<$BlogRSDURL$>

Wednesday, January 25, 2006

Thanks Meenaks - congrats 

வந்தாள், கண்டாள், வென்றாள்
======================
(அல்லது)

போனேன், பார்த்தேன், பூத்தேன்
========================

உன் மேல் கவிந்திருக்கும்
மௌனத்தின் நீர்நிலை மேல்
பார்வைகளால் கல்லெறிகிறேன் நான்.
ஒற்றை வளையமாய்
ஒரு புன்னகையைத் தோற்றுவித்து
உன்னுள்ளே மூழ்கடிக்கிறாய் நீ.

என் முன்கதைச் சுருக்கத்தை
உன் காதருகே
உலவ விடுகிறேன் நான்.
நாம் இருவருக்கான எதிர்காலக் கனவை
அறையின் கூரையெங்கும்
பரவ விடுகிறாய் நீ.

நான் எழுதியிருக்கும்கவிதைகள்
பிடிக்குமென்கிறாய் நீ.
என் எதிரிலிருக்கும்கவிதையைப்
பிடிக்குமென்கிறேன் நான்.

உன் எதிர்பார்ப்புகளின் தவிப்பும்
என் விருப்பங்களின் இருப்பும்
நேர்கோட்டில் சந்திக்கின்றன.
என் கற்பனைகள் ஒவ்வொன்றும்
உன் கண்களில் தத்தம்
முகம் பார்த்துக் கொள்கின்றன.

உன் குறும்புப் பார்வைகள்
என் மீசையைப்பிடித்திழுத்து விளையாடுகின்றன.
இதுவரை
தனித்தனியே
தேடிக் கொண்டிருந்த
நமக்கான பிரபஞ்ச முடிச்சை
சேர்ந்து கண்டுகொண்ட பரவசத்தில்
மிதக்கிறோம் நாம்.

சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும்,
சில தினங்களுக்குப் பிறகும்,
என் காதுகளில்இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது,
என்னைப் பிடித்திருப்பது பற்றிய
எனது கேள்விக்கு
நீ பதிலாய்த் தந்த
ஒரு சொல்,
ஓர் எழுத்து,
ஓர் ஓசை,
"ம்..!"

-- மீனாக்ஸ்

பின் குறிப்பு: ஹி.. ஹி..!! ஆமாமுங்கோ..!!

நன்றி : மீனாக்ஸ்

This page is powered by Blogger. Isn't yours?