikatan.html' title='Thanks Vikatan'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-114020656262062672</id><published>2006-02-17T11:59:00.000-08:00</published><updated>2006-02-17T12:02:42.623-08:00</updated><title type='text'>நன்றி : சுந்தரவடிவேல்</title><content type='html'>நேத்து ஒரு வரலாற்றாசிரியர் பேச்சுக்குப் போனேன். தலித் நடுத்தர வர்க்கம் அப்படின்னு சொல்றாங்களே இது நடந்திருக்கா, இந்த நடுத்தட்டுக்கு என்னென்ன பிரச்சனைகள் அப்படிங்கறதப் பத்திப் பேசினார். அவர் பேரு ஞானேந்திர பாண்டே, சுருக்கமா ஞான் பாண்டே, ஞாவன்னா வராத வாய்க்கு க்யான் பாண்டே (Gyan Pandey). எமொரி பல்கலைக்கழகத்துல பேராசிரியர். இப்பதான் ஜான் ஹாப்கின்ஸ்லேருந்து எமொரிக்குப் போயிருக்கார். இவர் இந்தியப் பிரிவினையைப் பத்தியும், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவைப் பத்தியும் ஆராய்ச்சி செஞ்சு புத்தகமெல்லாம் எழுதியிருக்காராம். அமெரிக்காவுல இருக்க கறுப்பர்களையும் இந்திய தலித்துகளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்றார். ரெண்டு பேருக்கும் இருக்க நெருக்கடி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுங்கறார். தலித் பத்தின ஆராய்ச்சியை வட இந்தியாவுல மட்டுந்தான் செஞ்சிருக்கார். அவர் நேத்து பேசினதச் சுருக்கிக் கீழ தர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுக்குடி&lt;br /&gt;&lt;br /&gt;நடுக்குடி, நடுத்தட்டு, நடுத்தர வர்க்கம்னா யாரு? பொதுவாச் சொன்னா, பரம்பரைச் சொத்து இல்லாதவங்க. கீழ கெடந்து மேல வந்தவங்க. உழைக்கணும், சாதிக்கணும்னு துடிக்கிறவங்க. தன்னையும், உலகத்தையும் பத்தின உணர்நிலையோட இருக்கவங்க. பணத்தாலயும், படிப்பாலயும் மட்டும் நிர்ணயிக்கப் படாதவொரு கூட்டம். இவங்களுக்கு உதாரணமாச் சொல்லனும்னா பதினெட்டு பத்தொம்பது நூற்றாண்டு இங்கிலாந்துல இருந்த பிரமிட் அமைப்புச் சமுதாயத்துல நடுவுல இருந்தவங்க. இவங்க குடிகள் அவ்வளவே. இவர்கள் ஆள்வோர்களில்லை. அமெரிக்கக் கறுப்பர்களானாலும் சரி, இந்திய தலித்துகளானாலும் சரி, அவர்களுக்குள்ள ஒரு நடுத்தர வர்க்கம் தொடங்கினது ரொம்ப அண்மையிலதான். இதுக்குக் காரணம் தெரியும். அடிமைத்தனம். இப்போது முளைத்திருக்கும் தலித் நடுக்குடிக்குத் தான் நடுக்குடியா அல்லது தலித்தா என்றொரு உளைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். நீ எங்கிருந்து வந்தன்னு நினைச்சுப் பாருன்னு உடன்பிறந்த கூட்டம் கேட்கும். கீழே இருக்க தலித் கூட்டம் எங்களுக்கு என்ன செய்றன்னு கேக்கும். அதே நேரத்துல மத்த நடுக்குடிகளோடயும் ஆடணும். அப்போ நா யாரு தலித்தா, நடுக்குடியா? ஒரு பிராமண நடுக்குடி அப்படிங்கறது ரொம்பப் பழகிப் போன ஒண்ணு. நடுக்குடியில பிராமணர்களுக்கோ அல்லது வேறு “உயர்” சாதி நடுக்குடிக்கோ இல்லாத பிரச்சினைகள் தலித்துகளுக்கு இருக்கு. இவர்களது நடத்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப் படும். பொதுத் தளத்தில் இவர்கள் யாரென்பது அடிக்கடி நினைவூட்டப் படும். நடுத்தட்டுக்கு வந்த பின்னும் தொடர்ந்து தாக்கும் இந்த தலித் என்ற குறியீடு மறைவது ரொம்பக் கடினம்.&lt;br /&gt;இதுக்கு மூனு உதாரணங்களைச் சொல்லலாம். இதெல்லாம் உதாரணந்தான். இதைப் போல புள்ளி விபரம் நிறைய சேக்கலாம். ஆனா ஒரு நெலமயப் புரிஞ்சுக்க இந்த உதாரணங்களே போதும்னு நெனக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. பல்வான்சிங், ஐ.ஏ. எஸ்&lt;br /&gt;&lt;br /&gt;1959ல ஐ.ஏ.எஸ்ல தேறி வேலையில சேர்ந்தார். அந்தக் கால கட்டத்துல எல்லாரையும் போல சமுதாயத்தை மாத்தனும்கற மனநிலையில இருந்தவர். 1964ல பதவி விலகினார். நடந்தது என்ன? யாரோ ஒரு தலித். முடி வெட்டிக்கப் போயிருக்காரு. கடைக்காரர் வெட்ட முடியாதுன்னார். இல்ல வெட்டணும்னு தலித் கேட்க. அப்பன்னா இத்தன ரூவா குடுன்னு கூலிய உயர்த்திக் கேட்க. சரின்னு தலித் ஒத்துக்கிட்டாலும், கடைக்கு வெளியில ஒக்கார வச்சு முடி வெட்டிவிட்ட கேஸ் ஒன்னு. இத விசாரிச்சாரு பல்வான் சிங். இந்த வன்முறையைக் கண்டிச்சு எழுதியிருக்கார். வந்தது அரசச் செயலர் ஓலை. விசாரணை. அதுவரைக்கும் நல்லா வேலை செய்றன்னு சொன்ன உயரதிகாரியெல்லாம் உன் வேலை மோசம், இது தப்பு, அது தப்பு, சாதாரண விஷயத்தையெல்லாம் பெருசாக்குற, நீ ரொம்ப உணர்ச்சி வசப் படுற, ஒத்துப் போமாட்டங்கிற அப்படின்னெல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. வேலை மாத்தல் வருது. கேள்வி கேக்குறார். கடைசியில ஒன்னும் முடியாம பதவி விலகுறார். அப்புறமா ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - Balwan Singh’s autobiography: an untouchable in the IAS.&lt;br /&gt;&lt;br /&gt;2. டாக்டர் அம்பேத்கார்&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல படிப்பாளி. முன்னேறனும்னு ஆர்வத்துல உந்தப் பட்டவர். சுதந்திரத்துக்கப்புறம் காங்கிரஸ் கட்டின முதல் நடுவணரசுல சட்ட அமைச்சரா இருந்தார். 1951ல ஒரு பிரச்சினையில பதவி விலகினார். சுதந்திர இந்தியாவோட சட்டங்களை எழுதினதுல இவருக்கு முக்கிய பங்கு இருக்கு. இவரை இந்து முறைச் சட்டம் (Hindu Code Bill) விவகாரத்துல பதவி விலக வச்சது சாதீயம். இவர் இந்து மதத்துல இருக்க சாதீயம், சாதிய வச்சு மக்களை நசுக்குற உத்தி, பெண்ணடிமைத்தனம், எல்லாத்தையும் சட்ட பூர்வமா விலக்கப் பாத்திருக்கார். இதுக்காக, எல்லா மக்களுக்குமாக சமத்துவமாகச் சட்டங்களை ஆக்க இந்து முறைச் சட்டத்தை முன் வைத்தார் (இது இன்றளவும் நடைமுறைப் படுத்தப் படாதவொன்று). பாராளுமன்றத்துல கார சாரமான விவாதம் நடக்குது. இவர் இந்து மதத்துல இருக்க சாதிப் பிரிவினையை விமர்சிக்கிறார். உடனே கோவிந்த் மால்வியா முதற்கொண்டு எல்லா இந்துத்துவவாதிகளும் இவரைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இறுதியில் தான் உயர்குடிக்காரனென்று வெளிப்படையாகவும், அம்பேத்கார் ‘சண்டாள்’ என்று மறைமுகமாகவும் விளிக்கப் படுகிறது. இது பாராளுமன்றத்தில். ஒரு சட்ட மேதைக்கு எதிராக.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒரு பத்திரிகையாளர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்து ஆளு. பேரு சொல்லலை. ராஷ்ட்ர சஹாரா அப்படிங்கற இந்திப் பத்திரிகையில பத்தி எழுத்தர். தலித் பிரச்சினைகளைப் பத்தி எழுதுறார். வருது கட்டுக் கட்டா வாசகர் கடிதம். பல நூறு கடிதங்கள் நன்றி சொல்லி, வழி காட்டச் சொல்லி, இப்படியும் இருக்கான்னு ஆச்சரியப்பட்டு, நிறைய சக தலித்துகள்கிட்டேருந்து. இன்னொரு பக்கம் திட்டித் திட்டி உயர்சாதிக் காரங்ககிட்டேருந்து. கொலை மிரட்டலும். உன் சாதிப் பெண்டுகள் 70 பேரை நாங்க தினமும் வன்புணர்றோம், இன்னும் உனக்குப் புத்தி வரலயாடா தேவடியாப் பயலே? உட்பட ஆபாச வார்த்தைகளின் அத்தனை படிநிலைகளிலும் கடிதங்களைப் பார்க்கலாம். இதையெல்லாம் தாண்டி வருகிறது மிகவும் நாசூக்கான, சமத்துவபுர ஜெண்டில்மேன் டைப்புல ஒரு கடிதம், அதுதான் வக்கிரத்தின் உச்சம். அன்புள்ள திரு…வணக்கம். நல்லா எழுதுறீங்க. தலித் நல்லாயிருக்கனுங்கறதுல எனக்கும் உடன்பாடே. ஆனா நீங்க சொல்லுங்க, நீங்க ஒரு தலித்தா, அல்லது இந்தியனா? இந்தியனா இருக்கேன்னு சொன்னீங்கன்னா, தயவு செஞ்சு இந்தியாவ உடைக்காதீங்கப்பா. இதுல இருக்க பிரச்சினையெல்லாம் போதும், மேலும் மேலும் பிரச்சனையைக் கிளப்பாதீங்க. என்று போகிறது கடிதம். இதுல அடிநாதம் என்னன்னா உனக்கு எம்புட்டு குடுத்திருக்கோம், வச்சுக்கிட்டு நன்றியோட இருக்கத் தெரியலயே, என்னத்துக்கு சும்மா கம்ப்ளெயிண்ட் பண்ற, என்ற மனோநிலை. பீடத்திலிருந்துகொண்டு எழுதுகிற பண்டிட்டுகளின் குரல் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் பேச்சு. எங்கு போனாலும் விடாத சாதிப் பாகுபாடு. பல முறை இந்த வலைப்பதிவுல அடிச்சுக்கிட்டு செத்த விஷயம்தான். ஆனாலும் பேசப் பட வேண்டியது. எது இதைக் கட்டிக் காக்குது? இந்து சமூக அமைப்பு. இதுக்குள்ளேருந்து ஒரு தாழ்த்தப் பட்டவன் தலை நிமிர்வது கடினம். எந்தத் துறையிலும் தலித் எதிர் கொள்ளும் பிரச்சினை. தலித் ஐ.ஏ.எஸ்ஸ¤க்கு வேலையில் நிகழும் சிறுமைப்பாடுகள். பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்தாலும் தலித் என்பதாலேயே கோட்டா என்ற கிண்டல். தலித் கட்சித் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள். (திருமா தெளிவாகச் சமீபத்திய உரையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிடக் கட்சிகள் அரவணைக்கலைன்னா அதைக் கிண்டல் செய்பவர்களுக்கு தலித் மேலயா அக்கறை? இல்ல. கீழ்க்குடிகள் ரெண்டு பட்டதால வந்த ரகசிய சந்தோஷம்.) ஆக தலித் என்பவர் மற்ற நடுக்குடிகளைப் போலல்லாமல் தொடர்ந்து இரட்டை உணர்நிலையில் ஊசலாட்டப் பட்டிருக்கிறார், தொழில் முறையிலும் சமூகத்திலும் சவால்களை எதிர் கொள்கிறார். இன்றைய தேதியில் தலித்துகளை நேரடியாகத் தாக்குபவர்களாகட்டும், மறைமுகமாகக் கிண்டல் செய்பவர்களாகட்டும், அல்லது உன் கதையை நானெழுதுகிறேனென்று கிளம்பியிருக்கும் பார்ப்பன தலித்-எளக்கியவியாதிகளாகட்டும், யாராயிருந்தாலும் அவர்களது நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தால் அது சாதி என்கின்ற இந்து மனக் கட்டமைப்பிலேயே அடிப்பிடித்திருப்பதைக் காணலாம். சில நேரங்களில் அது கொஞ்சம் வளர்ந்து பரிணமித்தது போலப் பல்லிளிக்கும்; இந்திய தேசிய ஒருமைப்பாட்டு முகமூடியைப் போட்டுக் கொண்டிருக்கும்; கூர்ந்து கவனித்தால் அது அதே சாதீய இந்து மன அடிப்பிடிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://bhaarathi.net/sundara/"&gt;சுந்தரவடிவேல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-114020656262062672?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114020656262062672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114020656262062672'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2006/02/blog-post.html' title='நன்றி : சுந்தரவடிவேல்'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-114020634465442562</id><published>2006-02-17T11:58:00.000-08:00</published><updated>2006-02-17T11:59:04.663-08:00</updated><title type='text'>Excellence</title><content type='html'>I was raised to believe that excellence is the best deterrent to racism or sexism. And that's how I operate my life."—Oprah Winfrey&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-114020634465442562?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114020634465442562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/114020634465442562'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2006/02/excellence.html' title='Excellence'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-113821121024052225</id><published>2006-01-25T09:41:00.000-08:00</published><updated>2006-01-25T09:46:50.240-08:00</updated><title type='text'>Thanks Meenaks - congrats</title><content type='html'>வந்தாள், கண்டாள், வென்றாள்&lt;br /&gt;======================&lt;br /&gt;(அல்லது)&lt;br /&gt;&lt;br /&gt;போனேன், பார்த்தேன், பூத்தேன்&lt;br /&gt;========================&lt;br /&gt;&lt;br /&gt;உன் மேல் கவிந்திருக்கும்&lt;br /&gt;மௌனத்தின் நீர்நிலை மேல்&lt;br /&gt;பார்வைகளால் கல்லெறிகிறேன் நான்.&lt;br /&gt;ஒற்றை வளையமாய்&lt;br /&gt;ஒரு புன்னகையைத் தோற்றுவித்து&lt;br /&gt;உன்னுள்ளே மூழ்கடிக்கிறாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;என் முன்கதைச் சுருக்கத்தை&lt;br /&gt;உன் காதருகே&lt;br /&gt;உலவ விடுகிறேன் நான்.&lt;br /&gt;நாம் இருவருக்கான எதிர்காலக் கனவை&lt;br /&gt;அறையின் கூரையெங்கும்&lt;br /&gt;பரவ விடுகிறாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியிருக்கும்கவிதைகள்&lt;br /&gt;பிடிக்குமென்கிறாய் நீ.&lt;br /&gt;என் எதிரிலிருக்கும்கவிதையைப்&lt;br /&gt;பிடிக்குமென்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் எதிர்பார்ப்புகளின் தவிப்பும்&lt;br /&gt;என் விருப்பங்களின் இருப்பும்&lt;br /&gt;நேர்கோட்டில் சந்திக்கின்றன.&lt;br /&gt;என் கற்பனைகள் ஒவ்வொன்றும்&lt;br /&gt;உன் கண்களில் தத்தம்&lt;br /&gt;முகம் பார்த்துக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உன் குறும்புப் பார்வைகள்&lt;br /&gt;என் மீசையைப்பிடித்திழுத்து விளையாடுகின்றன.&lt;br /&gt;இதுவரை&lt;br /&gt;தனித்தனியே&lt;br /&gt;தேடிக் கொண்டிருந்த&lt;br /&gt;நமக்கான பிரபஞ்ச முடிச்சை&lt;br /&gt;சேர்ந்து கண்டுகொண்ட பரவசத்தில்&lt;br /&gt;மிதக்கிறோம் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும்,&lt;br /&gt;சில தினங்களுக்குப் பிறகும்,&lt;br /&gt;என் காதுகளில்இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது,&lt;br /&gt;என்னைப் பிடித்திருப்பது பற்றிய&lt;br /&gt;எனது கேள்விக்கு&lt;br /&gt;நீ பதிலாய்த் தந்த&lt;br /&gt;ஒரு சொல்,&lt;br /&gt;ஓர் எழுத்து,&lt;br /&gt;ஓர் ஓசை,&lt;br /&gt;"ம்..!"&lt;br /&gt;&lt;br /&gt;-- மீனாக்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: ஹி.. ஹி..!! ஆமாமுங்கோ..!!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : மீனாக்ஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-113821121024052225?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113821121024052225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113821121024052225'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2006/01/thanks-meenaks-congrats.html' title='Thanks Meenaks - congrats'/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-113656884722850852</id><published>2006-01-06T09:32:00.000-08:00</published><updated>2006-01-06T09:34:07.243-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://bhaarathi.net/ntmani/?p=196"&gt;காதலினால் மானிடர்க்கு - நன்றி தங்கமணி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது இலையுதிர்க்காலத்தில் ஒரு மாலை நேரத்தில் இலைகள் சடசடவென்று உதிர்ந்ததுபோல, வீட்டை நெருங்க இருக்கையில் எதிர்பாராது நம்மை நனைத்து விடுகிற மழை போல புரிந்துகொள்ளப்படலாம்; எதுவாயினும் இதைப்பற்றி பேசமுடியாது. ஒருவகையான monologue அல்லது soliloquy. மேலும் இது பொதுத்தளத்தில் நிகழ்வதல்ல என்பதை நினைவிற்கொள்க. இது இரண்டு பகுதிகளாக இங்கு வரும்)&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் ஒன்றை நினைவூட்டுகிறேன். அப்படியே என்னால் காதல் என்றால் என்னவென்று நேரிடையாக வரையறுக்க முடியாது. காதலைப்பற்றிய நம்பிக்கைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இவற்றில் இருந்து உன்னை விடுவிக்க முடிந்தால் காதலோடு இருப்பது சாத்தியமாகலாம்.&lt;br /&gt;நான் சிறுவனாக இருந்தபோது திருவிழாக் காலங்களில், இரவுகளில் கோயிலுக்குப் போய் பாட்டுக்கச்சேரியும் தெப்பமும் பார்த்துவிட்டு வரும் போது நன்கு ஊதிக்கட்டப்பட்ட பளபளப்பான ஆப்பிள் பலூன்களை வாங்கிவருவோம். அப்போது அவைகளில் ஒரு புதுமையின் பளபளப்பு மின்னும். வண்ண விளக்குகளை அது அழகாக எதிரொளிக்கும். அந்த பலூனை இரவில் கட்டிலினடியில் கட்டிவைப்போம். காலையில் எழுந்தவுடன் பார்ப்பேன். பளபளப்பு இருக்காது சற்றே சுருக்கம் தெரியும். அடுத்த நாள் இன்னும் சிறிதாக சுருங்கி நாளடைவில் அது நிஜ ஆப்பிள் அளவுக்கு வந்துவிடும். பிறகு பலூன்களை வாங்கும் போது ஒரு உள்ளார்ந்த மாற்றம் நேர்ந்திருந்தது.&lt;br /&gt;காதலைப்பற்றிய கற்பனைகளின் கதையும் இதுதான். காதலைப்பற்றிய கற்பனை உன்னைக் காதலில் இருந்து வெகுதூரம் எடுத்துச் சென்றுவிடும். அந்த பலூன் ஒளிமங்கிச் சிறிதாவதற்கு முன்பே வழியில் வெடித்திருந்தால் பலூனைப்பற்றிய கவர்ச்சி மிஞ்சியிருக்கும். திருமணத்தில் முடியாத, உடைந்த காதல் மிகவும் புனிதமாக, அழகாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் கற்பனையின் வெளியேதான் வாழ்வு தவழ்கிறது. பூக்களின் மீது சிதறிக்கிடக்கும் காலைப்பனியைப் போல காதலின் மீதும் கற்பனைகளும் நம்பிக்கைகளும் இருக்கவே செய்யும். அவை அழகான தோற்றம் தருகின்றன. ஆனால் வெகுவிரைவில் அவை உலர்ந்துவிடும்.&lt;br /&gt;காதலைப்பற்றிய மகத்தான கற்பனைகளைக் கட்டுபவர்கள், காதலிக்காதவர்களும், இளங்காதலர்களும், காதல் திருமணம் நிறைவுறாதவர்களுமே ஆவர். ஏனெனில் அவர்களிடம் தான் செலவழியாத கனவுகள் நிரம்ப உள்ளன. நுரையலையும் அலைகளைப்போன்று காதல் அவர்களிடம் வீசிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருமுறை காலை நனைத்து ஆடைகளை ஈரமாக்கும் போதும் குழந்தைகளைப்போல சிலிர்ப்படைகிறார்கள். மாலை நேரத்தில் கடற்கரைக்கு வருகிற குழந்தைக்கும், கடற்கரை மீனவக்குழந்தைக்கும் கடல் வெவ்வேறாக இருக்கிறது. அதுதான் காதலர்களுக்கும் காதல் நிறைவேறியவர்களுக்கும் இடையே கிடக்கிற தொலைவும்.&lt;br /&gt;பூக்களைப் பறித்துக்கொண்டு ஓடிவருகிற சிறுமிக்கும், பூ விற்கிற சிறுமிக்கும் பூக்களைப்பற்றிய அபிப்பிராயம் வெவ்வேறாக இருக்கிறது. ஆனால் இருவரும் உண்மையில் பூக்களோடு இல்லை. பூவைப்பறித்த சிறுமிக்கு பூ ஒரு சாகச உணர்வாக, உடமைப்பொருளாக, அறிபடுபொருளாக இன்பம் தருகிறது. பூ விற்கிற சிறுமிக்கு அது வேறு மாதிரியான உணர்வுகளைத் தரலாம். பூ பறித்த சிறுமியின் இன்பமே காதலர்களின் இன்பம். காதல் தருகின்ற இந்த புதுமை உணர்வை கவிதைகளும், நம்பிக்கைகளும் புனிதத் தன்மைவாயந்ததாகச் செய்கின்றன. ஆனால் இந்தப் புதுமை உணர்வு எவ்வளவு புனிதத்தன்மை வாய்ந்ததாக நாம் நம்பி இருந்தாலும், அதை அப்படியே காப்பாற்ற நாம் எவ்வளவு முயன்றாலும் ஒருநாள் அது மெல்ல மெல்ல புனிதமற்றதாகிவிடுகிறது. அர்த்தமிழந்து போகிறது. அதைக்கண்டு நாமே குற்ற உணர்வும் ஏமாற்றமும் அடையத் தக்கவிதத்தில் நம் கண் முன்னாலேயே மாறிப்போகிறது. ஒரு காலத்தில் இன்றியமையாததாக இருந்த ஒன்று இப்போது முக்கியமற்று போனதை நாம் எப்படியோ ஜீரணித்துக்கொள்ளப் பழகுகிறோம். நமது கற்பனைகளை, நம்பிக்கைகளை அடுத்தடுது நமது குழந்தைகள், பணி உயர்வு பெறுதல் போன்ற விசயங்களில் நாட்டப்பழகுகிறோம்.&lt;br /&gt;இப்போது டீக்கு போனோம். குழந்தைகள் இரண்டு, அம்மாவோடு வந்தன. அவற்றின் தலையில் காலையில் வைத்துக்கொண்ட மல்லிகைச்சரம் வாடிப்போய் தொங்கிக்கொண்டிருந்தது. அவைகளிரண்டும் குதித்துக்கொண்டே சரக்கொன்றை மரத்தடிக்கு வந்தன. மஞ்சள் சரக்கொன்றை. அவைகளின் அம்மா இரண்டு பேருக்கும் சில சரங்களைப் பறித்துக்கொடுத்தாள். ஆர்வமும், ஆசையும் கொண்டு குழந்தைகள் அதைச் சுற்றின. அம்மா, ‘பூவைச் சுற்றாதே, எவ்வளவு அழகா இருக்குது பார்!’ என்றாள். குழந்தைகள் ஒரு கணம் பார்த்துவிட்டு மறுபடியும் சுற்றின. சுற்றுவது அவைகளை கிளர்ச்சி அடையச்செய்தது. அம்மா பழகிப்போன வார்த்தைகளைச் சொன்னாள். குழந்தைகள் பூக்களைச் சுற்றி அதை அறிவதன் மூலம் ஆனந்தமடைந்தன. எவரும் பூக்களோடு இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் குழந்தைகள் அதில் பழகிப்போகலாம். அப்போது காலையில் தலையில் சூடிக்கொண்டு இப்போது வாடித் தொங்கும் மல்லிகைச் சரத்தைப்போல இதுவும் வசிகரமற்று போகலாம்.&lt;br /&gt;காதலின் அற்புதத்தன்மை பெரும்பாலும் மனதால் உண்டாக்கப்படுகிறது. மனம் ஒன்றை அறிந்துகொள்ளும் வரை புதிர் நிரம்பிய அதை அற்புதமாகப் பார்க்கிறது. அறிந்துகொண்டபின் அது தன் அற்புதத் தன்மையை இழந்துவிடக்கூடும். ஆனால் காதலில் உண்மையாகவே ஒரு அற்புதம் இருக்கிறது. ஆனால் அது மனம் சார்ந்தது அல்ல. அது மனதின் உற்சாகக் கூச்சல்களுக்கு வெகு அடியில் மிக மெதுவாக இயல்பாக யாருடைய கவனதுக்காகவுமின்றி நிகழ்ந்துகொண்டிருக்கலாம். பொதுவாக மனம் உருவாக்கும் அற்புதங்கள் தன்னைத் தானேயோ பிறரையோ கவரும் உத்திகளேயாகும்.&lt;br /&gt;ஆனால் உண்மையான அற்புதம் என்பது முழுக்க முழுக்க வேறுவகையானது. அது யாருடைய கவனத்துக்குமின்றி வெறும் இருப்பில், ஓய்வில், ஒப்படைப்பில் நடக்கிறது. அதை மனம் காண முடியாது.&lt;br /&gt;ஒரு பிரகாசமான வண்ணக்கூளங்களடங்கிய வாணவேடிக்கையை மனம் அற்புதமெனலாம். ஆனால் பனி நனைத்த மண்மீது ஒரு மலரிதழ் முயற்சியின்றி விழுந்துகிடப்பதில் அற்புதமிருக்கிறது.&lt;br /&gt;அழகிய பட்டை தீட்டப்பட்ட வண்ணக்கல்லொன்றை மனம் அற்புதமெனலாம்.நட்சத்திரங்களின் ஒளியில் நதி மெல்ல நகர்ந்து கலக்கிறது. எதிர்கொண்டு மோதும் அலைக்கரங்களில் கீற்றாய் விண்மின்களின் ஒளி தெறிக்கிறது. அப்போது ஒரு வெறுமை நிரந்தரத்துவம் பெற்று அக்கணத்தில் உறைகிறது. அங்கொரு அற்புதம் அந்த வெறுமையாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னந்தனியனாய் ஒரு சிகரத்தில் உயிரைச் செலுத்தி ஏறுகிற ஒருவனை அற்புதமெனலாம்; ஆனால் இருள் நீக்கி வீசும் முதல் ஒளிக்கீற்றில் எதைப்பற்றியும் பயமின்றி மெல்ல மண்பிரித்து முளைவிடும் விதையில் இருக்கிறது அற்புதம்.&lt;br /&gt;மனதின் அற்புதங்கள் ஒரு உயர்வில், வெற்றியில், அழகில், அசாதரணத் தன்மையில் உண்டாகின்றன.வாழ்வின் அற்புதங்கள் சாதரணத் தன்மையில், வெறும் பூரண இருப்பில், ஒப்படைப்பில் நிகழ்கின்றன.&lt;br /&gt;மனதின் அற்புதங்கள் எப்போதாவது, அல்லது எதிர்பாராமல் நிகழ்கின்றன; வாழ்வின் அற்புதங்கள் தொடர்ந்து எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு நிகழ்கின்றன.&lt;br /&gt;மனம் வாழ்வை அற்புதங்களால் நிறைக்க எண்ணுகிறது; வாழ்வு அற்புதங்களாலேயே நடக்கிறது.&lt;br /&gt;மனதின் அற்புதம் விதிகளை (law) மீறுவதில் தோன்றுகிறது; வாழ்வு விதிகளாலேயே (order) நடக்கிறது.&lt;br /&gt;காதலில் மனம் அற்புதங்களைக் கண்டு குதுகலிக்குமிடத்து அதை பெரிதுபடுத்தாதே! கவனத்தில் கொள்ளவோ கடிந்துகொள்ளவோ வேண்டாம். ஆனால் அந்த அற்புதங்கள் விரைவில் நீர்த்துப்போகுமெனெ நினைவிற்கொள். மாறாக உன்னை சாதரணத் தன்மையில், நடுவில் இயல்பாக வைத்திருக்க வேண்டி விழிப்புணர்வுடன் இரு. ஆனால் இயல்பாக இருக்க போராடாதே! மனதின் அற்புதங்களுடன் ஒன்றிப்போய் கலந்திருக்காமலும், அதைக்கண்டிக்காமலும், வெறும் சாட்சியாய் இருந்தாலே சாதரணத் தன்மை, இயல்புணர்வு சாத்தியமாகும். ஒரு ஓடையைத் தெளியவைக்க எடுக்கும் முயற்சிகளைப்போன்றது போராட்டம் மூலம் சாட்சியாய் (விலகி) நிற்கமுயல்வது.&lt;br /&gt;காதலின் அற்புதம் அதன் ஒப்படைப்பில் நிகழ்வது.&lt;br /&gt;ஒப்படைப்பது என்றவுடன் மனம் உயர்ந்த விசயங்கள், பரிசுகள், அல்லது தன்னையே ஒப்படைத்தல் என்று நினைக்கக்கூடும். ஆனால் உண்மையான ஒப்படைத்தல் என்பது நிபந்தனைகளை, எதிர்பார்ப்புகளைக் களைந்துவிட்டு நின்றல். ஒப்படைத்தல் என்பது எவரிடமும் அல்லது எதிர்பாலாரிடம் நிகழவேண்டிய ஒன்றல்ல. அது தன்னளவில் நிகழவேண்டியது; காதல் அதற்கு ஒரு அழகிய களமாக இருக்கும்.அப்போது மழைக்காலத்தில் ஒவ்வொரு மழைத்துளியிலும் இலைகள் துடிப்பதைப்போன்று ஒரு அற்புதத்தின் இயல்பான துடிப்பைக்காண முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-113656884722850852?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113656884722850852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113656884722850852'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2006/01/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-113587271880928909</id><published>2005-12-29T08:09:00.000-08:00</published><updated>2005-12-29T08:11:58.833-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://thamizmaalai.blogspot.com/2005/12/blog-post_27.html"&gt;நண்பர் ரவிசங்கர் "படிச்ச நாயே கிட்ட வராத"&lt;/a&gt; என்ற புதுப்பேட்டை பாடலுக்கு தன் கண்டனத்தையும் கருத்துக்களையும் தெரிவித்தார். இதில் ஒன்றும் பெரியதாக தவறு இருப்பதாக தெரியவில்லை. படித்தவர்கள் என்பதால் கொம்பாக முளைத்திருக்கிறது. வேண்டாம் கொம்பு என்றால் இங்கே சுஹாசினி போல வேறு வழக்குகளை சந்திக்கும் அவநிலைக்கு உள்ளாவேன் ;) நாம் கூடதான் ரோட்டில் போகும்போது குறுக்கே வரும் நபர்களை "நாயே" என்று சொல்வதுண்டு. அதுப் போல தான் இதுவும். வன்முறையின் கிளர்ச்சியில் இருப்பவர்களுக்கு படித்தவர்கள் நாய்களாக தான் தெரிவார்கள். இளரத்தம். ஆயத பலம். வன்முறையின் மீதுள்ள காதல். அது அப்படிதான் வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுப்பேட்டை சென்னையின் நிழலுக இடங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். செல்வராகவன் - யுவன் - நா.முத்துக் குமார் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். இது நான் நினைப்பதுப் போல எடுத்திருந்தால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இது ஒரு cult படமாகும் வாய்ப்புகளதிகம். தமிழ் சினிமாவில் நிழலுகம் பற்றிய படங்களும், விவரணைகளும் குறைவு. செல்வராகவன் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையில் எனக்குத் தெரிந்த நிழலுகம் பற்றிய ஒரு சின்ன ப்ரைமர். படம் வந்து பார்க்கும் போது உபயோகமாக இருக்கும். இது தாண்டி, இந்த பதிவினை எழுத தூண்டியது கமல் அட்டகாசமாக பாடியிருக்கும்&lt;a href="http://www.raaga.com/channels/tamil/movie/T0000770.html"&gt; "நெருப்பு வாயினில் ஒரமாய் எரியும்"&lt;/a&gt; என்கிற பாடல், நிழலுகம் பற்றிய அற்புதமான ஆவணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாழ்ந்த இடம் கொண்டித்தோப்பு, வடசென்னை. தாதாகள், ரவுடிகள், வன்முறையின் மீதுள்ள கிளர்ச்சியும், கவர்ச்சியும் கொண்ட மனிதர்கள் என &lt;a href="http://www.imdb.com/title/tt0317248/"&gt;City of God&lt;/a&gt; இல் வரும் ரியோடி ஜெனிரோ குப்பம் போல இல்லையென்றாலும், மக்கள் திராவிட அரசியல் பேசிக் கொண்டு, லுங்கியினை மடித்துக் கட்டிக் கொண்டு, நாற்றமும், பூக்காரிகளின் அழைப்பும் (இன்னா, பூ வாங்கினு போயேன் கண்ணூ ) கெட்ட வார்த்தைகளின் சகிதம் (நிறைய பேருக்கு '...த்தா' இல்லாமல் பேச வராது) வாழ பழகிய இடம். உண்மையான ரியோ டி ஜெனிரோ காண, பேசின் பிரிட்ஜ் தாண்டி இடப்புறம் திரும்பி வியாசர்பாடி பாலத்தில் இறங்கி கொஞ்சமாய் பாலத்திற்கு முன்பே வலப்புறம் திரும்பி போனீர்களேயானால் மகாகவி பாரதி நகரின் (என்ன அருமையான பெயர்!) ஹவுஸிங் போர்ட்டினையொட்டி குடிசைகளும், சாக்கடைகளும் நிரம்பி இருக்கும். எனக்கு தெரிந்த அச்சு அசல் ரியோ அதுதான். தெரு நடுவில் சர்வசாதாரணமாக உயரமான ஸ்டூல்களில் கேரம் போர்டு ஆடிக் கொண்டிருப்பார்கள். தூக்கி மடித்துக் கட்டிய லுங்கியுடன் அவர்களின் விரல்கள் விளையாடும். எனக்கு தெரிந்த நிழலாளிகள் ஒரே ஷாட்டில் மூன்று காய்கள் வரை போடுமளவிற்கு திறன் வாய்ந்தவர்கள். கேரம் போர்டு தரையென்றால், காற்றாடி மிக முக்கியமான பொழுது போக்கு. காற்றாடி அறுந்து விழுந்தால், எதிராளி அறுத்தால் அரிவாள் வெட்டு வரை போவது எல்லாம் சகஜம். காற்றாடிக்காக இரண்டு குப்பங்கள் அடித்துக் கொள்வதெல்லாம், கடலோர சென்னை குப்பங்களில் மிக சகஜம். அடியென்றால், ஆட்களை கொல்வது வரை போகும். கடவுள் பக்தி அதிகம். எல்லா இடங்களிலும், அம்மன் கோவில்களோ, மேரி மாதா சிறுகோயில்களோ பார்க்க முடியும். 'டாஸ்மாக்குகள்' வருவதற்கு முன்பு சென்னையில் ஒயின் ஷாப்புகள் தான். மூன்று மானிட்டர் உள்ளே போனவுடன், பியர் சாப்பிட வந்திருக்கும் எங்களுக்கு அறிவுரை சொல்லும் நடுத்தர வயது தாதாக்கள் (" இன்னாடா, இந்த வயசுல தண்ணியா, போய் படிங்கடா, நாதாரிகளா") , "ரா"வாக அடிக்கிறேன் பேர்வழி என்று குடித்து ஆண்மையை நிருபிக்கும் இளம் (budding) நிழலாளிகள் ஒரு புறம், "மச்சான், சீதாக்காவோட புருசன் ஒடிட்டானேமே, மசியுமா மாமே" என வாழ்வியல் கவலைகளோடு சாமான்களை டேபிளில் பரப்பி வைத்து குடிக்கும் நிழலாளிகள் என்று கலவையாக வாழ்க்கை மறுவாசிப்பு செய்யப்படுவதை கண்ணார பார்த்திருக்கிறேன்.ஸ்டான்லி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கல்லூரியில் படிக்கும் போது சேவை செய்து கொண்டிருந்தேன். இடக்கையினை வலக்கையில் தூக்கிக் கொண்டு ஒடிவந்த ஒருவன் "சிலிப்பாயிருச்சி. தவறி வூந்துட்டேன் சீட்டு கொடுரா" என்று கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. அது காற்றாடியால் வந்த சண்டையில் வாங்கிய வெட்டு. ஒரு கையினன வெட்டி விட்டார்கள். காத்தாடி, மாஞ்சா, பாட்லோடு, பிரியாணி, பீடி, கால்வாய், கேரம் போர்டு, டீ, கஞ்சா, டப்பா சோறு, தண்டல், சாராயம், வாந்தி, பீ நாற்றம், 'அத்து விடுதல்', தகராறு, கானா பாடல்கள், டாடா சுமோ என்று அவர்களின் உலகம் தனியுலகம். அவர்களின் அகராதியில் இருக்கும் சொற்கள் பொது வழக்கில் நீங்கள் கேள்விப்படாத சொற்களாக இருக்கும். ஐஸ் பிரியாணி என்றால் என்ன தெரியுமா? பழைய சோற்றில் கஞ்சி ஊற்றி வெங்காயமோ, ஊறுகாயோ வைத்து கொடுத்தால் அதுதான் ஐஸ் பிரியாணி. இதில் லேட்டஸ்டாக, செல்போன், ஏதேனும் ஒரு ஜாதி கட்சியின் / நட்சத்திர கும்பலின் செயலாளர் பதவி (தலித் / யாதவ / அம்பேத்கார் இளைஞர் பேரணி / பரமசிவன் அஜீத் ரசிகர் மன்றம் / சீயான் விக்ரம் ], கொஞ்சம் ரத்ததானம், முப்பத்து ஏழாவது பிறந்தநாளுகான சுவரொட்டி [கொள்கை வேந்தர், ஏழைகளின் ஏர்முனை, தொழிலாளிகளின் தோழன் ] போன்றவற்றினை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் போல் நண்பர்களுக்கு உதவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் அது கிளிஷேவாகிவிடும். ஆனால் உண்மை. ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவை என்று சொன்னபோது ஒரு பெரும்தலைவரின் பிறந்தநாள் அதுவுமாய் குடிக்காமல் இருந்து, மறுநாள் வரை காத்திருந்து 7 பேர்கள் ரத்தம் கொடுத்து, பின் குடிக்க போனது தனிக்கதை. பார்க்க முரடாய் இருக்கும் நபர்கள், அருகில் நெருங்கி பார்த்தால் உள்ளே அமைதியை விரும்பும் நபர்கள். இன்றும் எம்.ஜி.ஆரினை நினைவு வைத்துக் கொண்டு, பிறந்த நாள், இறந்த நாள், ரிக்சா வழங்கிய நாள் என்று ஒவ்வொன்றையும் கொண்டாடுபவர்கள் அவர்கள் தான். இன்னமும் நிறைய இடங்களில் 'டெல்லி செட்' டேப் ரிகார்ட்டர்களில், டி.எம்.எஸினையும், சிதம்பரம் ஜெயராமனையும் அங்கே தான் கேட்க முடியும். எப்.எம்களில் அல்ல. வெற்றிலை பாக்கு கூட போடாமல் இருக்கும் நிழல் நபர்களை எனக்கு தெரியும். அவர்களை பேருந்திலோ, வேறு நிகழ்விலோ பார்த்தால் அவர்கள் நிழல் நபர்கள் என்று சொல்ல தோன்றாது.உண்மையில் ஒரு ரவுடியாக இருப்பதற்கு நிறைய 'தில்'லும், நெஞ்சழுத்தமும் வேண்டும். நான் பார்த்த முக்கால் வாசி நிழலாளிகள் லேசாக தாங்கி தாங்கி அல்லது ஒரு பக்கம் சாய்ந்து தான் நடப்பார்கள். போலிஸ் ஸ்டேஷனில் 'லாடம்' கட்டியதின் விளைவது. லாடம் கட்டுதல் என்பது சாதாரண விஷயமில்லை. ஆனாலும்,நிழலாளிகள் அசாதாரணமான தாங்கு சக்தி உடையவர்கள். லாக்கப்பில் மூன்று காவலர்கள் மரண அடி அடிக்க, நான் திருடவில்லை, அடிக்கவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டு, வெளியே வந்து டிஞ்சர் போட்டுக் கொண்டு, சரக்கு அடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே "த்தா, நான் தான் போட்டேன் மச்சான். ஒவரா துள்ளினான், சொருவிட்டென்" என சர்வசாதாரணமாக சொல்லும் மனிதர்களை கண்ணருகில் பார்த்திருக்கிறேன்.ஆயுதங்களுக்கு நிழல் மொழியில் "சாமான்", "பொருள்", "மேட்டர்" என்று பல பெயர்கள். 'சாமானோட கிளம்பு மாமே' என்றால், ஆயுதம் எடுத்து ஒரு சண்டைக்கு தயாராகு என்று பொருள். தென்தமிழகத்தில் தான் அரிவாளை சட்டைக்கு பின்புறம் வைப்பார்கள். அப்புறம் பொறுமையாய் பின்னாடியில் இருந்து தமிழ் சினிமா ஹீரோக்கள் நெஞ்சுக்கு நேரே பிடிப்பார்கள். இங்கே, வடசென்னையில், லுங்கியின் வலப்பக்கத்தில் வைப்பார்கள். லுங்கியின் இடுப்புக்கு மேலே கைப்பிடியும், கூரான பகுதி தொடைக்கு வெளியே இட/வலப்புறத்திலோ இருக்கும். சண்டை என்று வந்துவிட்டால், லுங்கியினை இறக்கி கட்டினால், கையில் அரிவாளோ, கத்தியோ வந்துவிடும். ஒரே போடு, ஆள் காலி. இரு குழுக்களுக்கு இடையே சில சமயங்களில் சமரச பேச்சுக்கள் நடக்கும். 'காம்பரமெய்ஸ்' அல்லது 'பேசி முடிச்சிக்கலாம்' என்று பொருள். இந்த காம்பரமெய்ஸ் பேசும் போதெல்லாம், முதலில் இரு அணியினரும் அணைத்துக் கொள்வார்கள். இது பரஸ்பர மரியாதை இல்லை. லுங்கியின் இடையில் ஆயுதம் இருக்கிறதா என்று கேட்காமல் அறிந்துக் கொள்வது. [என்ன பண்பாடுய்யா இது! ஒரு பயலும் நிழலுலக பண்பாட்டில் முனைவர் பட்டம் செய்ய மாட்டேன்கிறார்கள்!]தமிழ் சினிமாவில் வருவது போல அடியாட்கள் தெளிவாக பின்னாலெல்லாம் வந்து நிற்க மாட்டார்கள். ஒரு நிழல் நபர் ஒரு தெருவில் இருந்தால், தெரு முனையிலுள்ள டீக்கடையில் அவனுடைய ஆட்கள் மூன்று பேர்கள் இருப்பார்கள். தெருவிலிருக்கும் சைக்கிள் கடையில் ஒருவன் பஞ்சர் பார்த்துக் கொண்டிருப்பான். யாராவது இரண்டு பேர்கள் தெருவில் உலாவிக் கொண்டிருப்பார்கள். முட்டு சந்தாயிருந்தால், குட்டி சுவற்றில் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். நிழலாளியிடம் ஆயுதம் இருக்காது, மற்றவர்களிடத்தில் இருக்கும். ஒரு தெருவில் நுழையும் போதே, பரிச்சயம் உள்ளவர்களால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.ஒரு தனி நபரையோ, கூட்டத்தையோ 'போட்டுத் தள்ளு'வதற்கு பெயர் 'ஸ்கெட்சு'. ஸ்கெட்சு போட்டாச்சு என்றால், வளைத்தாகிவிட்டது என்று பொருள். நிழல் உலகம் என்பது சும்மா கத்தி தூக்கவதற்கு மட்டுமல்ல. கூர்மையான அறிவு வேண்டும். ஒரு கூட்டத்திலோ, கடைத்தெருவிலோ எதிராளியை அடையாளம் காணும் திறன் வேண்டும். ஒரு assignment செய்ய வேண்டுமென்றால் தூங்காமல் அந்த நபரை பின்தொடர வேண்டும். நபரின் எல்லா உறவுகளையும், பழக்கவழக்கங்களையும் நுண்ணியமாக கண்காணிக்க வேண்டும். கத்தியோ, அரிவாளோ தூக்குபவரெல்லாம் நிழலாளியாக முடியாது. ஸ்கெட்சு போட்டாகிவிட்டால், அதனை நடைமுறைப்படுத்த பல்வேறு மக்களை இணைக்கவேண்டியிருக்கும். நம்மவரில் கமல் ஒரு ப்ளேடு வாங்கி, விரலிடுக்கில் வைத்திருப்பார். இங்கே அதேயே இன்னும் கொஞ்சம் உள்ளேப் போய், ப்ளேடினை துகளாக்கி, பான் பராக், பீடா சகிதம் வாயில் அடக்கிக் கொண்டிருப்பார்கள். சில இடங்களில் இதற்கு 'மாஷ்' என்று பெயர். மாஷா இருக்கேன் என்றால் பேசாதே என்று பொருள். அதாவது, உமிழ்நீரை தேக்கி, எதுவும் முடியாத பட்சத்தில், வாயிலிருக்கும் துகள்களையும் பான்பராக்கையும் ஒருசேர எதிராளியின் மீது துப்பினீர்களேயானால், முகமெங்கும் கிழித்து விடும். படு அபாயகரமான விஷயம், வாயில் துகள்கள் இருப்பது. ஆனாலும், அதையும் செய்யும் நிழலாளிகள் இருக்கிறார்கள். ஒரு ஸ்கெட்சு முடிந்தால் அந்த கூட்டத்தினையே ஆறு மாதம் பார்க்க முடியாது. எங்கேனும் போய்விடுவார்கள். ஆனாலும், அந்த வலைப்பின்னலும் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருக்கும். படிக்க சுவாரஸ்யமாகவும், திரிலிங்காகவும் இருக்கும் அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் படு மோசமாக இருக்கும்.வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ முடியாது. ஒரே தெருவில் உங்களால் பாதிக்கப்பட்டவனும் நீங்களும் இருப்பீர்கள். அவன் உங்களை பழிவாங்க காத்துக் கொண்டிருப்பான். தூக்கம் வராது. தூங்க முடியாது. மிதமிஞ்சி குடித்தால் தான் நிதானமாக இருக்க முடியும். 'பாங்' இல்லாமலோ, 'கிராஸ்' இல்லாமலோ வாழ பழகுதல் கடினம். சாதாரணமாக இருந்தால், நினைவுகளும், கற்பனைகளுமே உங்களை பைத்தியம் பிடிக்க வைத்து விடும். எங்கேயும், பாத்ரூம் போனால் கூட தனியே போகமுடியாது. காதலிக்க முடியாது. எதிராளி பார்த்தால், உங்கள் காதலி நாசமடைவாள் அல்லது அவளை மிரட்டி, உங்களை அழைக்க வைத்துப் போட்டு தள்ளி விடுவார்கள். பொண்டாட்டியோடு படுக்கும் போது கூட கதவுக்கு வெளியே இரண்டு பேர்கள் உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ இருப்பார்கள் என்று சொன்னால், அது தான் உண்மை. போலீஸுக்கு மேலிடத்திலிருந்து 'அழுத்தம்' வந்தால் எந்நேரமும் உங்களை என்கவுண்டரில் போட்டு தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் உங்களோடு பிரியமாய் இருப்பதுப் போல நடிப்பார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நேராக பார்க்க மாட்டார்கள். நள்ளிரவு சந்திப்புகள் மட்டுமே நடக்கும். கூட இருக்கும் ஆட்களை கட்சி மாறி, குரூப் மாறி காட்டிக் கொடுப்பார்கள். போட்டு தள்ளுவார்கள். ராயபுரத்தில் ஒரு பெரும் மதிமுக பிரமுகர் *(முன்னாளைய நிழலாளி) காலையில் வாக்கிங் போகும் போது நடுரோட்டில் கழுத்து திருகப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் எப்போது எடுக்கப்படும், போகும் என்று தெரியாது. யாரையும் நிரம்ப நெருக்கமாகவோ, நிரம்ப தொலைவிலோ வைக்கக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செல்போனோ, தொடர்புகளேயோ மாற்ற வேண்டியதிருக்கும். மக்களோடு மக்களாய் உலவ முடியாது. அடிதடியோடு இருக்கும்வரை தான் மரியாதை. மீண்டும் மீண்டும் அங்கிருந்து வெளியே வராமல் தவிக்கும் நிறைய நபர்களுக்கான காரணங்கள் தான் இவை. அபூர்வமாக வெகு சில நபர்கள் அங்கிருந்து வெளியே வந்து பெரிய வணிக நிறுவனங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். [சென்னையில் ஒடும் கால் டாக்சிகள், துறைமுகத்தில் பொருட்களை ஏற்றி, இறக்கும் ஒப்பந்தம், எண்ணூர் நாராயணணுக்கு சொந்தம். போரூர் ராமசந்திரா மருத்துவமனை, ஹாட் சிப்ஸ் உணவகங்கள், நிறைய கல்யாண மண்டபங்கள் உடையாருக்கு சொந்தம் [உடையார் சென்னையில் 1980களின் பிற்பகுதியில் மிகப் பெரிய தாதா]. ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் டிரேடர்ஸ் ஜந்து நட்சத்திர ஹோட்டல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தம் (எம்.ஜி.ஆர் காலத்தில் மிகப் பெரிய கட்டப்பஞ்சாயத்து நபர்)]ஆனால் இவை அபூர்வம். பெரும்பாலும், வாழ்க்கை எங்கே தொடங்கினீர்களோ அங்கேயோ முடிந்து போகும். வடசென்னையில் இருக்கும் போது பார்த்த ஒரு மரணம் மறக்க முடியாதது. வெறும் 20 பேர்கள் மட்டுமே, என் தந்தை உள்பட போன அந்த சவ ஊர்வலம், 1950-60களில் வடசென்னையினை தன் கையில் வைத்திருந்த ஒரு முன்னோடி தாதாவின் சவ ஊர்வலம். தன் பின்னாட்களில் ஒன்றுமில்லாமல், மோசமான நிலையில், மனநிலை பாதிப்படைந்து இறந்து போனார். வாழ்க்கை அவ்வளவுதான். கூட்டமாய் இருக்கும் போது உரத்து பேசினாலும், தனியே இருக்கும்போது ஒண்ணுக்குப் போக கூட பயந்து சாக வேண்டியதிருக்கும். நிழலாளியாய் துடிப்பாய் இருக்கும் போது இருக்கும் கவர்ச்சியும், கிளர்ச்சியும், கத்தி பிடிக்கும் போது இருக்கும் தைரியமும் வாழ்நாள் முழுக்க வாராது. நாற்பது வயதிற்கு மேல் நீங்கள் ஒரு குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஐம்பதாவது வயதினை பார்க்க மாட்டீர்கள். யாராவது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை கொன்று விடுவார்கள். அடையாளம் தெரியாத பிணம் கூவத்தில் கரை ஒதுங்கியது என்று தினசரியில் ஒரு பெட்டிச்செய்தியில் வாழ்க்கை முடிந்துவிடும். ஒரு முறை கத்தி தொட்டிர்களேயானால் முடிந்தது கதை. வேறு எதாவது மாநிலமோ, நாடோ போனாலேயொழிய தப்பிக்க முடியாது. அதுவும் உத்தரவாதமில்லை (உ.தா. சோட்டா ஷகில், அபு சலீம் )ஹிந்தியில் சத்யா, கம்பெனி, சமீபத்தில் வந்த சர்கார், அபஹாரன் போன்ற நிழலுகத்தினை மையமாக கொண்ட படங்கள் அதிகம். தமிழில் மிகக் குறைவு. தொட்டி ஜெயா போல அடியாட்கள் படங்கள் வந்ததுண்டு. முழுமையான நிழல் உலகப்படங்கள் மிகக்குறைவு. 'ஆறு' படம் அந்த மாதிரி பின்புலம் தான் என்றாலும், த்ரிஷா போன்ற பெண்கள் ஒரு ரவுடியினை காதலிப்பது என்பது 'புதியபாதை' காலத்திய சரக்கு. புதுப்பேட்டை பட ஸ்டில்களைப் பார்த்தால், கொஞ்சம் விஷய ஞானத்துடனும், யதார்த்துடனும் வெளிபடும் என்று தெரிகிறது. ஆ.வி. பேட்டியில் செல்வராகவன் இதை சொல்லியிருக்கிறார். தென்சென்னை, அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் இருக்கும் மக்களுக்கான பிரைமர் இது. இதன்மூலம் படம் பார்க்கும்போது தேவையில்லாமல் சில விஷயங்கள் நடக்காது, சாத்தியமில்லை என்று ஒதுக்கி தள்ளாதீர்கள். இதில் நான் சொன்ன விஷயங்கள் வரவில்லையென்றாலும், ஒரு வரலாற்று ஆவணமாக இதை படித்து உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது எதிர்கால சந்ததிகளுக்கு வடசென்னை நிழலுலகம் எப்படி இருந்தது என்பதை விளக்கவாவது பாதுகாப்பாய் ஒரு குறுந்தகட்டில் எழுதி, புதைத்து விடுங்கள். நமக்கு பின் வரும் சந்ததிகள் படித்து தேர்ச்சி அடையட்டும் : )))))))))முக்கிய பின்குறிப்பு: இதை எழுதுவதால் செல்வராகவன் எதுவும் எனக்கு பணம் தரவில்லை என்பதை சத்யம் திரையரங்கு பார்க்கிங் டிக்கேட்டின் மீது அடித்து சத்தியம் செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;* அந்த பிரமுகர் ஏழுமலை நாயக்கர். சென்னையின் அத்தனை தாதாகளுக்கும் அண்ணன். என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட வீரமணி இவரின் சிஷ்யன்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://urpudathathu.blogspot.com/2005/12/101.html"&gt;நாராயணன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-113587271880928909?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113587271880928909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113587271880928909'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/12/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-113103832735872711</id><published>2005-11-03T09:14:00.000-08:00</published><updated>2005-11-03T09:18:47.376-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1289/357/1600/kaandi.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1289/357/400/kaandi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;உலகின் அதிகாரம் படைத்த பெண்மணி மட்டுமல்ல... கறுப்பு நிறத்தாலும், எளிய தோற்றத்தாலும்தன் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று நிரூபித்தவர் காண்டி!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அவரைப் பார்க்கும் யாருக்குமே ஆச்சர்யம் தொற்றிக் கொள்ளும்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;‘உலகின் அதிகாரம் படைத்த நூறு பெண்மணிகள்’ பட்டியலில்,முதலாவது இடத்தில் வைத்து புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை கொண்டாடிய பெண் இவரா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;வெளிவிவகாரத்துறை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எடுக்கும் எந்த முடிவுமே காத்திருப்பது இவர் தலையசைப்புக்காகவா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! ஐம்பத்தோரு வயதான காண்டலீசா ரைஸ் என்ற கறுப்பு சிறுத்தைதான் இன்று உலகின் ‘நம்பர் ஒன் அதிகாரம் படைத்த’ பெண்மணி. அமெரிக்காவின் ‘செகரெட்டரி ஆஃப் ஸ்டேட்’ என்ற வல்லமை மிக்க பதவியில் இருந்தபடி உலகத் தலைவர் களையெல்லாம் உற்று நோக்க வைத்திருப்பவர். அடுத்த அமெரிக்க அதிபராக வரக்கூடும் என்று தேர்தல் ஆரூடங்களில் அடிபடுபவர். எல்லாவற்றுக்கும் மேலாக, கறுப்பு நிறத்தாலும், எளிய தோற்றத்தாலும் எந்த ஒரு தனி மனிதரின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதற்கு மிகப் பெரும் உதாரணமாக திகழ்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில் 1940 -&amp; 1950களில் இனத் துவேஷத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கறுப்பின சிறுமியிடம், “நீ நகரின் பெரிய சான்ட்விச் கடையில், மற்ற எல்லா வெள்ளைக்கார குழந்தைகளுடன், சேர்ந்து உண்ணக்கூட அருகதை அற்றவளாக இப்போது கருதப் படலாம். ஆனால், நீ நினைத்தால், ஒருநாள் அமெரிக்க அதிபர் ஆகக் கூட முடியும்!’’ என்று சொன்ன பெற்றோரின் தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். அந்த வார்த்தைகளின் மந்திர சக்திதான் காண்டி என்று செல்லமாக அழைக்கப்படுகிற டாக்டர் காண்டலீசா ரைஸை இத்தனை உயரங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு ஏகப்பட்ட சுதந்திரம் உள்ளது என்று கருதப்படுகிற அமெரிக்காவிலேயே, இன்னமும் பெண்களை ஆண்களுக்கு சமமாகக் கருதுவதில் நிறைய தயக்கங்கள் உண்டு. இங்கேயும் பெண் என்பவள் கணவனுக்கு பின் நின்று அவனுக்கு ஆதரவளிப்பவளாக, நல்ல வீட்டரசியாக, ஒரு பாரம்பரிய குடும்பத் தலைவி என்ற வட்டத்துக்குள் வைத்தே பார்க்கப்படுகிறாள். அவளை தனித்தியங்கும் சக்தியாக, ஒரு நாட்டை நிர்வகிப்பவளாக அடையாளம் காண தயங்குகிறார்கள். இப்படியரு சூழ்நிலையில், நாட்டு நிர்வாகத்தில்... அதுவும், பழமைவாத எண்ணங்கள் கொண்ட, நிற ரீதியான பாகுபாடு களில் நம்பிக்கை கொண்ட குடியரசு கட்சியின் ஆட்சியிலேயே வல்லமை மிக்க இடத்துக்கு காண்டலீசா வந்திருப்பது சாதாரண விஷயமல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;ஜமைக்காவிலிருந்து அமெரிக்கா வுக்கு குடியேறிய ஒரு தேவாலயப் பாதிரியாருக்கும், இசை ஆசிரியருக் கும் மகளாகப் பிறந்த காண்டலீசாவின் இளமைப் பருவம், இன வேறுபாட்டுத் தீயினால் சுடப்பட்டது. ‘‘இதைக் கடக்க வேண்டுமெனில் மற்றவரை விட இரண்டு மடங்கு திறமையை எப்போதும் நான் வெளிப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்!” என்கிறார் காண்டலீசா. அப்படி அவர் வெளிப்படுத்திய திறமைதான் அவரை ‘செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்’ என்கிற பதவிக்கு வந்த இரண்டாவது பெண் (முதலாமவர் -மடலின் ஆல்பிரைட்) மற்றும் இரண்டாவது கறுப்பினத்தவர் (முதலாமவர் காலின் பவல்) என்ற அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார மையத்துக்கு மிக நெருங்கியவர் என்று வர்ணிக்கப்படும் காண்டலீசாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தன்னுடைய 15&amp;amp;வது வயதில் பியானோ வகுப்புகள் படிக்க ஆரம்பித்த காண்டலீசாவுக்கு ஜோஸஃப் கார்பெல் என்ற விரிவுரையாளர் எடுத்த உலக அரசியல் வகுப்பு, அவருடைய வாழ்க்கையையே திசை மாற்றி, ‘பொலிடிகல் சயன்ஸ்’ பிரிவில் ஆர்வம் கொள்ள வைத்தது. அதில் முதுகலைப் பட்டம் பெற்ற காண்டலீசா, தன்னுடைய இருபத்தாறாவது வயதில் அதே துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார். பிறகு, சோவியத் யூனியனைப் பற்றி ஆர்வம் கொண்டு படிக்கத் துவங்கிய இவர், ‘சோவியத் யூனியன் ஸ்பெஷலிஸ்ட்’ என்று கருதப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அப்பா சீனியர் புஷ் அதிபராக இருந்தபோது, ‘‘சோவியத் யூனியன் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் காண்டலீசா ரைஸ் சொன்னதுதான்!’’ என்றபடி ரஷ்ய அதிபர் கோர்பசேவுக்கு காண்டலீசாவை அறிமுகப்படுத்தி வைத்தது ஒன்று போதும், இவரது ‘சோவியத் ஞானம்’ பற்றி சொல்ல. அப்போது, முப்பத்தைந்தே வயதான அந்த இளம் கறுப்பின பெண்ணை ஆச்சரியம் ப்ளஸ் பிரமிப்போடு பார்த்தார் கோர்பசேவ். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த பனிப்போரை அமைதி யான முறையில் முடிவுக்குக் கொண்டுவர, சீனியர் புஷ்ஷ§க்கு பெரும் உதவிகரமாக இருந்தவர் காண்டலீசா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தைத் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆளுமை உள்ள காண்டி, கால்பந்தாட்ட விளையாட்டு ரசிகர். பியானோ வாசிப்பதில் ஆர்வமுள்ள இவர், தொழில் முறை கலைஞர்களுடன்கூட மேடையில் பியானோ வாசிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;காண்டி, முதன் முறையாக 1977&amp;amp;ல் அரசுத் துறையில் ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினார். மென்மையாக, தோழமையின் இதத்தோடு பேசுபவர் என்று நண்பர்களால் புகழப் படுகிறவர் காண்டி. அதே சமயம், விடாமுயற்சி மற்றும் பிடிவாதத்துக்கும் பெயர் பெற்றவர். இவரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் குப்புற விழுந்ததை அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தூண்கள் எல்லாம் கதை கதையாக சொல்லும்.&lt;br /&gt;அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் காண்டலீசாவுக்கு இருக்கிற செல்வாக்கு ரொம்ப ரொம்ப அதிகம் என்கின்றன, அதிகார வட்டாரங்கள். உலக வர்த்தக மைய இடிப்புக்கு பிறகு நடைபெற்ற முக்கியமான, பதட்டம் நிறைந்த ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஜார்ஜ் புஷ், காண்டியை இருக்கச் சொல்லியிருக்கிறார். காண்டி பேச வேண்டுமென்பதுகூட முக்கியமில்லை. ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்த பிறகு விஷயத்தை கிரகித்துக் கொள்ள தனக்கு உபரியாக, நம்பகமான கண்களும், காதுகளும் தேவைப்பட்டன புஷ்ஷ§க்கு. அந்தளவுக்கு காண்டி முக்கியமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி விவகாரங்களில் போதிய அளவு அனுபவம் அற்ற ஜார்ஜ் புஷ்ஷை போன்றதொரு அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக இருப்பதில், காண்டலீசாவுக்கு சங்கடங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உலக வர்த்தக மைய இடிப்பு தொடங்கி, இராக் போர், தற்போது நியூ ஆர்லியன்ஸ் நிகழ்வு வரை மீடியாக்களில் இவர் தலை ஏகத்துக்கும் உருட்டப்பட்டது. காண்டி இந்தப் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்தபோது கொடுத்த பேட்டி இன்னொரு உதாரணம். “அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாட்டு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய எதிர் மறையான எண்ணங்களை எப்படி மாற்றப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆஃப்கனிலும் இராக்கிலும் அவர்கள் சார்பாகத்தான் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது!” என்று காண்டி பதில் சொல்ல, அதை எதிர்க்கட்சி ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு கேலி செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் ரீதியாக மட்டுமில்லை... பெண் என்பதால், இவர் உடை உடுத்துவதை, காலணிகள் அணிவதைக்கூட ‘செக்ஸி’ என்று மீடியா கழுகுக் கண்ணோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது. இவர் பணிபுரிந்த ‘செவ்ரான்’ எண்ணெய் நிறுவனம், தன் ஆயில் டாங்கர் ஒன்றுக்கு இவர் பெயரை வைத்து கௌரவப்படுத்தியதுகூட மீடியாவின் வாய்க்கு அவல் ஆகவும், அவசர அவசரமாக பெயர் மாற்றப்பட்டது. இத்தனை சலசலப்புக்கு மத்தியிலும் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு தோழமையாக, இரும்பினை போன்ற உறுதியோடு எதிர்ப்புகளை, லட்சியம் செய்யாது காண்டி போய்க் கொண்டிருப்பதில், இவரை விமர்சிப்பவர்கள்கூட வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை கவனித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க மீடியாவின் மண்டையைக் குடையும் முக்கியமான கேள்வி இது... “2008 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டால், குடியரசுக் கட்சி வேட்பாளராக காண்டி அறிவிக்கப்படுவாரா?” என்பதுதான் அது.&lt;br /&gt;பேட்டிகளில் இந்தக் கேள்விக்கு, உறுதியாக மறுப்பு தெரிவித்து வரும் இந்த இரும்பரசி, ரஷ்யாவில் பதிலளித்த ரேடியோ பேட்டி ஒன்றில் ‘‘ஆம்’’ என்று வாய் தவறி(?!) சொல்லிவிட்டு, பிறகு அவசர அவசரமாக அந்தப் பேட்டியிலேயே மறுப்பு தெரிவித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே அடைகாத்துக் கொண்டிருக்கும் பெற்றோரின் வார்த்தைகள் லேசாக தலை நீட்டி இருக்கிறது போலும். அந்தக் கனவு முட்டை மட்டும் பொரிந்து விட்டால், அமெரிக்க கறுப்பின வரலாற்றில் அது நிச்சயமாகவே ஒரு புதிய அத்தியாயம்தான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-113103832735872711?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113103832735872711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/113103832735872711'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/11/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-112943408566716934</id><published>2005-10-15T20:40:00.000-07:00</published><updated>2005-10-15T20:41:25.673-07:00</updated><title type='text'></title><content type='html'>"&lt;em&gt;இந்த மண்ணில் உன்னதம் எதுவும் முளைக்காது, என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக் கிடந்த சமூகங்கள் மிகக் குறுகிய காலப்பொழுதில் அறிவின் கூர்மைகளோடும், கலைகளின் வீச்சுக்களோடும் சிலிர்த்துக் கொண்டு எழுந்து வந்திருக்கின்றன. இது போன்ற கலை எழுச்சிகளையும், அறிவுப் புரட்சிகளையும் சரித்திரங்கள் துல்லியமாகப் பதிவு செய்திருக்கின்றன. அங்கு பள்ளங்கள் நிரம்பி அவற்றின் மீது கோபுரங்கள் எழுந்திருக்கின்றன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு உன்னதம் சாத்தியம் என்றால் அதே உன்னதத்தை இங்கும் எழுப்பிக் காட்ட முடியும். நமக்குக் கனவுகள் வேண்டும். அந்தக் கனவுகளை மண்ணில் இறக்க அசுர உழைப்பு வேண்டும். பரஸ்பரம் தொடை தட்டிக் கொள்வதை விட்டு, ஆக்கத்தை நோக்கி நகரும் மன விகாசம் வேண்டும். பொது எதிரிகளைக் கிழிக்கும் நெஞ்சுரம் வேண்டும். சவால் வேண்டும். தீர்க்கதரிசனம் வேண்டும். அப்போது இங்கும் பள்ளங்களை நிரப்ப முடியும். கலைக் கோபுரங்களையும் எழுப்ப முடியும்"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுந்தர ராமசாமி, "விரிவும் ஆழமும் தேடி"&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-112943408566716934?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/112943408566716934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/112943408566716934'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/10/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-112568449330377841</id><published>2005-09-02T11:02:00.000-07:00</published><updated>2005-09-02T11:08:13.316-07:00</updated><title type='text'></title><content type='html'>படைப்புகள் சுய புராணம் தலைவாசல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ. ராமகிருஷ்ணன் - அம்மா அப்பா வைச்ச பெயர்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ. ரஜினி ராம்கி - அம்மா அப்பா சம்மதத்தோட எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்&lt;br /&gt;&lt;br /&gt;3.2.1976 - அண்ணா மறைந்த நாள் என்று ஊரே துக்கத்திலிருக்கும் போது நான் பூமியை பார்த்த நாள்&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது போக்கு - கேள்வி கேட்பது அல்லது கமெண்ட் அடிப்பது.. பத்திரிக்கைகளில் மட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்ஸி - என்ஜினியரிங் சேர முடியாமல் வேற வழியின்றி படிச்சு முடிச்சது&lt;br /&gt;&lt;br /&gt;எம்.சி.ஏ - பொழைப்புக்காக படிச்சது&lt;br /&gt;&lt;br /&gt;கலால் துறையில் உதவியாளர் வேலை - நினைச்சது கிடைக்காவிட்டாலும் கிடைச்சதை வெச்சுக்கிட்டு நினைச்சதை தேட வைக்க உதவுவது&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார் - சின்ன வயசிலிருந்து இந்த நிமிஷம் வரை எனக்கிருக்கும் ஒரே நம்பகமான, வாய் திறக்காத ரகசிய சிநேகிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி - ஆதர்ஷ புருஷர். நிஜமான வழிகாட்டி&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி - சர்டி  ·பிகேட்டிலும் அப்பாவுக்கு வரும் ஜாதக குறிப்புகளிலும் இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;மதம் - மனசிலும் நெத்தியிலும் மட்டுமிருக்கும் விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்ட காலம் - நான் நானாகவே இன்னும் இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு - எழுதிக் கொண்டேயிருப்பதால் கிடைக்கும் ஒரே ஆதாயம்&lt;br /&gt;&lt;br /&gt;பலம் - ரஜினி ரசிகனாக இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனம் - ரஜினி ரசிகனாக இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை - நினைக்கும்போதெல்லாம் நெஞ்சில் ஏசியை ஆன் பண்ணும் அபூர்வ வார்த்தை&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷமான நேரம் - ரஜினி, எனது கையை பிடித்து குலுக்கியது&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பம் - எதிர்காலத்தை பற்றி நினைக்கும் போது எனக்கு மட்டும் வருவது&lt;br /&gt;&lt;br /&gt;ஹேர் டை - இப்போதே அடிக்க வேண்டிய வஸ்து&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட் - ரஜினி பிடிப்பதால் நான் பிடிக்காமல் இருக்கும் வஸ்து&lt;br /&gt;&lt;br /&gt;450 - எனது கிறுக்கலை விமர்சனமாக நினைத்து முண்ணணிப் பத்திரிக்கைகள் மெனக்கெட்டு அச்சிலேற்றிய கடிதங்களின் எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;300 - அரசு, மதன், மனிதன், தராசு, அந்துமணி, ·பீனிக்ஸ், சோ என்று எல்லோரும் போனால் போகிறதென்று பதிலளித்த எனது கேள்விகளின் எண்ணிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;80 - கண்ணில் பட்டது, தேடிப் படித்தது, காதால் கேட்டது என்று சகல விதங்களிலும் சேகரித்து அச்சில் வந்த துணுக்குகளின் எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;8 - ரொம்பவும் கஷ்டப்பட்டு எழுதிய ஒருபக்க சிறுகதைகளின் எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;7 - எனக்கு மட்டுமே புரிகிற ஜோக்குகளை அச்சில் ஏற்றியதன் எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;4 - 400 பக்கத்துக்கு மேல் கிழித்து எறிந்த பின்பு உருவான கவிதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி இதுவரை பிரசுரமானவைகளின் எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;பாக்யா - இன்னமும் நான் எழுதியிராத ஒரே வாராந்திரப் பத்திரிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் - இன்னமும் நான் எழுதியிராத ஒரே தினசரி&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் பேசுகிறது மணீயன் - முதன் முதலில் தபால் முலம் தட்டிக்கொடுத்து எழுதச் சொன்ன பத்திரிக்கையுலக பிரபலம்&lt;br /&gt;&lt;br /&gt;லேனா தமிழ்வாணன் - நேரில் தட்டிக்கொடுத்து நிறைய கேள்வி கேட்கச் சொன்னவர்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சாதனை - ரஜினியிடம் கேள்வி கேட்டது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சாதனை - தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகால சாதனை - ரஜினியை பற்றி விமர்சித்தோ பாராட்டியோ எழுதாமலிருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;மகாத்மா காந்திஜி - மனித நிலையை தாண்டிவிட்ட மகான். பெரும்பாலான விஷயங்களில் எனது நிலையை தீர்மானிப்பது இவர் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம் - இன்று வரை எட்ட முடியாத உயரத்திலிருக்கும் தாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் பணி - 1996 தேர்தலின் போது அம்மா ஆட்களிடம் அடிவாங்காத குறையாய் தப்பிச்ச வந்த சங்கதியை கெளரவமாக சொல்லிக் கொள்வது&lt;br /&gt;&lt;br /&gt;தாடி - வாரத்தில் 3 நாட்களாவது உடனிருக்கும் சகோதரன்&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை - சினிமாவை பத்தியே பேசிக்கொண்டிருக்கும் சக நண்பனிடமிருந்து எனக்கு கிடைக்காத விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;காதல் - புரிந்து கொள்ளமுடியாத சங்கதிகளின் டாப் டென் லிஸ்டில் முதலில் இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் - நான் சொல்வதை அடுத்தவங்க கேட்குமிடம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸ் - அடுத்தவங்க சொல்வதை நான் கேட்டுக்கொள்ளுமிடம்&lt;br /&gt;&lt;br /&gt;இசை - ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளில் மாட்டிக்கொள்ளாத ஒரே சங்கதி&lt;br /&gt;&lt;br /&gt;நடனம் - பாத்ருமில் சோப்பை உடம்பில் ஊற வைத்தபின் கை கால்களுக்கு நான் கொடுக்கும் வேலை&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரும் - படுத்தால் உடனே து¡க்கம் வராத இடம்&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக் கணிப்பு - அடுத்தவர்களை பற்றி நான் போடும் கணக்கு&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகள் - எங்கள் தலைவரை வம்புக்கு இழுக்கும் நிஜமான வில்லன்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் - எதிரிகள் போல நடந்து கொண்டாலும் துரோகிகள் அல்ல என்பதை அடிக்கடி நிருபிப்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மேடை - நான் கோமாளி என்பதை வெளிச்சம் போட்டு காட்டுமிடம்&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம் - ஆழம் தெரியாமல் காலை விடும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் - நிம்மதி கிடைக்காதபோதெல்லாம் நினைவுக்கு வருவது&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா - ரஜினிக்காக மட்டும் இன்னும் சகித்துக்கொண்டிருக்கும் சங்கதி&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் - ஆண்டவனுக்கு அடுத்தபடியாக எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;லைப்ரரி - நிறைய புத்தகங்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு து¡ங்குமிடம்&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பறை - உடலை உள்ளுக்குள் வைத்துவிட்டு மனசை வெளியே அலையவிடும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;மழை - சென்னையில் இருக்கும் வரை பார்க்கவே முடியாத விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;என்கவுண்டர் -  மெத்த படிச்ச ஆளுங்க மத்தியில் மாட்டிக்கொள்ளும்போது நேரிடுவது&lt;br /&gt;&lt;br /&gt;யானை - சட்டையில்லாமல் படுத்து து¡ங்கும் நண்பனை பார்க்கும்போது ஞாபகத்துக்கு வருவது&lt;br /&gt;&lt;br /&gt;இஷ்ட தெய்வம் - ஸ்ரீராகவேந்திரர். அதிகமாக கஷ்டம் கொடுக்காமல் து¡ரத்திலிருப்பதால்&lt;br /&gt;&lt;br /&gt;முனிசிபல் ஆபிஸ் பிள்ளையார் - என்னுடைய வெற்றி தோல்விகளையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கும் ஒரே ஆ 'சாமி'1&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி - வருஷத்துக்கு ஒரு முறை அக்கறையாய் கூப்பிட்டு அழுக்கை துடைத்து விட்டவளிடமிருந்து பதினைஞ்சு வருஷமாய் பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கோட்டை - சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்து முதன் முதலில் ரத்த தானம் செய்ய வைத்து செம்மண்ணை இன்னும் சிவப்பாக்கிய ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;மகத்து வாழ்க்கை - 25 வருஷத்துக்கு முந்தி நான் பார்த்த சினிமா இன்னும் நெஞ்சுக்குள் ஸ்டில்லாக! முன்று வயது வரை வீட்டு முற்றத்தையே உலகமாக காட்டிய சின்னஞ் சிறிய கிராமம் இன்னும் சிதம்பரத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறது...ஜாதி கலவரங்களில் பலியாகிவிடாமல்!&lt;br /&gt;&lt;br /&gt;கலர் சாக்பீஸ் - ஒண்ணாங்கிளாஸ் டீச்சரின் தர்பூசணி பற்றிய கேள்விக்கு சரியான பதிலை சொல்லி நான் தட்டிச் சென்ற முதல் பரிசு!&lt;br /&gt;&lt;br /&gt;ராஜரிஷி - நலங்கிள்ளியின் மகன்களை கொடுங்கிள்ளியிடமிருந்து காப்பாற்றும் காவி டிரெஸ் மீடியேட்டராக அஞ்சாங்கிளாஸ் ஆண்டு விழாவில் மேடையேறி மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனத்தை சொதப்பலாக சொல்ல வைத்த நாடக பாத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;காமிக்ஸ் - பாட புஸ்தகத்தை ஓரங்கட்ட வைத்த முதல் வஸ்து&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை ஓர் ஆலயம் - நினைவு தெரிஞ்சு நான் பார்த்த முதல் படம். அஞ்சலி தேவி யானையால் மிதிபட்டு சாகும்போது சத்தம் போட்டு அழுது அப்பாவிடம் ஆன் த ஸ்பாட் அடி வாங்க வைத்த ஓரே படம்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்ஹாசன் - பிடித்த நடிகர். ரஜினிக்கே பிடித்த நடிகர் என்பதால்!&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் தண்ணீர் - நிஜமான கிராமியப் படம். ஏனோ அரசியலாக்கப்பட்டதில் அட்ரஸ் தொலைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலை ராகம்  - நாகரீகமான முறையில் காதலை விளக்கும் அசட்டுத்தனமான படம். விளையாடிய தெருவும் படித்த காலேஜும் படத்தில் வருவது பெருமை&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீராகவேந்திரர் - வெறும் அற்புதங்களை மட்டுமே சொல்லாத நிஜமான ஆன்மீகப்படம்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால் முடியும் தம்பி - சினிமாவில் நல்ல விஷயங்களெல்லாம் வராதுங்கிற கருத்தை மாத்திக்க வெச்ச படம்&lt;br /&gt;&lt;br /&gt;கே.பாலச்சந்தர் - குருவின் குரு. எந்த விஷயமிருந்தாலும் மனதை தொடுவதை மறக்காத சிகரம்&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜா - சினிமா இசையை அன்றாட வாழ்க்கையில் இட்டு நிரப்ப வைத்த அபூர்வ கலைஞன். து¡க்கமில்லாத ராத்திரிகளில் ஆர்மோனியப்பெட்டியுடன் துணைக்கு வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனா - இஇஇஇஇருக்கும்போது பிடிக்காத ஊராக இருந்தாலும் இரண்டே வருஷத்தில் ஏராளமான விஷயங்களை கத்துக்கொடுத்த 'குரு'வூர்&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் - சென்னையிலிருந்து கிளம்பும்போது வருத்தத்தையும் பூனாவிலிருந்து சென்னைக்கு திரும்பும்போது குது¡கலத்தையும் கொடுத்து வாழ்க்கையின் அர்த்தத்தை சொன்ன அநாயசமாக சொன்ன நண்பன்&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டாட்டம் - ஞாயிற்று கிழமை சாயந்திரம் கொண்டாட்டத்துக்கு பிறகு கோயில் உலா போகும்போது வரும் நிஜமான கொண்டாட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பம் வடை தயிர்சாதம் - வாராவாரம் பாலகுமாரன் ஸார் வீட்டுக்கு போன் போட வைத்த தொடர்&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதா ரமணன் - கோபம் என்ன விலைன்னு கேட்கும் பக்கத்து வீட்டு மாமி. பெண் எழுத்தாளர்கள் சொன்னவுடன் பளிச்சென ஞாபகத்துக்கு வரும் முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை மன்னன் - மாவீரனை விட மட்டமான படம்னு விமர்சனம் பண்ணி பக்கத்து சீட் ·பிரெண்டிடம் ஒரு கையில் கீறலும் இன்னொரு கையில் பிரம்படியும் (உபயம் - ஆறாங்கிளாஸ் டீச்சர்) வாங்கி தந்த படம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆயிரம் - சென்னை வானொலி அனுப்பிய சிக்கிமுக்கி கல்லை நாள் முழுக்க உரசிப் பார்த்து நெருப்பு வராமல் நொந்து போனதால் ரேடியோவையே ஜென்ம எதிரியாக்கிவிட்ட புரோகிராம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவை - மழை பொழியும் நாட்களின் மத்தியான து¡க்கம் கலைந்து போர்வையிலிருந்து எட்டி பார்க்கும் போது காதில் விழும் பிரபலமான வாசகம்&lt;br /&gt;&lt;br /&gt;நெசமாவா சொல்றே?! - பத்தாங்கிளாஸில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்த போது நிறைய பேர் உதிர்த்த பஞ்ச் டயலாக்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் எஜமான் ரீலிஸாவுதாம்டா! - முதலும் கடைசியுமான தற்கொலை முயற்சியை முடக்கி போட்ட டயலாக்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏவிசி காலேஜ் - ஆரம்ப நாள் முதல் ஆறு வருஷம் படிச்சு முடிக்கும் வரை மகிழ்ச்சியை விட அதிர்ச்சியையே அதிகமாக தந்த ஸ்தலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணன் - சந்திக்க விரும்பும் நபர். கமர்ஷியல் கட்டாயம் என்னும் 'துணையெழுத்து' இல்லாமலிருந்தால் 'பாபா',  'உ(பபா)ண்டவ'மாக வந்திருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே லட்சியம் - நல்ல ரஜினி ரசிகனாக இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகால வேதனை - பத்திரிக்கைகளிலெல்லாம் எழுதுவீங்களான்னு பல பேர் கேட்குறதுதான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-112568449330377841?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/112568449330377841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/112568449330377841'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/09/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-112308002865106436</id><published>2005-08-03T07:38:00.000-07:00</published><updated>2005-08-03T08:52:53.093-07:00</updated><title type='text'></title><content type='html'>சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்.... - இரா.முருகன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சினிமாப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது டைரக்டர் கோல்டி ஆனந்தின் பேட்டி கண்ணில் பட்டது. இந்தோ ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் 'தி கைடு' நாவலைப் படமாக டைரக்ட் செய்த அனுபவத்தைச் சொல்லும் போது மனுஷர் படு காஷீவலாகக் குறிப்பிடுகிறார்.... "நாவல்ல கதையம்சம் குறைவு. நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படத்தில் ஈடுகட்டினேன்.."சிறந்த கதாசிரியரான ஆர்.கே.நாராயணனுக்கே கதை சொல்லத் தெரியவில்லை என்கிற பாலிவுட்டில் குப்பை கொட்ட கே.ஏ.அப்பாஸ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களும் 'பாபி' திரைக்கதை எழுதிப் பாபத்திலும் பணத்திலும் பங்குபெற்றது உலகம் அறிந்த சங்கதி.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களுக்கும் சினிமாவுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் தமிழில் எழுத்தும் திரையும் ஒரே நேர்கோட்டில் வருவது அபூர்வம்.தி.ஜானகிராமன் எழுதிய 'கரும்பு' திரைக்கதை நிலையிலேயே நின்று போனதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக சலீல் சவுத்ரி இசையில் ஜேசுதாஸ் பாடிய 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற சிலப்பதிகாரக் கானல்வரியை முன்பெல்லாம் சிலோன் ரேடியோவில் நாள்தவறாமல் ஒலிபரப்புவார்கள். ஜானகிராமனின் 'மோகமுள்' ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் மனதில் தைக்காமல் போனாலும் நேர்மையான முயற்சிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'செம்மீன்' நாவலை தகழியின் எழுத்தில் விரிந்தது போலவே திரைக்குக் கொண்டுவர ஒரு ராமு காரியத் கிடைத்தது போல, யூ.ஆர். அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'வின் தட்சிண கன்னட கிராமப் பிராமணர்கள் வெள்ளித் திரையில் உயிர் பெற ஒரு கிரீஷ் கர்னாட் வந்தது போல, வைக்கம் முகம்மது பஷீரின் 'மதிளுகள்' மலையாளத் திரையில் உயர அடூர் கோபால கிருஷ்ணன் முயற்சி எடுத்தது போல, தமிழில் என்ன நடந்திருக்கிறது?யோசித்ததில், கல்கியின் 'தியாக பூமியை' அந்தக் காலத்திலேயே ஒளியில் வடித்த கே.எஸ்.சுப்ரமண்யமும், பொன்னீலனின் 'உறவுகள்' குறுநாவலை, 'பூட்டாத பூட்டுக்களாக' நிலைக்க வைத்த மகேந்திரனும், து.ராமமூர்த்தியின் 'குடிசை'யைத் திரையில் வேய்ந்த ஜெயபாரதியும் நினைவுக்கு வருகிறார்கள். (இந்தப் படம் எல்லாம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றனவா என்பது வேறு ஒரு விஷயம்!) அப்புறம் ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவனை' எழுதியதைப் போல் படமாக்கிய ஜெயகாந்தன்.நாலு சிறுகதைகளை உள்ளடக்கிய கறுப்பு வெள்ளைப் படமான ஜெயகாந்தனின் 'புதுச் செருப்பு' யாராலோ ரொம்ப நாளாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. பேன் வாரத்திலிருந்து பெருமாள் வாரம் வரை தேர்ந்தெடுத்து சினிமாப்படம் போடும் கேபிள் டிவிக்காரர்கள் இலக்கிய வாரம் வைத்து இது போன்ற படங்களையும் காட்டலாமே! கதை திரைப்படமாகிறதோ இல்லையோ, எழுத்தாளர்கள் திரைக்குப் போனது அசை போட, சுவாரஸ்யமான விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பதுகளில் புதுக்கவி¨தியின் பிதாமகர் ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராவும் 'ராமானுஜர்' படத்தில் நடித்ததாகத் தெரிகிறது. அறுபதுகளில் எடுத்த படத்தில் தேவிகாவின் கனவுக்காட்சியில் மன்மதனாக வந்தவர் 'கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிட'ச் சொல்லிக் கவிதை எழுதிய சோ.வைத்தீஸ்வரன். எண்பதுகளில் அமுதவன் கதை எழுதிய படத்தில் ஒரே ஒரு காட்சியில் சுஜாதா சங்கோஜத்தோடு தலைகாட்டி விட்டு ஆளை விட்டால் போதும் என்று திரைக்குப் பின்னால் ஓடிவிட்டார். பாளை சண்முகத்தின் 'காணி நிலம்' படத்தில் சட்டசபைக் காட்சியில் சபாநாயகராக சா.கந்தசாமி நடித்திருக்கிறார்.மேடையில் 'நாற்காலிக்காரராக'வும் சின்னத்திரையில் பனியனைத் திருப்பிப் போட்டுக் கொண்டு டென்ஷனுடன் வலம்வரும் கீழ் மத்தியதரக் குடும்பத்தலைவராகவும் வந்த அசோகமித்திரன் ஜெமினி சினிமாப் படக்கம்பெனியில் வேலை பார்த்த போதோ அப்புறமோ சினிமாவில் முகம் காட்டவில்லை.அரவிந்தனின் 'போக்குவெயில்' படத்தில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல, சையத் மிர்ஸாவின் 'மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ' படத்தில் இந்தி எழுத்தாளர் பீஷ்ம் சிஹானி போல (மறைந்த குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானியின் சகோதரர் இவர்) படம் முழுக்க்க கதாநாயகனாக, தமிழ் எழுத்தாளர் யாராவது வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.***************&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ச்சியாக யோசிக்கும் போது புதுமைப்பித்தனும் விந்தனும் தமிழ்ச் சினிமாவில் போராடி துரதிர்ஷ்டவசமாக வெற்றி பெற முடியவில்லை என்று பழைய கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.ஜெயகாந்தன் 'பாதை தெரியுது பார்' என்கிற படத்தில் கலெக்டராக வருகிற சிறுவேஷத்தில் நடித்திருக்கிறார். (பின்பு இந்தக் காட்சியை அவரே நீக்கிவிட்டார்)எம்.ஜி.ஆர் எத்தனை முறை கையை உயர்த்துகிறார் என்று சிறுவயதில் நாங்கள் வேடிக்கையாக எண்ணிக் கொண்டிருந்த பாடலான 'புதிய வானம், புதிய பூமி' பாடலில் எழுத்தாளர் சாவி ஒரு காட்சியில் பரிதாபமாக முழித்துக் கொண்டு எம்.ஜி.ஆரை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டு போவார். ('நான் நடித்ததினால்தான் இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது' என்று நகைச்சுவையாக குறிப்பிடுவார் சாவி.)'கேளடி கண்மணி' படத்தில் பாலகுமாரன் ஆசிரம நிர்வாகியாக ஒரு காட்சியில் வந்து போவார்.'விருமாண்டி' படத்தின் இறுதிக் காட்சியில் மாலன் செய்தியாளராக வருவார்.'சொல்ல மறந்த கதை' படத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு திருமணத்தை தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுபவராக சில காட்சிகளில் வருவார்.எழுத்தாளர் பூமணி அவருடைய 'கருவேலம் பூக்களை' என்.எப்.டி.சி. உதவியுடன் திரைப்படமாக்கினார்.தங்கர் பச்சானை எழுத்தாளர் என்று அங்கீகரிக்க தயாராயிருந்தால், அவரது கல்வெட்டு என்கிற அபத்தமாக எழுதப்பட்ட கதையை அழகாக 'அழகி'யாக உருமாற்றம் செய்தார். நாஞ்சில் நாடனின் 'தலைகீழ் விகிதங்கள்' 'சொல்ல மறந்த கதையாக' வெளிவந்தது. தங்கர்பச்சானே ஒரு படத்தில் கதாநாயகனாக (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) நடித்துக் கொண்டிருக்கிறார்.(நண்பர்கள் தாங்கள் அறிந்த விவரங்களைக் கொண்டு இந்த பதிவை முழுமைப்படுத்த முயற்சிக்க வேண்டுகிறேன்)()அப்புறம்..... இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.பிரதம மந்திரியையே கா¡ட்டூன் போட்டு கேலி செய்யும் இந்த தேசத்தில் எழுத்தாளர்களையும் சற்று நகைச்சுவைப்படுத்திப் பார்ப்பது ஒன்றும் உலகமகா குற்றமில்லை என்றும் தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி இன்னும் இற்றுப் போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் எழுத்தாளர்கள் வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பார்களாயின் அவர்களுக்கு இந்த பாத்திரங்கள் பொருத்தமாயிருக்கும் என்று சிபாரிசு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் - கோயில் பூசாரி&lt;br /&gt;எஸ்.ராமகிருஷ்ணன் - போலீஸ் கான்ஸ்டபிள்&lt;br /&gt;சுஜாதா - தலைப்பாகை அணிந்த தமிழ் வாத்தியார்&lt;br /&gt;சல்மா - மகப்பேறு மருத்துவர்&lt;br /&gt;அ.முத்துலிங்கம் - பேங்க் மானேஜர்சாருநிவேதிதா - காமெடி ரவுடிஅசோகமித்திரன் - கிரிக்கெட் அம்பயர்பிரபஞ்சன் - மேஜிக் நிபுணர்பெருமாள் முருகன் - நூலகப் பணியாளர்வண்ணதாசன் - விளம்பர பட அப்பாகி.ராஜநாராயணன் - கிராமத்து கதாநாயகியின் அப்பாசிவசங்கரி - சமூக சேவகிஞாநி - பிரதான வில்லனுக்கு பின்னால் நிற்பவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-112308002865106436?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/112308002865106436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/112308002865106436'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/08/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-111824135805796826</id><published>2005-06-08T07:35:00.000-07:00</published><updated>2005-06-08T07:35:58.070-07:00</updated><title type='text'></title><content type='html'>Thank you Thangamani&lt;br /&gt;================&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்புத்தக விளையாட்டில் என்னை அழைத்திருந்தார் மீனாக்ஸ். அவருக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;எனது வாசிப்பு புத்தகங்களில் இருந்து துவங்கவில்லை. எனக்கு 3 வயதாகும் முன்னேயே ஆசிரியையாக இருந்த எனது அம்மாச்சியின் வீட்டிற்கு வந்துவிட்டேன். மிக இளவயதிலேயே விதவையானவர். வாழ்வை தன்னந்தனியாக எதிர்கொண்டு படித்து, ஆசிரியை ஆகி, தகப்பனற்ற இரண்டு பெண் குழந்தைகளை சாதியும், ஆணாதிக்கமும் காவு கேட்கின்ற சூழலில் தனது நம்பிக்கையொன்றையே ஒரே ஊண்றுகோலாகக் கொண்டு வளர்த்து படிக்கவைத்தவர். எனது வழிகாட்டியாய் இருந்து தோழியாய் பரிணமித்த அவரிடமிருந்தே எனது வாசிப்பு துவங்கியது எனலாம். அவர் தனது பாட்டனார் தொடக்கம் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை பள்ளிக்கு நடந்துபோகும் போதும், தோட்டத்தில் வேலை செய்யும் போதும், வீட்டுவேலைகளைச் செய்யும் போதும், கோவில்களுக்குப் போகும் போதும், இரவில் விளக்கை அணைத்துவிட்டு அவரது படுக்கையில் இருந்தபடியும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ஒரு எளிய, அற்புதமான, நேர்மையான மனுசி. வாழ்க்கையின் அத்தனை பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்தவர். ஆனால் அதிசயமாக வடுப்படா உள்ளம் படைத்திருந்தார். வாழ்க்கை கொண்டாடுவதற்கே என்பதை அவர் கண்டுணர்திருந்தார்.இளம் வயதிலேயே விதவையானதாலும், அப்போது தந்தையோ சகோதரர்களோ இல்லாதிருந்ததாலும் அவர் ஆணாதிக்கத்தின் முடக்கும் நிழலில் வளராத விருட்சமாய் இருந்திருக்கவேண்டும். வாழ்க்கை அவருக்கு இழைத்த கொடுமையை அவர் விகசிப்புக்கான ஒரு வாய்ப்பாக்கிக்கொண்ட ரசவாதியாக இருந்தார். நகரின் கடைதெருக்கள், கோவில்கள், திருமணவீடுகள், உறவினர் நண்பர்கள் வீடுகள், விழாக்கள் எங்கு சென்றாலும் அவரை ஆண்களும் பெண்களும் சூழ்ந்துகொள்வார்கள். அவர் இருக்கும் இடம் நகைப்பொலிகளால் நிரம்பியிருக்கும். எல்லோரையும் அரவணைத்து, குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தாது அவர் தழுவியிருப்பது தான் அதன் காரணம் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். நகரின் எல்லா ஆண்களும் பெண்களும் அவரது மாணவர்களாய் இருப்பர். வற்றாத ஒரு ஊற்றைப்போல அவர் தன்னைச் சூழ்ந்திருந்த அனைவருக்கும் நம்பிக்கையை, அன்பை, ஆறுதலை வழங்கிவந்தார்.ஒரு திறம் வாய்ந்த நேர்மையான ஆசிரியையான அவர் பள்ளியைச் சார்ந்த அடையாளங்களை மட்டும் சுமந்து மடிந்துபோகும் ஒரு வாத்தியாரம்மாவாக அல்லாமல் இறக்கும் வரை வாழ்க்கையைச் சார்ந்திருந்த உயிரோட்டமுள்ள மனுசியாகவே இருந்தார். ஆனால் வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. அவர் பெண்ணாக (அதுவும் விதவையாகவும்) இருந்த அவருக்கு, ஒரு ஒடுக்கப்பட்ட சாதிப் பெண் உட்கார்ந்து பாடம் நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்க, சாதீய சமூகம் ஒரு நாற்காலியைக் கூட பள்ளிகளில் ஆரம்பத்தில் வழங்கவில்லை. நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டியிருந்தது; குடியிருக்க வீடு சில ஊர்களில் மறுக்கப்பட்டது. பள்ளியின் ஒரு பகுதியிலேயே அவர் தங்கிக்கொண்டார். போகும் ஊர்களில் எல்லாம், படித்த, நாகரீகமான இளம்விதவையின் அனாதரவான நிலை மைனர்களையும், மிராசுகளையும் ஒரு வாய்ப்புக்காக ஏக்கத்தில் ஆழ்த்தியபோது மட்டும் அங்கு சாதி குறுக்கிடவில்லை என்று நகைச்சுவையுடன் குறிப்பிடுவார்.வயதான தாயையும், இரண்டு பெண் குழந்தைகளையும் மட்டுமே சார்பாகக் கொண்டிருந்தவர்களை சமூகம் எப்படி கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் அவர் சுருங்கிப்போய் விடவில்லை என்பதை நான் ஆச்சர்யத்துடன் உணர்ந்திருக்கிறேன். அவரது பெண்மையை அவர் தனது நேர்மையாலும், மனிதர்களை கணிக்கும் புத்தி சாதுர்யத்தாலும் காத்துக்கொண்டதுபோல, சாதியை அவரது ஆளுமையால், அன்பால் உடைத்திருந்தார். பிராமண வீடுகளில் அவரை டீச்ச்சர் என்று அழைத்து அவரது கைகளை ஆதுரத்துடன் பற்றிக்கொள்ளும் போது அந்தப்பெண்களின் கண்களில் சில சமயம் நீர்த்திரை படிவதைக் கண்டிருக்கிறேன். வாத்தியாரம்மா என்று வாஞ்சையுடன் செட்டிமார்களும், ஆச்சிகளும் அவர்களது வீட்டிற்குள் அவர் நுழையும் போதே எழுந்து நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அட என் ஈரக்கொலை வாத்தியாரம்மா என்று முக்காட்டை மறந்து அவரை தழுவிக்கொள்ளும் முஸ்லீம் வீட்டுப்பெண்கள் என்று அவர் கோவிலுக்குச் செல்லும் வழியில் அனைவரையும் கண்டுகொள்வார். ஆனால் அவர் நடைமுறையில் காணும் பக்தையும் இல்லை. அவருக்கும் கடவுளுக்கும் பரஸ்பரம் விசாரித்துக்கொள்கிற மாதிரியான உறவே இருந்ததாக உணர்கிறேன். சடங்குகள் எதையும் அவர் பெரிய அளவில் செய்ததில்லை. ஆனால் விழாக்கள் அனைத்தையும் தவறாமல் கொண்டாடிவிடுவார்.அந்த அற்புதப் பெண்மணி தனது வாழ்க்கையை, தன் பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், முன்னோர்கள் வாழ்க்கையை நுணுக்கமாக, பிரேம் பை பிரேம் என்று சொல்லாம், அப்படிச் சொல்லுவார். அதோடு இல்லாமல் ஒவ்வொருவரும் அதை எதிர்கொண்ட விதம் அதன் பின்னிருக்கக்கூடிய காரணங்கள் இவற்றையும் கூடச் சொல்லுவார். ஆனாலும் அவர் வாழ்க்கை பற்றிய முடிவான முடிவை கண்டுகொண்டதாக நம்பி இறுகிப்போய்விடவில்லை. கடைசிவரை ஒரு சிறுமியைப்போல ஆச்சர்யப்பட முடிந்தது அவரால். அப்படி அவர் இருந்ததனால் தான் அவருக்கு என்னிடம் இதையெல்லாம் சொல்லும் அளவுக்கு நட்பு பாராட்ட முடிந்ததோ என்னவோ? என்னை முதன் முதலில் முழுவதுமாக நம்பியவரும், ஏற்றுக்கொண்டவரும் அவரே.அவரே எனது முதல் புத்தகம். அதைவிடவும் சிறந்த இன்னொரு புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. அதிலும் அவரது தகப்பனார் பெருமாள் கோவிலில் வழிபடக்கூடாதென தடுக்கப்பட்டதால் ஒரு தனிக்கோவிலையே கட்டி வழிபாடுகளை நடத்தியவர். அதனால் காலப்போக்கில் சதி வழக்கொன்றால் சூழப்பட்டபோது சர் ஏ.டி. பன்னீர்செல்வம் தலையீட்டின் பேரில் சுயமரியாதைக் கட்சிக்கும், விடுதலைக்கும் அவரது இறுதிக்காலத்தில் அறிமுகமானவர். எனவே என் அம்மாச்சி சொன்ன நெடுங்கதை தமிழ்நாட்டின் ஒரு பெரும் காலப்பகுதியின் நம்பிக்கைகள், சாதி, நிலவுடமை சமூக பழக்கவழக்கங்கள், ஆண்களின் அடக்குமுறைகள், பெண்களின் மடமைகள், அரசியற் தாக்கங்கள், சுரண்டல்கள், உணவுப்பழக்கங்கள், கடவுள் வழிபாடுகள், மருத்துவ முறைகள் இப்படி எல்லா விசயங்களும் அடர்த்தியாக நிரவிய ஒரு காவியம்.பிறகு ரத்னபாலா, கோகுலம், சோவியத் நாடு என்று வீட்டில் ஆரம்பித்து நூலகங்களின் வழி எனது வாசிப்பின் நதி ஓடத்தொடங்கியது. நான் படித்த புத்தகங்களில் எனது பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப்பருவத்திலும் படித்தவைகளே அதிகம். அப்போழுது இந்திய தத்துவங்கள் குறித்த புத்தகங்களிலும், பொதுவுடமை பற்றிய புத்தகங்களிலும் எனது வாசிப்பு மையங்கொண்டிருந்தது. என் அப்பா ஒரு நூலகர். அதனால் எனது ஊரிலும் (விடுமுறையில்) நான் படித்த ஊரிலும் (பள்ளி நாட்களில்) இருந்த நூலகங்களே எனது வாசிப்புக்கான எந்தக்கட்டுப்பாடுமற்ற இடங்களாக இருந்தன. இரண்டு நூலகங்களிலும் மிகவும் நல்ல நூட்கள் இருந்ததாகவே என் நினைவில் இருக்கிறது. ஒரே நாளிலேயே இரண்டு புத்தகங்களை எடுக்கமுடியவில்லையே என்று எனக்கு ஏக்கமாய் இருந்த காலங்கள் அவை. விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் அப்பாவிடம் நூலகச் சாவியைப்பெற்று விடுமுறை நாள்களிலும் (வெள்ளி விடுமுறை) இரவுகளிலும் கதவை உட்புறம் பூட்டிக்கொண்டு படிக்கமுடியும். இல்லாவிட்டால் ஒரு ஆசிரியரின் அங்கிருக்கும் அத்தனை புத்தகங்களையும் வீட்டிற்கு எடுத்துவந்துவிடுவேன். அப்படித்தான் ஜெயகாந்தன், ஜானகிராமன், லா.சா.ரா. கா.நா.சு போன்றவர்களின் எழுத்தக்களைப் படிக்க முடிந்தது. கவிதைகளில கல்யாண்ஜி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், பசுவையா என்று நகர்ந்தாலும் கல்யாண்ஜியை எனக்குப் பிடிக்கும். சிறுகதைகளில் வண்ணதாசன் தான். (இப்போது முழுத்தொகுதியும் வந்துவிட்டது; படித்தும் விட்டேன்) அப்போது வாசிப்பு என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது என்று சொல்லலாம். படிக்கவேண்டிய புத்தகங்கள் அடுக்கடுக்காக இருந்தன. ஆனால் என்னால் நல்ல புத்தகங்களை படிக்கமுடிந்தது. சுந்தரராமசாமியின் கட்டுரைகள் தொகுப்பு அப்படி நூலகத்தில் படித்து அந்த வயதில் என்னை பாதித்த கட்டுரைகள் என்று சொல்லலாம். பிறகு ஒரு தீவிர இந்து அடிப்படைவாதியாக இருந்த காலத்தில் விவேகானந்தர்-இராமகிருஷ்ணர் (ஏறக்குறைய அனைத்து முக்கியமான புத்தகங்களையும்) புத்தகங்களோடு, மற்ற ஆர். எஸ். எஸ் சார்பான, இயக்க வெளியீடுகள் பலவற்றை படித்து வந்தேன். அதில் இருந்த தீவிரமும் ஈடுபாடுமே என்னை அதைக் கடந்து செல்லவைத்தன என்று சொல்லலாம். பிறகு மெல்ல ரஷ்ய இலக்கியங்கள் ஆரம்பமாகின. மறுபடியும் நூலகங்கள். உண்மை மனிதனின் கதையும், கார்க்கியும், கொரெலென்கோவும் என் மனமெல்லாம் நிறைந்திருந்தார்கள். சோவியத் எனக்கு மிகவும் பரிச்சயமான எனக்கு அருகில் இருந்த உலகமாக இருந்தது. நான் புத்தகங்களைச் சொல்லும் போது எனது உள்ளார்ந்த நிலைப்பாட்டையும் குறிப்பிடவே செய்கிறேன். எனது அரசியற் பார்வையை நிர்ணயிப்பது எனது ஆன்மீக தேவையாகவும், அனுபவமாகவுமே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதற்கு எனது மத்தியதர குடும்பம் மட்டுமல்லாது, எனது அம்மா வழியிலும், அப்பா வழியிலும் முன்னோர்கள் கோவில்கள், சத்திரங்கள் கட்டுவதையும், அதற்காக தமது செல்வத்தை செலவிடுவதையும் வாழ்க்கையாகக் கொண்டிருந்ததும், அம்மா வழிப் பாட்டனார் சாதி அடிப்படையிற் அடைந்த கசப்பான அனுபங்களினால் தனது இறுதிக்காலங்களில் திராவிட இயக்கக் கொள்கைளில் சரணடையவேண்டியிருந்ததும், இப்படி சமயம் பிரதிபலித்த அரசியலே காரணமாக இருந்ததையும் குறிப்பிடலாம்.இப்போது புத்தக வாசிப்பு மிகவும் குறைந்துவிட்டது. படிப்பதனால் கிடைக்கும் ஒரே நன்மை படிப்பதனால் உண்மையை தெரிந்துகொள்ள முடியாது என்று அறிந்துகொள்வதே என புத்தர் சொன்னதாக ஒருமுறை படித்தேன். அது மிகப்பெரிய உண்மை. ஆனால் புத்தகங்கள் உண்மையின் ஒவ்வொரு பக்கத்தை தெரிவிகின்றன; சொல்லமுடியாதது என்று கருதப்படுகின்ற உண்மையை அவை ஏதோ விதத்தில் பிரதிபலிப்பதன் மூலம் அதைக் காட்டித்தர முயலுகின்றன என்றும் ஒரு ஞானி சொன்னார். அதுவும் உண்மை என்று நினைக்கிறேன். அதனால் புத்தகங்களில் இருந்து அகலாது அணுகாது தீக்காய்வான் போல இருக்கிறேன். சில சமயம் படிப்பதை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இருந்திருக்கிறேன். மாதக்கணக்கில் அச்சில் வந்த எதையும் படிக்காமல் புறங்கையால் எனது படுக்கையில் கிடக்கும் புத்தகங்களை ஒதுக்கிவிட்டவாறு வாழ்ந்திருக்கிறேன். சில சமயங்களில் இரவுகளையும் பகல்களையும் புத்தங்களில் கழித்திருக்கிறேன். நூலகங்களில் காலையில் இருந்து இரவுவரை குடியாய்க்கிடந்திருக்கிறேன். கண்கள் ஓய்விழந்து கண்ணீர் கொட்டுகிறபோதும் கண்ணீரையும் திட்டுக்களையும் துடைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்திருக்கிறேன். சில சமயங்களில் புத்தகங்களை ஆற்றில் வீசி அவைகளை மற்றவர்கள் படிப்பதில் இருந்து அழித்து சில நற்செயல்களை புரிந்திருக்கிறேன். பல புத்தகங்களை என் நண்பர்களுக்கு சிபாரிசு செய்தும், கொடுத்தும் என் நண்பர்கள் அனைவரும் அந்தப்புத்தகங்களை படிக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன்.எனக்கு புத்தகங்களைப் போலவே அதை எழுதுபவனும் மிக முக்கியமானவன். தி. ஜானகிராமனை எனக்குப்பிடிக்கும். அவரது வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அவரது புத்தகங்களுக்கு வெளியிலும் நான் கண்டுகொள்ளமுடிந்தது. பாரதியையும் அப்படியே. எனக்கு மதம் போல கட்டமைக்கப்படுகிற இலக்கியத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனை நம்புகிறதனால் என்று அதற்கு காரணம் சொல்லிக்கொள்கிறேன். மனிதன் அதிகம், பெயர்களில், அடையாளங்களில் சிக்கிக்கொள்வதாக எனக்குப்படுகிறது. வழியோர மஞ்சள் பூக்களைப் பற்றி ரோஜாக்கள் அளவுக்கு யாரும் இலக்கியம் படைக்காமல் போகலாம். அதனால் அந்தப்பூக்களில் வாழ்க்கை தவழவில்லையா? அல்லது அவை எந்த மலருக்கும், பாறைக்கும் குறைந்தவையா? ஒரு நதி எனக்குக் காட்டித்தருவதையும் விட மேலான ஒன்றை புத்தகங்கள் காட்டித்தரமுடியாது என்று இப்போதும் நம்புகிறேன். மனிதர்களும் நதிகள் மாதிரிதான். வேண்டுமென்றால் இன்றைய நதிகள் மாதிரி சீரழிந்து, தேங்கிப்போய், கரையிழந்து, மாசடைந்து இருக்கலாம் அல்லது இன்னொரு பக்கம் நதி பெரும் அணைகளில் தேங்கி, ஓட்டமிழந்து ஆனால் ஆற்றல் மூலங்களாக இருப்பதுபோல மூளைகளில், செல்வத்தில், அதிகாரத்தில் தேங்கி ஆற்றல் மூலங்களாய் இருக்கலாம். எப்படி இருப்பினும் மனிதர்களும் வாசிப்புக்கு உகந்தவர்களாகவே இருக்கிறார்கள். படிக்கத்தெரிந்துகொள்வதுதான் முக்கியமானது என நினைக்கிறேன்; பிறகு மனிதர்களை படிப்பது புத்தகங்களைப் படிப்பதைக்காட்டிலும் சுவரசியமானது. அதில் இன்னும் கூடுதலான ஒரு வசதி இருக்கிறது - மொழிப்பிரச்சனை என்பது இருக்காது. மற்றபடி புத்தகங்கள், மனிதர்கள், விலங்குகள், மற்ற உயிர்கள் என்று நான் கோடுகள் கிழிப்பதில்லை. எனக்கு வெளியே கடந்து செல்லுவதும், என்னுள் கடந்து செல்வதுமான வாழ்க்கையின் எல்லா வடிவங்களையும் வாசிக்க, கவனிக்க நான் இயல்பான பேராவல் கொண்டவனாய் இருக்கிறேன். எனெனில் அவைகள் ஒவ்வொன்றும் என்னை ஏதோ ஒருவகையில் பிரதிபலித்தபடியே செல்லுகின்றன.என்னைப் பாதித்த புத்தகங்கள் மிகவும் குறைவானவையே. என்னைப் பொருத்தவரை கடந்து செல்ல ஒரே வழிதான் இருக்கிறது. அது அதிலேயே மூழ்கிவிடுவதுதான். மிக ஆழமாக, பெருவிருப்புடன் மூழ்கிவிடுபவன் விரைவில் அதைக் கடந்து செல்லுகிறான். அப்படி ஓவ்வொரு புத்தகமும், மனிதர்களும் ஓவ்வொரு காலகட்டத்துக்குப் பிறகு நின்றுவிடுகிறார்கள். நதி ஓடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. மற்றபடி சில புத்தகங்களும், மனிதர்களும் பார்கிற ஒவ்வொருமுறையும் ஒன்றைத் தருகிறவர்களாக இருக்கிறார்கள்..அப்படி இருக்கிற, வாழ்க்கையைபோல ஓடி வருகிற விசயங்களையே மேன்மையானவைகளாக நான் நினைக்கிறேன். ஏனெனில் வாழ்வின் ஆதார இழையான நகர்தலை அவைகளும் தமக்கு சாத்தியப்படுத்தியிருப்பதால். அவைகளை நேர்மையானவைகள் என்று நான் குறிப்பிடுகிறேன்.தமிழர்களின் சினிமா, தேடிச்சேர்த்த சோறு, பாலுறவுகளின் மேல் அவர்களுக்கிருக்கும் மரியாதையற்ற ஈடுபாடு, கழிப்பறைகள், கோவில் கர்ப்பகிருகங்கள், நூலகங்களில் பக்கங்களை இழந்த புத்தகங்கள், மற்றவர்களின் பண்பாட்டு விழுமியங்களை கேவலமாகக் கருதும் போலித்தனம், வாரிசுகளை பந்தயக் குதிரைகளாகப் பார்க்கும் பண்பு இவைகளின் வரிசையில் இருந்து இம்மியும் விலகாதவாறே இருக்கும் தமிழ்புத்தகங்களின் பதிப்பும். எழுதுவது தடுக்கப்பட்ட சில ஐரோப்பிய எழுத்தாளர்கள் மறைத்து மறைத்து கழிப்பறைக் காகிதங்களில் இலக்கியங்கள் எழுதினார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் புத்தகங்கள் கழிப்பறைத் தாள்களை விட மோசமான தாள்களிலே அச்சிடப்படுகிற அவலம் தமிழ் உலகில் இருக்கிறது. அது முற்றிலும் பதிப்பகங்களின் பிழையுமல்ல. முதலில் தமிழினிதான் நான் அறிந்து அதை மாற்றியது. புத்தகங்கள் அழகாக நேர்ந்தியாக அச்சிடப்பட்டிருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். அச்சு நேர்த்திக்காக நான் மிகவும் விரும்புகிற ஒரே புத்தகத்தின் பல பதிப்புகளை வாங்குகிறவன். புத்தகங்களின் உள் அட்டை, வெளி அட்டை, அதில் அச்சிடப்பட்டிருக்கும் விவரங்கள் என அதில் படிக்க, பார்க்க முடிகிற விவரங்கள், அதில் உள்ள வெற்றிடங்கள், தீர்க்கமான, வெளிறிய நிறங்கள் எழுத்துருக்கள், பேப்பர், அட்டைகளின் ஸ்பரிசம் இப்படி ஆகக்கூடிய எல்லா விசயங்களையும் ஒரு புத்தகத்தில் தேடுகிறவன். மலிவுப்பதிப்புகளை வாசிப்பதை எனது வறுமையின் காரணமாக மட்டும் பொறுத்துக்கொள்கிறவன்.என்னிடம் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன?தெரியவில்லை. வீட்டில் சுமார் 200 இருக்கலாம்!கடைசியாய் வாங்கிய புத்தகங்கள்:தமிழில்அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் - ஆ. மார்க்ஸ்கடமை அறியோம் தொழிலறியோம் - ஆ. மார்க்ஸ்அண்ணல் அடிச்சுவட்டில் - ஏ.கே. செட்டியார்பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்ஜானு சி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - பாஸ்கரன்வாடிவாசல் - சி.சு. செல்லப்பாஉப பாண்டவம் - எஸ்.ராகாடு - ஜெயமோகன்நான் கடைசியாய் இந்தியாவில் வாங்கிய புத்தகங்களை இங்கு எடுத்து வரமுடியவில்லை.ஆங்கிலம்:The Four Agreements - Don Miguel RuizDemian - Hermann HesseWhen the shoe fits - OshoThus Spake Zarathustra - Nietzscheஇன்னும் சில எடுத்துவராத புத்தகங்கள்வரும்போது பரிசாக கிடைத்தவை:Interpreter of Maladies - Jhumpa LahiriFive point some oneWhat not to do at IIT - Chetan BhagatNotes from a Big country - Bill BrysonZorba the Greek - Nikos Kazantzakisபடித்ததில் முக்கியமானது என்றால்:மோகமுள் - தி.ஜானகிராமன் (இவரது எல்லா நாவல்களும்)யமுனாவை அவர் நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களாலும் உயர்த்திக்கொண்டே போயிருப்பார். இன்னமும் இதைப் படிக்க மகிழ்வேன். ஒரு 10 வருடங்களுக்கு மேலாக தன்னை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்படுத்திக்கொண்டே வந்த புத்தகம்.குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்அருமையான எழுத்து.வண்ணதாசன் கதைகள் (முழுத்தொகுப்பு)குட்டி இளவரசன் - எக்ஸுபரிசன்னலில் ஒரு சிறுமி - (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)கன்னி நிலம் - மிகையில் ஷோலகவ்சமஸ்காரா - யூ.ஆர். அனந்தமூர்த்திவிஷ்ணுபுரம்- ஜெயமோகன் (சொல்லலாமா என யோசிக்கிறேன்)பெரியார்? - அ. மார்க்ஸ்கம்பிக்குள் வெளிச்சங்கள் - தியாகுஞானரதம் - பாரதியார்Siddhartha- Hermann Hesse( இது என்னை மிகவும் பாதித்த புத்தகம், ஒரு 12 வருடங்களுக்கு முன் இதைப் படித்த பொழுது எழுதவேண்டும் என்ற எண்ணமே எனக்கு போய்விட்டது; சொல்லமுடியாததென எண்ணியிருந்ததை இத்தனை அழகாக ஒருவன் எழுதிவிட்டபிறகு என்னத்த எழுதி... இது என் வாழ்க்கைக்கு மிக அருகில் வரும் புதினம் என்ற உணர்வு எனக்குண்டு)Thus Spake Zarathustra - NietzscheHome and the world - Tagoreஇந்த விளையாட்டுக்காய் யோசிக்கப்போய் அது என்னை எங்கெங்கோ எடுத்துச்சென்று விட்டது. நீண்ட பதிவாகிவிட்டது..நன்றிகள்!நான் எழுத அழைக்க விரும்பும் சிலர்சுந்தரவடிவேல்பெயரிலிரோசாவசந்த்அனாதை ஆனந்தன்மாண்ட்ரீசர்ரவி ஸ்ரிநிவாஸ்பத்மா அரவிந்த்அவர்களுக்கு என் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-111824135805796826?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111824135805796826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111824135805796826'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/06/thank-you-thangamani.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-111777163644824041</id><published>2005-06-02T21:04:00.000-07:00</published><updated>2005-06-02T21:07:16.456-07:00</updated><title type='text'></title><content type='html'>Balumahendra's Interview&lt;br /&gt;===================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vikatan.com/av/2005/jun/12062005/av0505.asp"&gt;அதிக குளிரை அறை முழுக்க நிரப்பிவிட்டு &lt;/a&gt;இன்னும் குளிரை அழுத்துகிறது ஏ.சி. ஒரு பைபிள்... சில கவிதைப் புத்தகங்கள். தலையில் இருக்கும் காட்டன் ஜீன்ஸ் தொப்பியும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட முகமும் பாலு மகேந்திராவை இளமையாகக் காட்டினாலும் உடம்பில் தளர்வு தெரிகிறது. ஆவி பறக்க கண்ணாடிக் குவளையில் லெமன் டீ தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பன்கூட சினிமாவில் ஒரு நடிகனா வந்து ஜெயிக்க முடியும்ங்கறதை ரஜினிக்குப் பிறகு எனக்கு உணர்த்தியது தனுஷ்தான். இந்தப் புள்ளையோட (தனுஷை இப்படித்தான் சொல்கிறார்) கண்ல அப்படி ஒரு சக்தி இருக்கு. பார்த்தா ஏதோ சாதாரண நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கார் தனுஷ். கொஞ்சம் கூர்ந்து பார்த்தா ஒரு பிரெஞ்ச் மாடலோட உடலமைப்பு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;‘அது ஒரு கனாக்கால’த்துல சீனுவா நடிச்சிருக்கார் தனுஷ். சீனு பேச விரும்பற விஷயங்களையெல்லாம் அவனோட கண்ணே பேசிடும். மனசோட தவிப்பை, காதலை, கண்ணால் பேசியிருக்கிறார் தனுஷ். தன் மகனுக்கு பெஸ்ட்டா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற தகப்பன், தன் மகனுக்காக ஒரு முடிவெடுக்கிறான். ஙிமீst ஷீயீ மிஸீtமீஸீsவீஷீஸீ-என்று சொல்வோம் இல்லியா, அது மாதிரி! ஆனால், அந்த முடிவு தன் மகனை எப்படியெல்லாம் சூறாவளியாய்ச் சுழற்றி அடிக்கிறது என்பதுதான் ‘அது ஒரு கனாக்காலம்’. இந்தப் படத்துக்குக் கதை சொல்ல நான் நம்பியது நான்கு கண்களை. இரண்டு தனுஷோடது. இரண்டு ப்ரியாமணியோடது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம தமிழ்ப் பொண்ணுங்க கேமராவிலும், கேமராவுக்கு வெளியிலும் பேரழகிகள்தான்ங்கிறதை ப்ரியாமணி நிரூபிக்கிறாங்க. மேக்&amp;அப் இல்லாத முகத்திலும் அந்தப் பொண்ணு அத்தனை அழகு! ஒரு நாள் ஷ¨ட்டிங் ஸ்பாட்ல வெச்சு, Ôநீங்க சினிமாவுக்கு வரலைன்னா என்னவா இருப்பீங்க?Õனு என்கிட்டே அந்தப் பொண்ணு கேட்டுச்சு. ‘வாத்தியார் ஆகியிருப்பேன்Õனு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும் விசிட்டிங் லெக்சரரா பல காலேஜுக்கும் போறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் என்னோட அலுவலகத்தில் சினிமா பற்றி மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கறேன். அப்புறம் ரொம்பச் சந்தோஷமா இருந்தா நானே சமையல் செய்து எல்லோ ருக்கும் பரிமாறு கிறேன்.&lt;strong&gt; நல்ல சமையல்காரன்தான் நல்ல கிரியேட் டரா இருக்க முடி யும்னு நம்ப றேன்&lt;/strong&gt;. ரொம்பச் சந்தோஷமா இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையோரமாக எங்க வீடு. கடலில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் எங்க சமையலில் வறு படும். கடல்காற்று, உப்பு, உணவுன்னு வாழ்ந்தோம். அப்பா பாலநாதன் பௌதிகப் பேராசிரியர். நல்ல சுதந்திரம் தந்தார். அப்பாவை மாதிரியே வாத்தியாராகணும், அம்மாவை மாதிரி விதவிதமா சமைக்கணும்னெல்லாம் ஆசைப்பட்டிருக்கேன். இப்பவும் ஒவ்வொரு தடவை பிளாக் டீ குடிக்கும் போதும் அம்மாவோட ஆக்சிஜன் அதுல இருக்குன்னு நம்பறேன். ஏன்னா... கசக்குற தேநீரை குடிக்கப் பழக்கினது அம்மாதானே! வாழ்க்கையிலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு!&lt;br /&gt;என் பையன் (இயக்குநர்) பாலா என்னைப் பார்க்க அடிக்கடி வர்றான். உடம்பு சரியில்லாம இருந்தப்போ உதவி பண்ணட்டுமானு அன்பா கேட்டான்! அன்பு காரணமா ஒரு பொஸசிவ் வரும்ல... அப்படி ஒரு சங்கடம் எனக்கும் அவனுக்கும். காலம் அதைத் துடைச்சுத் தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. பாலா யாரு... பாலுமகேந்திரா யாரு? ஒவ்வொருத்தருக் குள்ளேயும் ஒளிஞ்சிக் கிட்டிருக்கிற ஒரு கர்வம்... திமிர்தானே! இந்திய சினிமாவுக்குப் பாலாங்கிற அற்புத இயக்குநர் கிடைச்சிருக்கார். அது சந்தோஷமா இருக்கு. ஏன்னா, பாலாதான் நான் என்றபடி பெருவிரலை மூக்கில் வைத்து நீண்ட மௌனத்துக்குப் பிறகு,&lt;br /&gt;&lt;br /&gt;‘‘எனக்குனு சில ஆசைகள் இருக்கு. ஆண்டவ னோட அனுக் கிரஹத்துல ‘அது ஒரு கனாக்காலம்’ நல்லா வந்திருக்கு. அதிலே இசை ஞானி இளையராஜா ஒரு பாட்டு தானே எழுதி பாடி இருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;Ôகாட்டு வழி கால்நடையாய் போறதம்பி!&lt;br /&gt;&lt;br /&gt;\ பொழுதாகு முன்னே போற எடம்சேர்ந்துவிடு &amp;&lt;br /&gt;காலையிலே எளவெயிலு கடுமையில்லே! &amp;amp; ஒங்காலடியில் எடுத்துவச்சாக் கவலயில்லே!Õ&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பொழுதெல்லாம் கேட்கிற மாதிரி நான்கு பாடல்கள் நல்லா வந்திருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அது ஒரு கனாக்காலத்துக்குப் பிறகு இன்னும் மூன்றே மூன்று சினிமா எடுக்கணும். அதில் முக்கியமானது &amp; ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரையுலகில் என் இறுதி ஆசை இதுதான். ஆண்டவன் அதுவரை என்னை உயிரோடு விட்டு வைத்திருந்தால் போதும். ‘இறைவா! நான் நேசித்த சினிமாவையும் என்னையும் பிரித்து விடாதே. என்னை வாழவிடு!’ என்பதுதான் என் பிரார்த்தனை. அவ்வளவுதான்!ÕÕ என கலங்குகிறார் பாலுமகேந்திரா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-111777163644824041?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111777163644824041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111777163644824041'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/06/balumahendras-interview.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-111688514662504872</id><published>2005-05-23T14:52:00.000-07:00</published><updated>2005-06-11T10:53:00.363-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;துரை.சண்முகம் கட்டுரை - காஞ்சி விவகாரம்&lt;/strong&gt;&lt;br /&gt;=======================================                              &lt;br /&gt;&lt;br /&gt;அவா அவா செய்த கர்ம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பார்ப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் விஷயத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவர்களின் பாங்கனாக துக்ளக், தினமலர் வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளூ ஃபிலிமை பூக்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பார்ப்பன ரவுடிகள் முதலாக, ஆர்.வி., சேஷன், சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனர். பின்னே, கதாநாயகர்களைக் கைது செய்தால் பாங்கர்களுக்குப் பதறாதா?குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல ""பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்மருந்தும் உண்டோ! மயிலோ இதுவே!''பிரிந்தோர் கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பார்ப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கர்ராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொர்ணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பார்ப்பனக் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியர்களும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிர்த்துப் போராடும் போதெல்லாம் போராடுபவர்களை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்கார்டிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பார்ப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிர்த்து கார்ட்டூன் போடுவதென்ன?""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா!அண்ணா சாலை நூலுடா!இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பார்ப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தர்மம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரர் என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பார்த்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்; மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்; ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி சொல்லியிருக்கிறார், எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவர்களுடைய தர்மம். போலீசு ஸ்டேஷனில் ஒருவனை சித்திரவதை செய்தார்கள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வெளியிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பார்த்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா; வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறார்' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பூமிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஒளிவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பார்க்க: தினமலர் கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பார்ப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியார் சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பார்ப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேர்வழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சர் மாறனும், டி.ஆர். பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனர்... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சர்கள் செய்தால்? அப்படி ஓர் உரிமை அவர்களுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியூமன் ரைட்ஸ் வயலேஷன்... தாட்... பூட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt; சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மர்மம் என்ன?20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பார்க்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமர்க்களப்படுதே! ஜனாதிபதி, கவர்னர், பிரதமர் யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோர்ட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட் வளாகத்தில் பார்ப்பனத் தடியர்களும், பாரதிய ஜனதாக் கொடியர்களும் ஜெயேந்திரனுக்குப் புடைசூழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசூழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞர்களே ""இது என்ன கோர்ட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலர்; வேலூர் ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பூ, பழம், பூசை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகர்த்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பூணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்' ஆட்கள்! அபாயம்!' என்று அலறும் தினமலருக்கு, ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூர் சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறார்கள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பார்ப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?சூத்திரர் என்றால் தோலை உரிபார்ப்பான் கொன்றால் மனித உரிமை!""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சூழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறார். அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பார்ப்பனத் தடியர்களையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசூர் சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமார் என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பார்ப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவர் விசாரித்ததால், அவர் ஏற்öகனவே மனித உரிமை மீறியவர் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறார்?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரர்களிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிøடயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீர்ப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!""தர்மபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரர்கள் மனிதர்களாகக் கருதுகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதர்களாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகார்கள் வருகின்றன'' — இது சோவின் பதில்.சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவர் மேலேயே தீர்ப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யர், ரகு அய்யர் மீதெல்லாம் குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; மேலும், ""சங்கராச்சாரியார் வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றார்களா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவர்கள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாது; சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறார்: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும் பார்ப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டர் கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யார் சொல்வது உண்மை? ஜஹீரா ஷேக் மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டார் என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டார்களென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பார்ப்பனர்களின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பார்ப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது புஷ்யமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போர்த் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னர் வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்பூலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணர்களை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பார்ப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமர்களுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ?&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பத் திரும்ப, மற்றவர்கள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பார்ப்பன வரலாறு.பஸ் ஊழியர் போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலர் சேர்க்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறார்.தவிர, அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பார்ப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரர் மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞர் கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யூசன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யூட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டார்.இப்படி, பஸ் ஊழியர் தொடங்கி, சாலைப் பணியாளர், சத்துணவுப் பணியாளர், ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பார்ப்பனக் கும்பலின் வாடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பார்ப்பனியமே:சுரங்கத்திற்குள் போன பழனி போகர் திரும்ப வரவேயில்லை;அறைக்குள் சென்ற வள்ளலார் "ஜோதி' மயமானார்;சிவனைப் பார்க்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை;அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பார்ப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்; உழைக்கும் வர்க்கத்திற்குக் கட்டாயம் உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-111688514662504872?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111688514662504872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111688514662504872'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/05/blog-post_23.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-111688507515024493</id><published>2005-05-23T14:50:00.000-07:00</published><updated>2005-06-11T10:57:49.436-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;நன்றி - வே.மதிமாறன்&lt;/strong&gt;&lt;br /&gt;====================&lt;br /&gt;&lt;br /&gt;                          பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளையமடாதிபதி கைதான போதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை."என்னப்பா இது போலி சாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க' என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.ஆனால் ஜெயேந்திரன் கைதான போதுதான் மக்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள். பொது இடங்களில் இரண்டு நபர்கள் பேசிக் கொண்டால் கண்டிப்பாக அதில் ஜெயேந்திரனின் கைதும் இடம் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இந்த ஆளு இவ்வளவு கேவலமா இருக்கானே?' என்ற ரீதியில் ஆரம்பித்து தங்கள் கவலைகளை கொஞ்ச நேரம் மறந்து, ஜெயேந்திரனின் உல்லாச, சல்லாப வாழ்க்கையைப் பற்றி கை கொட்டிச் சிரித்துப் பேசி மகிழ்ந்து விட்டுத்தான் கலைகிறார்கள். (இது ஒன்றுதான் ஜெயேந்திரனால் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி) இத்தனைக்கும், சுவாரஸ்யமாகப் பேசுவதற்கு சதுர்வேதி மீது நிறைய பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் மக்களின் மனதை உற்சாகமாக வைத்திருப்பதில் ஜெயேந்திரனே முன்னணியில் இருக்கிறார். இந்த வகையில் ஜெயேந்திரனுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு.மக்களின் மனநிலை இப்படி இருக்க தினமலர் நாளிதழ் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி செய்தி வெளியிடுகிறது. கீழ்க்கண்ட இந்தச் செய்திதான் தினமலரின் அரசியல், தத்துவம், பத்திரிக்கை தர்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ஆதாரத்தோடு இருக்கிற செய்திகளை பொய் என்பதும், ஆதாரமற்ற செய்திகளை மெய் போல் வெளியிடுவதும்தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் ஆட்களை பொறுத்து ஆதரவாகவோ, எதிராகவோ வெளிப்படும். இதோ ஆதாரமே இல்லாமல் ஒரு ஆதரவு "செய்தி':""காஞ்சி சங்கரமடத்தை அழிக்க நினைக்கும் சதியின் ஒரு அம்சமாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மட்டும் அல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேபாள மன்னரை மடத்தின் தீவிர பக்தராக மாற்றியது உட்பட பல தொழிலதிபர்களையும் மடத்தின் தீவிர ஆதரவாளர்களாக்கியது ஜெயேந்திரரின் நடவடிக்கைகள்தான் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்... ஜெயேந்திரரின் இந்த நடவடிக்கைகளால் மடத்தின் புகழ் பரவியது. இதைப் பிடிக்காமல் பலர் மடத்துக்குள்ளேயே குளறுபடிகள் செய்ய ஆரம்பித்தனர். இந்தக் குளறுபடிகளைச் சரி செய்ய முயன்ற போது அவருக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின.... திடீர் திடீர் என மடத்து நிர்வாகிகளுடன் பெண்களைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது எல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... திட்டமிட்டு கொலை வழக்கில் அவரைச் சிக்க வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். மடத்தில் உள்ள கோஷ்டிகளில் சிலர் இப்போது வெளியில் உள்ள மட எதிர்ப்பாளர்களுடன் ரகசிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்துவிட்டு மடத்தைச் சூறையாடவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது...'' (தினமலர், 14.12.04)&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிக்கை வடிவம்தான் தினமலர்.கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி, லாலு பிரசாத், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இவர்களை தலைப்பிலேயே கேவலப்படுத்தி அவமானப்படுத்தி சவடாலாகச் செய்தி வெளியிடும் தினமலர், ஒரு கிரிமினலான ஜெயேந்திரனைப் பற்றி எப்படி பவ்வியமான தொனியில் தலைப்புகள் வெளியிட்டிருக்கிறது பாருங்கள்."ஜெயேந்திரர், கைதுக்கு எதிர்ப்பு. சாதுக்கள் போராட்டம்', "ஆந்திராவில் நாளை 80 லட்சம் பேர் உண்ணாவிரதம்', "ஜெயேந்திரர் கைதால் உலக அளவில் பக்தர்கள் கவலை' ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேட்டி, "சகோதரர்கள், பக்தர்கள் உருக்கமான சந்திப்பு', "வேலூர் சிறையில் ஜெயேந்திரர் சுகவீனம்', "ஜெயேந்திரர் கைதுக்கு சர்வதேச சதி காரணம்' பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டு, "வேலூர் மத்தியச் சிறையில் தரையில் உறங்கும் ஜெயேந்திரர்,' "பாம்புகள் நடுவே வாசம்' (பாவம் பாம்புகள்!)இப்படி "தானாடவில்லையம்மா தசையாடுது' என்று படிப்பவர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிற தொனியில் செய்தி வெளியிடுகிறது தினமலர்.சரி, மோசடிப் பேர்வழி இந்து மதச் சாமியார் என்பதால் ஒரு இந்துமதப் பத்திரிக்கை மத உணர்வோடு இப்படி செய்தி வெளியிடுகிறது என்று பார்த்தாலும், இதோ இன்னொரு இந்து மோசடிப் பேர்வழியைப் பற்றி அதே தினமலர் எப்படிப் பாய்ந்து பிடுங்குகிறது பாருங்கள்."சாதாரண ஆள் இல்லீங்க இந்த சதுர்வேதி', "பண்ணை வீட்டில் மாயாஜாலம்',"செக்ஸ் சாமியார் சதுர்வேதி சதிராட்டம்' இதுதான் பார்ப்பனிய தர்மம். பார்ப்பனிய ஒழுக்கம் என்பது, அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது; ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனியத்தின் இந்த மோசடி அவர்களின் இதிகாச, புராணப் புளுகுகளிலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ""இராமனின் மனைவி சீதையின் மீது பிரியப்பட்டான் ராவணன்'' இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்று தனது ஒழுக்கத்தை உலகுக்கு அறிவித்த பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் "ஃபுல் டைம் ஒர்க்' அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு கொள்வதே. அந்த உறவுக்காக எதையும் செய்பவனே இந்திரன். குறிப்பாக கடும்தவம் புரிகிற ரிஷி பத்தினிகளோடு உறவு கொள்வதில் கைதேர்ந்தவன் இந்திரன்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்திரன், அந்தக் காலத்து ஜெயேந்திரன் விஜயேந்திரன்.இந்த இந்திரனைத்தான் "தேவர்களின் தலைவன்' என்று கொண்டாடுகிறது பார்ப்பனியம். ""எங்களுக்கு மட்டுமே இந்திர சரஸ்வதி என்ற பட்டம் சொந்தமானது'' என்று பெருமைப் பட்டுக் கொள்கிறது காஞ்சி மடம்.இந்திரனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ராவணனை ஒழுக்கமானவன் என்று கூடச் சொல்லிவிடலாம். சீதை மீது மோகம் கொண்ட ராவணன் அவள் மீது தன் நிழல் கூடப் படாமல் பார்த்துக் கொண்டான். ராவணனின் முறையற்ற காதலுக்கு மரணதண்டனை வழங்கியது பார்ப்பனியம்.தினத்தந்தியின் மொழியில் சொல்வதானால் "உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்' என்கிற பாணியில் வாழ்ந்த இந்திரனின் முறையற்ற காமத்தை அங்கீகரிக்கிறது பார்ப்பனியம்.இவைகளிலிருந்து பார்ப்பனியம் சொல்லுகிற நீதி, ""பார்ப்பõனல்லாத ஒருவன் பார்ப்பானின் மனைவியை மனதால் நினைத்தாலும் அவனுக்கு மரண தண்டனை. ஆனால் ஒரு பார்ப்பான் அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு வைத்துக் கொண்டாலும், அது தண்டனைக்குரிய குற்றமல்ல.'' இதுதான் பார்ப்பனிய தர்மம். ஒழுக்கம். இதைத்தான் பார்ப்பனியப் பத்திரிக்கைகளான தினமலர், ஜூனியர் விகடன், துக்ளக் போன்றவை முதலாளித்துவ வடிவத்தில் மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;         சரவணபவன் ராஜகோபாலின் காதலைக் கண்டறிந்து "அவர் கொலை செய்தார்' என்பதைத் துப்பறிந்து வெளியிட்ட பெருமை தினமலர், ஜூனியர் விகடனையே சேரும். தனக்கு "விளம்பரம் தருகிற பார்ட்டி' என்கிற சமரசம் இல்லாமல் உண்மையைத் துப்பறிந்து உலகுக்குச் சொன்னார்கள். (அண்ணாச்சியோ தினகரன், தினத்தந்தி, நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளை விட "அவாள்' பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார். அது அவரின் சைவத் தொழிலின் ரகசியம். தனிப்பட்ட லாபத்திற்காகவே பலபேர் பார்ப்பன அடிமையாக இருப்பதின் ரகசியமும் அதுவே. இதில் புதுவரவு "தேவி' வார இதழ்.)ஆனால், "ஜகத்குரு ஒரு ஆளை ஜகத்தை விட்டே அனுப்பிவிட்டார்' என்பதை "நக்கீரன்' துப்பறிந்து தொடர்ந்து எழுதியபோதும் கூட ஜூனியர் விகடன் "துப்புக் கெட்டு'க் கிடந்தது. பிறகு லோக குரு கைதாகி லோல்பட ஆரம்பித்த பிறகே வேறு வழியில்லாமல் "கடவுள்' செய்த கொலையைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கியது. அந்தச் செய்திகளை அது இப்படி வரையறுத்துக் கொண்டு வெளியிடுகிறது. "ஜெயேந்திரன் கொலை வழக்கில் சிக்கி இருப்பதற்குக் காரணம் அவர் கொலை செய்ததால் அல்ல, சங்கர மடத்தின் கோஷ்டி தகராறால்' என்கிற பின்னணியில்.இதில் ஜூனியர் விகடன் ஜெயேந்திரன் கோஷ்டி. (இந்து என்.ராம், டி.என். சேஷன் போன்றோர் விஜயேந்திரன் கோஷ்டி.) இந்தக் கொலையில் ஜெயேந்திரனின் பங்கை அரசல் புரசலாக எழுதும் போது கூட, "வாசகர்களுக்கு ஜெயேந்திரன் மீது அனுதாபத்தை உண்டு பண்ணுவதுபோல் எழுத வேண்டும்' என்பது விகடன் ஆசிரியர் குழுவிற்கு, ஆசிரியர் இட்ட கட்டளை போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;இதோ கழுகார் சொல்லுகிறார்:""ஜெயேந்திரர் அணி, விஜயேந்திரர் அணி என்று இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக கோலோச்சி வந்த கதை இது. இந்த அணிகள் பரஸ்பரம் குழி பறிப்பு வேலையிலேயே மூழ்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குழி பறிப்பின் உச்சகட்டமாகத்தான் இன்று கொலை வழக்கு ரேஞ்சுக்கு அசிங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்."ஜெயேந்திரர் கைதாகி சிறை செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் எந்த தங்கு தடையும் இன்றி செயலாற்ற வேண்டும். தேவைப்பட்டால், ஆளும் அரசின் விருப்பங்களையும் சிக்கலில்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டது' என்கிறார்கள் இந்த சிலர்!''— இதுதான் ஜெயேந்திரன் வழக்கை ஜூனியர் விகடன் துப்பறியும் பாணி, சீனியர் விகடனும் இதே பாணிதான். அதுதான் ஆளையே மாத்திடும் (பைத்தியக்காரனா மாத்திடும்) ஆனந்த விகடன்!&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு ஆ.வி.யில் இருந்து ஒரு சில பிட்டுக்கள்:""ஜெயேந்திரரின் ஜாதகக் கட்டங்களைப் புரட்டிப் பார்த்த விசுவாசிகள், புது விஷயம் சொல்கிறார்கள். "பெரியவாளுக்கு எட்டுல சனி, டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் கஷ்டமெல்லாம் பனியாப் பறந்துடும். அவரை இந்தப் பாடு படுத்தறவாளுக்கு வர்ற ஜனவரியிலிருந்து கஷ்ட தசை ஆரம்பம். இன்றையநிலைமை புது வருஷத்தில் அப்படியே தலைகீழாகும்' என்கிறார்கள்.இது எப்படி இருக்கு?இந்தப் பாணியிலேயே எழுதிகிட்டே வந்து, இன்னும் கொஞ்ச நாளில் "சங்கரராமனை ஆள் வைத்துக் கொன்னது அவரு சம்சாரம்தான்'னு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன்னா, அதான் ஆளையே மாத்தற ஆனந்த விகடனாச்சே!&lt;br /&gt;&lt;br /&gt;    ஜெயா டி.வி.யிலே "அரிகிரி அசெம்பிளி'ன்னு ஒரு அநாகரிகமான நிகழ்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள். அந்த அநாகரிகமான நிகழ்ச்சியிலே ரெண்டு பைத்தியங்கள் நிகழ்ச்சி நடத்தியதையும் கவனித்திருப்பீர்கள். அதுல ஒண்ணு மொட்டை அடிச்சிக்கிட்டு இருக்கும். அது பேரு பாஸ்கி. இந்தப் பைத்தியம் ஆனந்தவிகடனில் சோகமான மனநிலையோட ஒரு நகைச்சுவைப் பக்கம் எழுதியிருக்கு. இதோ அது செய்த "ஜாலி கற்பனை':"போலீஸ் விசாரணை' என்கிற பேரில் ஜெயேந்திரர் மீது கேஸ் மேல் கேஸ் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்! போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல் கீழேவரும் கேஸ்களில் கூட அவரைச் சந்தேகப்படுவார்களோ, என்னவோ?!மடத்துக்குத் தேவையான சந்தன சப்ளையில் வீரப்பன் மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரர், வீரப்பனைத் தீர்த்துக் கட்டிவிட்டார் என்கிறது எஸ்.டி.எஃப் போலீஸ்!"ராஜீவ் காந்தியைக் கொன்ற தற்கொலைப் படைப் பெண்மணி தணுவின் கையில் இருந்த பூமாலைகூட ஜெயேந்திரர் வழக்கமாகப் பூ வாங்கும் பூக்காரி தொடுத்ததோ?' என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.இவை தவிர மகாத்மாகாந்தி, ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி போன்றோர் கொல்லப்பட்ட வழக்குகளில் கூட ஜெயேந்திரருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று இன்டர்போல் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;இது நகைச்சுவையாம்! இதைப்படிக்கிற சங்கரமட பக்தருக்கு ஜெயேந்திரன் மீது பரிதாப உணர்வு வரும். நமக்கு கோபம் வருகிறது. இந்த எழுத்தை அது "ஜாலியாக கற்பனை' செய்ததாம். இந்த ஜாலியில் பாஸ்கியின் ரத்தக் கண்ணீர் தெரிகிறது.சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், ஆனால் இவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார்.இந்தக் காரியப் பைத்தியம் பாஸ்கி வேறு யாரும் அல்ல. தலைவர் ஸ்டாலினைப் பற்றி கேவலமாக எழுதிய, நம்ம "கக்கா' மதன், அதான் "ஆய்' மதன் இவருக்கு அத்திம்பேர்!&lt;br /&gt;&lt;br /&gt;     மொட்டைத்தலை என்றவுடன்தான் "சோ'வின் யோக்யதை ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயேந்திரன் கைதில் "சோ' என்ன சொல்லியிருப்பார்? அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே "அவர் கருத்து இதுவாகத்தான் இருக்கும்' என்பது முன் முடிவான ஒன்று. கழுதை வாய்திறந்தால் குயில் போலவா கூவும்?ஆனாலும், துக்ளக்கைப் படிக்கும்போதுதான் ஜெயேந்திரன் கைதில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. அதாவது "சோ'வுக்கு பைத்தியம் பிடித்திருப்பது.சங்கரமடம் அவரின் உயிராக இருக்கிறது. இப்படி ஒரு கைது நடந்திருப்பதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி சோவுக்கில்லை. பதட்டத்தோடு இருக்கிறார். பதட்டத்திலும் அவர் கருணாநிதியை வசைபாடுவதை, பெரியார் கொள்கைகளை திட்டித் தீர்ப்பதை நிறுத்தவில்லை. (பார்ப்பான் பைத்தியக்கார நிலையில் இருந்தாலும் பெரியாரைத் திட்டுவதில் மட்டும் தெளிவு இருக்கும்போல.)ஜெயேந்திரனைக் கைது செய்தது ஜெயலலிதா. சோ திட்டுவது கருணாநிதியை. (சோவிற்கு கடா பல்லில் வலி வந்தால் கூட கருணாநிதி சிரித்து சந்தோசமாக இருக்கிறார், அதனால்தான் எனக்குப் பல் வலிக்கிறது என்பார் போலும்.)"ஜெயேந்திரன் கொலை செய்திருக்கமாட்டார்' என்று உறுதியாக நம்புகிறார். ஆனாலும் "அரசு ஆதாரமில்லாமல் கைது செய்திருக்காது' என்றும் மிரளுகிறார். சோ குழம்புகிற குழப்பத்தில் அவர் மொட்டைத் தலையில் "மயிரே' முளைத்து விடும்போல் தெரிகிறது. அதனாலேயோ என்னவோ அவரின் "கேள்வி பதில்' பகுதி வழக்கத்தைவிட அருவெறுக்கத்தக்க நிலையில் கேவலமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வி.எஸ். கவிதா மீனா, செட்டிப்புலமகே: ஜெயேந்திரரை, சங்கரராமன் தொடர்ந்து ப்ளாக் மெயில் செய்து மிரட்டிக் கொண்டே இருந்திருக்கிறாரே! அது குற்றமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ப: பத்திரிகைச் செய்திகளை வைத்துப் பார்க்கிறபோது, சங்கரராமன் செய்தது "கிரிமினல் இன்டிமிடேஷன்' என்கிற குற்றத்திற்கான பிரிவின் கீழ் வரக்கூடிய தன்மை படைத்த செயல் என்று கூறலாம். இதைத் தவிர, வேறு பெயரில் மறைந்து கொண்டு, சம்பந்தப்பட்ட கடிதங்களில் சிலவற்றை எழுதியதால், அது தனிப் பிரிவின் கீழ் வரும். இரண்டுமே குற்றங்கள். ஒவ்வொரு குற்றத்திற்கும், இரண்டாண்டு காலம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால் சங்கரராமன் உயிருடன் இல்லாதபோது, இது சட்டத்தை அறிந்து கொள்கிற சமாச்சாரமே தவிர, நடவடிக்கை கேட்கிற கோரிக்கை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செஞ்சதுக்கு என்னய்யா தண்டனைன்னு கேட்டா, இவரு ப்ளாக் மெயிலுக்கான தண்டனையைப் பத்தி எழுதுறாரு. அப்போ சங்கரராமன் என்ன தற்கொலையா செஞ்சிக்கிட்டாரு? சோவின் இந்த வக்கிரத்தைப் படிக்கும்போது நமக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஒரு திரைப்படத்தில் சிவாஜி, சோவைப் பார்த்துப் பாடுவார், ""போட்டாளே, போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே'' என்று. இந்தப் பாடல் சோவின் கதாபாத்திரத்தைப் பார்த்துப் பாடிய பாடலாகத் தெரியவில்லை.ஜெயேந்திரன் கம்பி எண்ணுகிறார்; சோ பைத்தியக்காரனாகி இருக்கிறார். மக்கள் கை கொட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள். ஒரு சம்பவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதில்லை. சிலர் உளறுவார், பலர் மகிழ்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒன்று: பக்தர்கள் ஜெயேந்திரனை நம்ப வேண்டாத நேரத்தில் நம்பினார்கள். நம்ப வேண்டிய நேரத்தில் நம்ப மறுக்கிறார்கள். ஜெயேந்திரனை நாம் எப்போதுமே நம்பியதில்லை. ஆனால் இப்போது நம்புகிறோம். அவர் இந்தக் கொலையைச் செய்திருப்பார். இன்னும் இதற்கு மேலே பல கிரிமினல் வேலைகளையும் செய்திருப்பார்."அக்கிரகாரத்து அழகிகள்'பார்ப்பனியம் மற்ற சாதிக்காரர்களுக்குச் செய்த தீங்கை விடவும் தன் சொந்தச் சாதிப் பெண்களுக்குச் செய்த தீங்கு சொல்லித் தீராது. விதவைகளை அவமானப்படுத்தி, கொடுமைப்படுத்தி, உயிரோடு கொளுத்தியிருக்கிறது பார்ப்பனியம். கங்கை நதியின் வற்றாத தன்மைக்குக் காரணம், அதில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட பார்ப்பன விதவைப் பெண்களின் கண்ணீரே என்றாலும் மிகையாகாது.சிறுமிகளை கிழட்டுப் பார்ப்பானுக்கு மணம் முடித்துக் கொடுமைப்படுத்தியது பார்ப்பனியம். பார்ப்பனத் திருமணங்களில் பெண்ணை தந்தை தன் மடியில் உட்கார வைத்துத் "தாரை வார்த்துக் கொடுப்பது' பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கம்தான். சிறுமி மணமேடையில் அமராமல் விளையாட்டுத்தனமாக எழுந்து ஓடி விடாமல் தடுக்க, தந்தை மடியில் உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டதனால் ஏற்பட்ட பழக்கம் அது."ஆணுக்குப் பெண் மட்டமில்லை'யென்று பர்ப்பனப் பெண்கள் கருதலாம். உண்மையும் அதுதான். அவர்கள் பிரதமர் பதவியில் கூட அமர முடியும், ஆனால் சங்கராச்சாரியாக முடியாது. ஏன் சங்கர மடத்தில் ஒரு குமாஸ்தா வேலை பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடையாது. ""வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்'' என்பது ஜெயேந்திரனின் "அருள் வாக்கு'. பார்ப்பனியம் என்பது மற்ற சாதியினரை மட்டுமின்றி பார்ப்பனப் பெண்களையும் கொடூரமாக ஒடுக்கி வந்திருக்கிறது. இந்தக் கணம் வரை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும், பார்ப்பனியத்திற்கு எதிரானவராகத்தான் இருப்பார். இருக்க வேண்டும். இதற்கு மேலும் பார்ப்பனப் பெண்கள் ஜெயேந்திரனுக்காக உண்ணாவிரதமிருந்தால், அவர்களை "அக்கிரகாரத்து அழகிகள்' என்றுதான் அழைக்க வேண்டி வரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=12213354&amp;postID=111678092735205919"&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-111688507515024493?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111688507515024493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111688507515024493'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/05/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-111471600381801583</id><published>2005-04-28T12:18:00.000-07:00</published><updated>2005-04-28T12:20:03.823-07:00</updated><title type='text'></title><content type='html'>ச(க)ளைக்காத சுஜாதா(த்)தா&lt;br /&gt;&lt;br /&gt;மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.&lt;br /&gt;ÔÔயு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!ÕÕ என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோÕÕ என்றேன்.&lt;br /&gt;ÔÔஎதுக்குப்பா?ÕÕ&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔதொடுங்களேன்!ÕÕ&lt;br /&gt;&lt;br /&gt;சற்று வியப்புடன் தொட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔமத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!ÕÕ என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.&lt;br /&gt;ÔÔரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து...ÕÕ&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔஇது என்னப்பா ட்ரிக்கு?ÕÕ என்று அப்படியே செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔஉங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!ÕÕ என்றேன்.&lt;br /&gt;அசந்து போய், ÔÔகை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?ÕÕ&lt;br /&gt;ÔÔஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!ÕÕ என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.&lt;br /&gt;மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். Ôரம்யா கிருஷ்ணன்Õ என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் Ôஜகதலப்ரதாபன்Õ சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி&amp;யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.&lt;br /&gt;மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் Ôஆபிச்சுவரிÕ பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. ஜிஷீபீணீஹ் மி ணீனீ ணீறீக்ஷீவீரீலீt, tலீணீஸீளீ நிஷீபீ!&lt;br /&gt;சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், Ôசிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!Õ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் ஜீக்ஷீஷீரீக்ஷீமீssவீஸ்மீ நீஷீனீஜீக்ஷீஷீனீவீsமீs (படிப்படியான சமரசங்களால் ஆனது).&lt;br /&gt;இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.&lt;br /&gt;தி.ஜானகிராமனின் Ôகொட்டு மேளம்Õ கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பலம் இணைய (ஷ்ஷ்ஷ்.ணீனீதீணீறீணீனீ.நீஷீனீ) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... Ôநாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?Õ என்று.&lt;br /&gt;நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... Ôநாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!Õ என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். ÔஆÕ கதையைப் படித்துவிட்டு, Ôஎன் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்Õ என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் என்னுடைய நோபெல்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-111471600381801583?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111471600381801583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111471600381801583'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/04/blog-post_28.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-111299702414975746</id><published>2005-04-08T14:45:00.000-07:00</published><updated>2006-04-04T16:17:20.350-07:00</updated><title type='text'></title><content type='html'>எழுத்தாளர் பா.ராகவன் வாங்கி அளித்து உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;1. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்&lt;br /&gt;2. பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன்&lt;br /&gt;3. அது ஒரு நிலாக்காலம் - ஸ்டெல்லா ப்ரூஸ்&lt;br /&gt;4. மனப்பத்தாயம் - யுகபாரதி&lt;br /&gt;5. தரையில் இறங்கும் விமானங்கள் -இந்துமதி&lt;br /&gt;6. கொரில்லா - ஷோபா சக்தி&lt;br /&gt;7. முதல் ஆட்டம் - இரா.முருகன்&lt;br /&gt;8. ஒரு அகதி உருவாகும் நேரம் - கருணாகரமூர்த்தி&lt;br /&gt;9. ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் - இரா.முருகன்&lt;br /&gt;10. காதுகள் - எம்.வி.வெங்கட்ராம்&lt;br /&gt;11. ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா&lt;br /&gt;12. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் கள்ளிக்காடு&lt;br /&gt;13. கோபல்ல கிராமத்து மக்கள் - கி.ரா&lt;br /&gt;14. ரப்பர் - ஜெ.மோ&lt;br /&gt;15. ஜேஜே சில குறிப்புகள் - சு.ரா&lt;br /&gt;16. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்&lt;br /&gt;17. குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்&lt;br /&gt;18. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்&lt;br /&gt;19. புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்&lt;br /&gt;20. ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் - இரா.முருகன்&lt;br /&gt;21. மந்திரவாதியும் தபால் அட்டையும் - இரா.முருகன்&lt;br /&gt;22. ரத்த உறவு - சிங்காரம்&lt;br /&gt;23. சங்கச்சித்திரங்கள் - ஜெ.மோ&lt;br /&gt;24. மாய நதிகள் - ஸ்டெல்லா ப்ரூஸ்&lt;br /&gt;25. கல்லுக்குள் ஈரம் - ரா.சு.நல்லபெருமாள்&lt;br /&gt;26. சைக்கிள் முனி - இரா.முருகன்&lt;br /&gt;27. மெல்லினம் - பா.ராகவன்&lt;br /&gt;28. புவியிலோரிடம் - பா.ராகவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/index.cgi"&gt;காமதேனு.காம்&lt;br /&gt;&lt;/a&gt;============&lt;br /&gt;29. அண்ணா - என்.சொக்கன்&lt;br /&gt;30. காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை - நாகூர் ரூமி&lt;br /&gt;31. அம்பானி ஒரு வெற்றிக் கதை - என்.சொக்கன்&lt;br /&gt;32. மாலன் சிறுகதைகள்&lt;br /&gt;33. வாத்தியார் - ம.வே.சிவகுமார்&lt;br /&gt;34. ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா&lt;br /&gt;35. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்: முதல் தொகுதி&lt;br /&gt;36. பால்யநதி - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;37. ஜி. நாகராஜன் சிறுகதைகள்&lt;br /&gt;38. நெடுங்குருதி - எஸ்.ரா&lt;br /&gt;39. ஜனகணமன - மாலன்&lt;br /&gt;40. டாலர் தேசம் - பா.ராகவன்&lt;br /&gt;41. சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை - என்.சொக்கன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vikatan.com/Publication/new_pub/default.asp"&gt;விகடன் பிரசுரம் - மார்ச் 8&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;42. காதல் படிக்கட்டுகள்&lt;br /&gt;43. இவன்தான் பாலா&lt;br /&gt;44. துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;45 கற்றதும் பெற்றதும்&lt;br /&gt;146. கற்றதும் பெற்றதும் 2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/index.cgi"&gt;காமதேனு - மார்ச் 8&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;47.நதிமூலம் - மணா&lt;br /&gt;48.தெப்பக்கட்டை - யுகபாரதி&lt;br /&gt;49.ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் -புஸ்பராஜா&lt;br /&gt;50.தேசத்துரோகி - ஷோபா சக்தி&lt;br /&gt;51.அகி - முகுந்த் நாகராஜன்&lt;br /&gt;52.சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன்&lt;br /&gt;53.ஜெயமோகன் சிறுகதைகள் 280&lt;br /&gt;54.ஜெயமோகன் குறுநாவல்கள் - முழுத்தொகுப்பு&lt;br /&gt;55.ஒரு புளியமரத்தின் கதை - சு.ரா&lt;br /&gt;56.கறுக்கும் மருதாணி - கனிமொழி&lt;br /&gt;57.காகித மலர்கள் - ஆதவன்&lt;br /&gt;58.அள்ள அள்ளப் பணம் சோம. வள்ளியப்பன்&lt;br /&gt;59.காட்டிலே ஒரு மான் - அம்பை&lt;br /&gt;60.தோட்டியின் மகன்- தகழி சிவசங்கர பிள்ளை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-111299702414975746?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111299702414975746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/111299702414975746'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/04/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-110490230664397068</id><published>2005-01-04T21:15:00.000-08:00</published><updated>2005-01-04T21:18:26.643-08:00</updated><title type='text'></title><content type='html'>அன்புள்ள மரத்தடி அன்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;'காதலும் கவிதையும்' என்ற தொடரினை ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தொடரலாம் என்று உள்ளேன். இதுதொடர்பாக சில கருத்துகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. இன்றைய தேதியில் சுனாமி தவிர வேறு எது குறித்தும் எழுதுவது 'மனிதத் தன்மையற்ற செயல்' என்று தமிழ் இணையச் சூழலில் கருதப்படுகிறது. &lt;strong&gt;சுனாமி குறித்து எழுதுவதில் கூட, தனது சோகத்தை 'வெற்றுவார்த்தைகளால்' வெளிப்படுத்திக் கொண்டு இருக்காமல், 'நான் இவ்வளவு பணம் அனுப்பியுள்ளேன்' அல்லது 'நான் இந்த வகைகளில் உதவி செய்து கொண்டிருக்கிறேன்' என்று எழுதுவது மட்டுமே மதிக்கப்படுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. உதவி செய்பவர்களையும் அதை வெளியில் சொல்லி மற்றவர்களை உதவத் தூண்டுபவர்கள் மேலும் எனக்கு மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. &lt;strong&gt;அதே சமயம் இது குறித்து எழுதாதவர்கள் அல்லது வேறுவிஷயங்கள் எழுதுபவர்கள் எல்லோரும் உதவியே செய்யாதவர்கள் போலவும், மனிதத்தன்மையற்ற, ஈவிரக்கமற்றமிருகங்கள் என்பது போலவும் சில சித்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.&lt;/strong&gt; (நாய்,எருமை, 'இவர்களையெல்லாம் சுனாமி கொண்டு போகாமல் போனதே' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்இதற்கு நல்ல உதாரணம்.)&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் ஒரு இயல்பான மனிதன் (normal, sympathetic human being) என்ற வகையில், சமீபகால வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய பேரழிவு இந்த சுனாமித் தாக்குதல் என்ற வகையில், நானும் இந்தத்துயர நிகழவால் பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் செய்தேன்.இன்னும் அடுத்து வரும் காலங்களில் உதவிகள் தேவைப்பட்டால் செய்வேன் என்றும் தகுந்த நபர்களிடம் தெரிவித்துஉள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒரு துயரத்திலிருந்து மீள ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு கால அளவுகள் இருக்கும். வெவ்வேறு வழிகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் துயரத்திலிருந்து மீள இயலும். தனிப்பட்ட துயரங்களிலிருந்து கூட இது வரைஎன்னை மீட்டெடுத்துக்கொள்ள நான் கையாண்ட வழிகள் பிரார்த்தனையும் வாசிப்பும் எழுத்தும். அதையேஇப்போதும் செய்தேன். (இவை, செய்த உதவிகளுக்கு அப்பால் என்பதறிக.)&lt;br /&gt;&lt;br /&gt;5. இன்னல்களும் துயரங்களும் வந்த போதும், அவற்றுக்கு செய்ய வேண்டியன செய்த பிறகு, தனது சொந்தவாழ்க்கைக்குத் திரும்பி மீண்டும் வாழத் துவங்குவது மனித இனத்தின் தனிப்பட்ட சிறப்பு என்பது எனது நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஓரளவு சகஜ நிலைக்கு 'நான்' திரும்பி விட்டதனால் காதலும் கவிதையும் தொடரினை மீண்டும்தொடர்வதே எனக்குத் தெரிந்து நியாயமான செய்கையாகப் பட்டது. இதைச் செய்வதனால் சுனாமித்துயரங்களையோ அல்லது அவற்றுக்குச் செய்ய வேண்டிய நிவாரணங்களையோ யாரும் மறந்து விட்டதாக ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;7. இந்த விளக்கங்களுக்கும் பின், &lt;strong&gt;சிலரது குறுகிய moral standards-ன் படி நான் மனிதத் தன்மையற்றவன்என்று கருதப்பட்டால்&lt;/strong&gt;, அதற்கு நான் செய்யத் தக்கது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;'எனக்கு மனிதத்தன்மை உண்டு' என்று இப்படி விளக்கமளித்து தெரிவிக்க வேண்டிய நிலை தமிழ் இணையச்சூழலில் ஏற்பட்டிருப்பது&lt;/strong&gt;, சுனாமி அளவுக்கு இல்லையென்றாலும் &lt;strong&gt;இதுவும் என் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;-- மீனாக்ஸ்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8065615-110490230664397068?l=thanivalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/110490230664397068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8065615/posts/default/110490230664397068'/><link rel='alternate' type='text/html' href='http://thanivalai.blogspot.com/2005/01/blog-post.html' title=''/><author><name>Mookku Sundar</name><uri>http://www.blogger.com/profile/10159538912900527395</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://weblogimages.com/static/106770.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8065615.post-110322645918904354</id><published>2004-12-16T11:47:00.000-08:00</published><updated>2005-04-08T14:51:37.176-07:00</updated><title type='text'></title><content type='html'>நாத்திகம் பயில்&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொருமனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள்குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தைவழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. நாத்திகம் மனி
